Tuesday, 19 January 2016

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை (தமிழகம் தவிர)

இந்தியா இயற்கை வேளாண்மையை முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறது. 
அதற்கெல்லாம் முன்னோடியாக சிக்கிம் இருக்கிறது நாட்டின் பிரதமர் சொல்லுவதாக இன்றைய செய்தித் தாள்கள் சொல்லுகின்றன.

தமிழகம் என்பது விவசாய பூமி. 
இங்கே வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நிலத்தை பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தலாம். 
அனல் மின் நிலையங்கள் ... 
அணு மின் நிலையங்கள் – 
ஸ்டெர்லைட் நிறுவனம் ... 
மீத்தேனை உருவ ஒரு பகுதி – 
சோத்துக்கே வழியில்லைஎன்றாலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கேன சில பகுதி - நிலக்கரி தோண்ட ஒரு பகுதி – 
தமிழகத்திற்குத் தண்ணீர் வரும் முன்னே தடுக்க அனைத்துப் புறங்களிலும் அணைகள் – 
நீர்நிலைகள் அருகிலேயே நீரை உறிஞ்சி எடுக்கும் கார் கம்பெனிகள் - உழவுக்கு உதவும் காளைகள் இல்லாமல் செய்யும் யுத்தி ... 
நாட்டுக் காளைகள் இல்லையென்றால் நாட்டுப் பசுக்கள் இல்லை – 
நாட்டுப் பசுக்கள் இல்லையென்றால் 
சாணம் இல்லை – இயற்கை உரம் இல்லை – 
தமிழ் நாட்டில் வேளாண்மையும் இல்லை – இயற்கை வேளாண்மையும் இல்லை – 
இனி சிக்கிம் மட்டும் தான் இயற்கை வேளாண்மையில் இருக்கும்!

இந்தியா முழுவதும் இயற்கை வேளாண்மை வளர வாழ்த்துகிறேன்

Thursday, 14 January 2016

பொங்கல் வாழ்த்துக்கள்


எனது கணினியில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட தால்
புகைப்படம் எடுத்து தரவேற்றம் செய்ய வேண்டியதாகி விட்டது.


உழவர் திருநாள் வாழ்த்துக்கள்