Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Sunday, 19 May 2013

ஐ. பி. எல் ஸ்பெஷல்


  • இருபது ஓவர் மாட்சில் ஒரு பாலைக் கூட அடிக்காமல் விட முடியாது. அப்படி ஏதாவது ஒரு பாலை மட்டையாளர் அடிக்காமல் விட்டால் --- அப்போது சப்பாத்தி ஷாட் ஸ்பெஷலிஸ்ட் ரவி சாஸ்த்ரி சொல்லும் காமெண்டரி உங்கள் காதில் தேனாக வந்து விழும்.  அதுவும் சாஸ்த்ரி வீட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் கல்லெறிந்த செய்தி தெரிந்தவர்களுக்கு மட்டும். எப்படித்தான் பழசெல்லாம் மறந்துட்டுப் பேசுறாங்களோ?
  • ஸ்ரீஷாந்த் பஜ்ஜு விடம் அடி வாங்கிய வீரன். பல சமயங்களில் அழுது அழுதே கொஞ்சம் அனுதாபம் சம்பாரித்துக் கொண்ட இந்தப் பையன் கொஞ்சம் அழுகுணி ஆட்டம் ஆடி சம்பாரிக்கலாம் என்று பார்த்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கான தண்டனைதான் ஹர்பஜன் அவனை அறைந்தது. இதற்கு மேல் அவருக்கு எதுவும் தண்டனை கிடைக்காது. மிஞ்சிப் போனால் விளையாடத் தடை சொல்வார்கள். அதனாலென்ன இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் --- அதில் சேர்ந்து ஒரு எம். பி. ஆகிவிட மாட்டாரா என்ன?
  • விஜய்  மால்யா எம். பி. தனது கிங் பிஷேர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அதன் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளப் பாக்கி செலுத்தவில்லை. ... ஏறக்குறைய 6,500 கோடி கடன்களை வசூல் செய்யும் வழி தெரியாமல் இருக்கின்றன வங்கிகள். மல்யாவுக்கு சொத்து மதிப்பி ஏறக்குறைய 40, 000 கோடிகளுக்கு மேல் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், அரசும் ஒன்னும் செய்ய முடியவில்லை, வங்கிகளும் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஊழியர்களும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரும் அவரது புதல்வரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள் - ஐ. பி. எல்லில். 
  • வங்கிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது எஸ் பேங்க் மாக்சிமம். அவர்கள் ஒரு மேட்சுக்கு ஒரு லட்சம் என்று ஏறக்குறைய 77 போட்டிகள்.... எப்படி ஒரு வங்கிக்கு இவ்வளவு பணம் இந்த ஒரு மாத விளம்பரத்தில் மட்டும் செலவு செய்ய முடியும். பெப்சி ... வோடபோன் ... ஸ்டார் ப்ளஸ் ... விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு பணம் என்றால், அவர்களின் இலாபம் எவ்வளவு.... வி ஆர் ஸ்லேவ்ஸ் ஆப் தி அட்வேர்டைஸ்மென்ட்ஸ்... 
  • நடு கிரவுண்டில் சண்டையிட்டுக் கொண்ட கம்பீரும் கோலியும் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்பது சரியாகவே தோன்றியது. ஒருவேளை கொல்கொத்தா வெற்றி பெற்றால் பெங்களூரு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று நினைத்தாரோ கம்பீர். சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று கோலிக்கு கிலி உண்டாக்கி விட்டார்கள். வருடத்திற்கு என்பது கோடிகள்  என்று ஐந்து வருடத்திற்கு ஹைதராபாத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது சண் டி. வி. இறுதி மாட்சில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கும் மும்பைக்கும் இடையே இருக்கலாம்... 
  • லலித் மோடி லலித் மோடி என்று  ஒருவர் பிக்சிங் செய்து இந்த ஐ. பி. எல்லை மிகவும் பிரபலப் படுத்தியவர்.... அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் லவுட்டியவர்... இன்னமும் அவருக்கே என்ன ஆச்சுன்னு தெரியலை... ஆனா ஏன் ஸ்ரீ சாந்த் கேசுல டெல்லி போலிஸ் இவ்வளவு அக்கறை காட்டுதுன்னு தெரியலை... வேற ஏதாவது ரேப் கேசு வந்து அதை மறைக்க இதைச் செய்யுறாங்களோ அல்லது இறுதிப் போட்டியில் நடக்க இருக்கும் பிக்சிங்கை மறைக்க முன்பே நடவடிக்கை என்ற பெயரில் ரசிகர்களை இன்னமும் உண்மையிலேயே உண்மையான மாட்ச்   நடக்கும் என்று நம்ப வைப்பதற்கா? 

Wednesday, 8 August 2012

ஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்

௦ ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நாடாகவும் அதல பாதாளத்தில் இருக்கிற நாடு கிரீஸ்: ஏறக்குறைய கடைசியில் இருக்கிற அந்த நாடு ஒலிம்பிக் தொடக்க விழாவில் [எல்லா ஒலிம்பிக்குகளிலும்] முதலாவது வந்து தொடங்கி பொருளாதார பாதாளத்திற்கு பாலன்ஸ் செய்கிறார்கள்... ஏனெனில் முதலில் வருவது பெருமை.  

௦ ஒலிம்பிக் விழாவில் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய விடயம் - ஐ. நா. வின் பட்டியலில் இடம்பெறாத நாடுகளைக் கூட ஒலிம்பிக் ஏற்றுக்கொண்டிருப்பது  மிகவும் பாராட்டப் படவேண்டியது.  பாலஸ்தீனம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டப் பட வேண்டியதுதானே. ஈழம் சகோதர சகோதரிகள் - முன்னமேயேஒலிம்பிக் விழாவில் பங்கேற்று இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாடு கடந்த தமிழீழ அரசிலிருந்து ஈழ  சகோதரர்கள் இப்போது கூட முயற்சி செய்யலாமே என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அதற்கான முதல் அங்கீகாரம் ஒலிம்பிக்கில் கூட கிடைக்கலாம்.

௦ இந்த ஒலிம்பிக் இன்னொரு விதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வரை நடந்து முடிந்த எந்த ஒலிம்பிக்கிற்கும் இல்லாத சிறப்பு இந்த ஒலிம்பிற்கு கிடைத்திருக்கிறது. பங்கேற்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் பெண் வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு... எல்லா நாடுகளிலும் பெண்கள் பங்கேற்பதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதில் இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் பெருமை - வீரர்கள் பட்டியலிலேயே இல்லாத பெண் கூட வீரர்கள் அணிவகுப்பில் வரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது...

௦  லண்டன் தொடக்க விழாவில் எப்படி இயற்கையோடு இருந்த நிலையிலிருந்து, தொடர்ந்து கருவிகள், ஆலைகள், தொழில் நுட்ப வளர்ச்சி என்று மிக அட்டகாசமாக காண்பித்தார்கள். தங்கள் நாடு பிடிக்கிற ஆசையில் உலகம் முழுவதும் சென்று வெறித்தனமாக நிறைவேற்றிய அராஜகங்கள் மட்டும் மிஸ்ஸிங்... ஐ திங் தட் திஸ் அம்னீசியா டிசர்வ்ஸ் ய கோல்ட் மெடல்!


௦ தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பில் முதலில் கிரேக்கம் வருவது போல கடைசியில் ஒலிம்பிக்கை நடாத்தும் நாடு வருவது பெருமைக்குரிய விஷயமாம். எனக்குள்ள சந்தேகம் - முதலில் வருவது பெருமையா  கடைசியில் வருவது பெருமையா? இரண்டும் என்றால் - இந்தியா பதக்கப் பட்டியலில் கடைசியில் வரும் என்று நினைத்திருந்தேன். அந்த பெருமை கை நழுவிப் போனதில் எனக்கு மிக வருத்தமாகவே இருக்கிறது. 





Wednesday, 7 September 2011

கிரிக்கெட்டும் வெங்கட்டும் - மங்காத்தா?

திரைப் படங்களுக்கென்று விமர்சனமெல்லாம் இதுவரை எழுதியதில்லை. இதுவும் விமர்சனமா என்று தெரியவில்லை. வலைப்பூவில் எங்கெங்கு நோக்கினும் மங்கத்தா என்பதனால் நம்ம பங்குக்கும் இரண்டு வார்த்தை எழுதினாத்தானே நாலு மனுஷ மக்க மதிப்பாக. அதுனாலதான் மங்கத்தா. இந்தப் படம் பல பேருக்குப் பிடிச்சதாச் சொல்றாக. சில பேரு உருபடியில்லாததுன்ராக.

வெங்கட்டு - அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் பயங்கர ராசிங்க. சென்னை 28 ல கிரிக்கெட்டை வச்சு உள்ள வந்தாரு. செம போடு போட்டுச்சு. அப்புறம் சரோஜா - அதுல கிரிகெட்டை விட்டுப்புட்டு அதைப் பாக்கப் போற மாதிரி ஒரு ரூட்டைப் போட்டு அதுவும் ஓடுச்சு. [கோவா - வுல கிரிக்கேட்டுக்காகவா ஊர வுட்டு ஓடி வாராங்க - அப்படி வச்சிருந்தா அந்தப் படமும் ஓடியிருக்குமோ என்னவோ.] இப்ப கிரிக்கெட்டு சூதாட்டத்துல வச்சு ஒரு கதை.

வெங்கட்டோட கதைப் பின்னல்கள் ஒருமாதிரி கிரிக்கெட்டு மேல பைத்தியம் மாதிரி இருந்து அத்லேர்ந்த்து கொஞ்சம் கொஞ்சமா விலகிக்கிட்டே வர்ற மாதிரி இருக்கு. இதேமாதிரி இந்திய இளைஞர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கிரிக்கேட்டுலேர்ந்து வெளியே வந்தா நல்லாத்தான் இருக்கும். பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு இந்த அரசியல் கிழங்களிடம் மாட்டிக் கொண்டு நம்ம எல்லாரையும் அதுலேர்ந்த்து வெளியே வர விடாம அதுங்க சம்பாரிச்சுக்குட்டு இருக்குங்க. அதுல ஒழுங்க கொண்டுவந்தா சரத் பவார் எதிர்ப்பு - எதுக்காக எதுக்குராருன்னு ஒன்னும் கிடையாது. அவர்க்குப் பிரச்சனை.

இதுனாலதான் நான் திரைப்படத்தைப் பத்தியெல்லாம் எழுதுறதில்லை. எங்கேர்ந்தாவது எங்கேயாவது போயிருவேன்? அதுனால வெங்கட்டு இந்தப் படத்தோட டைரக்டரு ஒரு மேசெசு சொல்லிருக்காப்ள - கிரிக்கெட்ட விட்டு விலகிப் போங்கன்னு. அவரும் கண்டிப்பா இதக்கப்புறம் கிரிக்கெட்டு என்கிற கதைக் களனை விட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்னு தோணுது.

பி.சி.சி.ஐ. என்கிற தனியார் அமைப்பு - இந்திய அரசோடு அல்லது அந்த விளையாட்டு அமைச்சகத்தோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு அமைப்பு, இந்திய அரசின் சார்பாக விளையாடுவதாப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு, விளையாடும் வீரர்கள் நாட்டின் பிரதிநிதிகளாகப் பார்க்கப் படுவதற்காக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லா "பூஷன்' விருதுகளுக்கும் சிபாரிசு செய்து அந்தப் பொய்யை நியாயப் படுத்தும் ஒரு அமைப்பு, நாட்டையும் நாட்டின் வளங்களையும் பல்வேறு வழிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைப்பின் விளையாட்டிலிருந்து நாம் எல்லாரும் விலகிவர வேண்டும்.

வெங்கட்டு திரைப்படக் கிரிக்கெட்டுக் கதையிலிருந்து வெளிவர வேண்டும்.

இங்கிலாந்துல இந்தியா வாங்குற அடி மரண அடியா இருக்கு. இதுக்கப்புரமாவது இந்தியாவில் கிரிக்கெட்டு மோகமும், அதற்கான அரசியலும் ஒழிந்தால் தேவலை. அதுனாலதான் ஊழல் ஒழிப்பு என்பது - ஜன லோக்பால் என்பது தனியாருக்கும் தேவையிருக்குன்னு வலியுறுத்த வேண்டியிருக்கு.

திருப்பி கதைக்கு வருவோம். மத்தபடி - திரையில பணத்துக்காகவே எல்லாரும் அலையுற காட்சியெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு அதுதான் நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குது. அப்புறம் என்ன பண்றது?  நாட்டைக் காக்குற அர்ஜுனா இருந்தா ஏன்னா, சிட்டிசனா இருந்தா என்ன? எல்லாரும் அப்படித்தான். இப்படி ஒரு நெகடிவ் கேரக்டருல நடிச்சதுக்காக இரண்டு போரையும் பாராட்டலாம். அதோட சேர்த்து இவங்க நடிச்சதுக்கா வாங்குன பணமெல்லாம் வொயிட்டா இருக்காது - அதுக்கான வரியெல்லாம் ஒழுங்காப் போகாது. அப்படியெல்லாம் போயிருந்தா அதுக்கும் பாராட்டலாம்.

அதுனால மங்கத்தா - சூதாட்டம் - லாஜிக் இல்லா உள்ளே வெளியே - ஆனால் நம்மூரில் நடக்கிற உண்மையான சூதாட்டம்.

Tuesday, 5 April 2011

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா?

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா என்கிற கேள்வியை சில பத்திரிக்கைகள் முன்வைக்கின்றன?
உண்மையான கோப்பையின்  மதிப்பு ஏறக்குறைய எண்பதாயிரம் பவுண்டுகளாம் [அதாவது 130, 000 டாலர்கள் - அதாவது ஏறக்குறைய 57 லட்சங்கள்]. இதிலெல்லாமா விளையாடுவீங்க.

உண்மையான கோப்பை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதாகவும், வெற்றி பெற்ற போது கொடுக்கப் பட்ட கோப்பை "மாதிரிக் கோப்பை" என்று ஒரு சாரரும் -  இல்லை, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதுதான் மாதிரிக் கோப்பை என ஐ.சி.சி. யும் சொல்கிறது.

உள்ளேயே இருப்பது உண்மையான கோப்பை என்றால் மாதிரிக் கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப் பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை இது இலங்கையில் வைக்கப்பட்டது அங்கிருந்து இங்கே கொண்டு வரப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை விளையாடும் போது இந்தக் கோப்பையைக் காண்பித்து, "this is what they are playing for" என்று வர்ணனையாளர்கள் சொல்லுவதைக் கேட்டோமே அதெல்லாம் அண்டப் புழுகா?

ஒரு கோப்பையைக் கொடுக்கிற போது எதற்கப்பா மாதிரிக் கோப்பை.
தமிழக சட்டப் பேரவைக் கட்டிடம் திறப்பு விழாவில், கோபுரம்தான் தோட்டா தரணியை வைத்து சில கோடிகளுக்கு செட் போட்டார்கள் - உலகக் கோப்பையிலுமா? தோனி - நீ தூக்கிக் காட்டுவது போலிக் கோப்பையா?

கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரு கேள்வி
கோப்பையை உள்ளே அனுமதிக்க "இறுதிப் போட்டியை காண சில டிக்கெட்டுகள் கேட்டதாகவும் - அதைக் கொடுக்க முடியாமல் கோப்பையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் - அங்கிருந்து துபாய் எடுத்துச் சென்று விடுகிறோம் என்றார்களாம். என்னய்யா இது. ஒரு நாட்டின் வருமானத்தைப் பார்க்காமல், வெறும் டிக்கெட்டுக்காக விலைபேசும் அதிகாரிகள் இருக்கிற வரை, எப்படி நாடு முன்னேறும்? 

சரி ஐ. சி. சிக்கு ஒரு கேள்வி - 
முதலிலேயே உண்மையான கோப்பை நாட்டுக்குள் வந்து விட்டது என்றால் - எப்போது வந்தது - அதற்கான வரியைக் கட்டிதான் உள்ளே கொண்டு வந்தீர்களா? அப்படியானால் எந்த வழியாக - எவ்வளுவு கட்டினீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாய் இதுதான் உண்மையான கோப்பை என்று நாங்கள் உரசிப் பார்த்தும் சொல்ல முடியாது. இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற போதும் போலிக் கோப்பையா நம் கைக்குக் கிடைக்க வேண்டும்?

எதுவாய் இருந்தால் நமக்கென்ன? வாருங்கள் ஐ. பி. எல். லிற்கு நேரமாகி விட்டது. அந்த பிசினசிலும் பங்கெடுப்போம்? 

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருந்து கொண்டேதான் இருப்பர்.

தொடர்புடைய செய்திகளுக்கு இங்கே சுட்டவும்.



Thursday, 8 July 2010

முட்டாள்கள் உலகம் முழுவதும்

உலகம் முழுவதும் கால் பந்து திருவிழாவில் அக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாவிட்டாலும் - ஆக்டோபஸ் ஜெர்மனி விளையாடும் விளையாட்டின் முடிவுகளை முன்கூட்டியே தெரிவிப்பதகாவும் 6 க்கு 6 முறை சரியான முடிவுகளை சொன்னதாக தெரிவிக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Paul_the_Octopus




Tuesday, 20 April 2010

மோடி விளையாட்டு

கிரிக்கெட்டின் IPL version வந்த போது கிரிக்கெட்டிற்கு மறு வாழ்வு வந்தது போல பலர் நினைத்தார்கள்.
அதில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி பிறகு அலசுவோம்.

இப்போது சசி தரூர் மற்றும் லலித் மோடி இருவருக்கும் சண்டை வெடித்து தரூர் தன் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை வரை வந்தாயிற்று.

இப்போது பிரதமர் IPL - லின் நிதி நிலையை கழுகுக் கண் கண்டு பார்ப்போம் என்று சவால் விட்டிருக்கிறார்.

அய்யா சாமி!

லலித் மோடி ஏற்கனவே பல முறை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடை 200 கோடி 300 கோடி வரை லாபம் அதிகமாக இருக்கும் [எனக்குக் கணக்குத் தெரியாது] என்று எல்லாப் பத்திரிக்கைக்கும் பேட்டி கொடுத்த போதெல்லாம் உங்கள் கண் எங்க போச்சு.

சசி தரூர் - கூட பிரச்சனைன்ன உடனே அங்கே எப்படி income tax raid போனாங்க.
அதுக்கு முன்னாடி வரைக்கும் கோடி கோடியா சம்பாதிகிறவன்கிட்ட பிரச்சனை இருக்கும்னு தெரியாதா?

அமைச்சர் ஒருத்தர் பதவி விலகுற வரைக்கும் போனதுக்கப்புறம்தான் அங்க வில்லங்கம் இருக்குன்னு தெரியுதா.
அதுக்கப்புறமும் ஏன் இப்படி அறிக்கை.
இது லலித் மோடியை அலெர்ட் பண்றதுக்காக சொல்லறீங்களா? அதனால் எல்லா டாகுமென்ட்ஸ்- ஐயும் லலித் மோடி ஒழுங்கா வச்சுக்க ---

என்ன நடக்குதுங்க?
கவுண்டமணி சொல்லறமாதிரி - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! தான் சொல்லணும்.

இல்ல நரேந்திர மோடியைத் தான் ஒன்னும் பண்ண முடியலை - லலித் மோடியையாவது ஏதாவது பண்ணலாம்னா?

அதாவது - ஒரு அமைச்சரைத் தொட்டாத்தான் நாட்டில நடக்குற ஊழல் வெளில வரணும்னா - எல்லாரும் அமைச்சரோடதான் போட்டி போடணும்.
சாதாரண ஆள் போட முடியாது. அப்பா லலித் மோடி மாதிரி பெரிய கோடி
[எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்] தான் சண்டை போட முடியும்.

அதாவது ஊழலை ஊழலால்தான் எதிர்க்க முடியும்.
பணத்தை பணத்தால்தான் எதிர்க்க முடியும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.

ஷங்கர் சிவாஜில சொன்னது சாரியாப் போயிரும் போல இருக்கேப்பா?