Showing posts with label சமச்சீர்கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர்கல்வி. Show all posts

Tuesday, 9 August 2011

அதிரடித் தீர்ப்பு - சமச்சீர் கல்வி

உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஏறக்குறைய எழுபது நாட்கள் - ஆடிய ஆட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. யார் ஒரு புதிய இடத்திற்குச் சென்றாலும், வந்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது - நின்று, கவனித்து, செல்ல வேண்டும். அம்மா இப்படிப் பலமுறை நிற்காமல் சென்று பிரச்னையை எல்லாருக்கும் உருவாக்குகிறார். அது ஏன் என்பதுதான் புரியாமல் இருக்கிறது? 
  1.  உச்ச நீதி மன்றம் இதற்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமா? வேறு வழியில்லையா?

  2. இந்தத் தீர்ப்பின் வழியாக சமச் சீர் கல்வியில் எல்லாம் சரி என்பதோ, அல்லது அதில் எதுவுமோ சரியில்லை என்பதோ அல்ல. அது விவாதத்துக்குரியது. ஆனால், எந்த ஒரு செயலையும் தனிப்பட்ட ஆளாக முடிவெடுக்கும் போக்குதான் இன்னும் மாறவில்லை. இதைத் தான் அனைவரும்  கவனிக்க வேண்டும். 

  3. இன்னும் சிலர் மாணவர் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற அம்மாவின் கனவு நிறைவேற வில்லை என்று நினைக்கிறார்கள் - இன்னும் நாட்கள் எடுத்து ஒழுங்காக விவாதத்துக்கு உட்படுத்தி, பள்ளிகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இல்லாமல், கல்வியாளர்களின் ஆலோசனை கேட்டு, பரந்த விவாதத்திற்கு உட்படுத்தி செய்யவேண்டியது.  அதை அம்மாவும் கற்றுக் கொள்ள வேண்டும்  - எதிர்ப்பாளர்களும் உணர வேண்டும். 

  4. எதைச் செய்தாலும் தான்தான், தனது முடிவுதான் என்று இல்லாமல், தனி ஆளாக இல்லாமல் - தனி ஆளாக முடிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை. 

  5. மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக எதையும் செய்து விடலாம் என்பதோ, மாற்றிச் சிந்திப்பவர்களை அடக்கி விடலாம் என்பதோ, சமச்சீர் கல்வி பற்றி பேசும் ஆசிரியர்களை மிரட்டுவது என்பதெல்லாம் நல்லதல்ல.

  6. வெற்றி பெற்றவர் - மக்களின் நன்மையை முன்வைக்க வேண்டுமே தவிர தந்து விருப்பு, வெறுப்போ - அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் நன்மையையோ முன்வைப்பது அல்ல - கருணாநிதி அந்தத் தவறைச் செய்தார். அதனால்தான் அம்மா வந்தார். அம்மாவின் மேல் உள்ள அன்பினால் அல்ல. அம்மா அதேத் தவறைச் செய்தால் நட்டம் அவருக்குத் தான்....

Friday, 5 August 2011

சோ - வெனப் பெ [பொ]ய்யும் சமத் தாழ்வு மழை


தமிழகத்தின் மிகச் சிறந்த காமெடியனும், மிகச் சிறந்த பத்திரிக்கையாளரும், தலை சிறந்த அரசியல் ஆலோசகரும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படக்கூடிய திறமை வாய்ந்தவரும், வாதங்களை எடுத்து வைப்பதில் வேறு யாரைக் காட்டிலும் புலமை நிறைந்தவரும், - எனப் பலராலும் போற்றப் பட்டுக் கொண்டிருக்கிற சோ - வின் தலை சிறந்த வாதங்கள் நிறைந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  இட்லி வடை வரை சென்று அதைப் படித்துவிட்டு பிறகு இங்கு வந்து வாசிக்கலாம். 
அதற்குப் பின்னூட்டம் போடலாம் என நினைத்து பிறகு இங்கே பதியலாம் என எழுதுகிறேன்.

அந்தக் கட்டுரைக்குப் பதில் மொழி எழுதி அக்கட்டுரை - விளம்பரப் படுத்தப் படுமோ என்கிற வேதனை இருந்தாலும் - அது என்னமோ மிகச் சிறந்த கட்டுரை என்பதுபோலவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போலவும் எழுதியிருக்கிற மக்களைப் பார்க்கிற போது....
சோவின் வாதம் - சமத்துவம் தவறு என்பதுதான். சாதி ஒழிப்பு தவறு - பிராமண எதிர்ப்பு தவறு. - சாராம்சம் இதுதான்-  அதில் வேற சுக்கு ஒன்னும் இல்லை. இதுக்கு மேல நாம் எழுதினா நாம் வாதத்தை திசை திருப்போரோம்னு சொல்லுவாங்க. ஆனா அவர் நல்லா திருப்பலாம்.
  • ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவர்கள் பேசிய வசனமாம் - அப்ப இத்தனை ஆண்டுகள் எதுவும் மாறலை என்பதை விட - இவர்கள் பத்திரிகை  நடத்தி எதையும் மாற விடாமல் செய்துகொண்டிருக்கிறார்கள் - அப்படியா? நாடு எந்த விதத்திலும் வளர்ச்சியடையக் கூடாது - அப்போதுதான் இவர்கள் கிண்டல் செய்யலாம் - கேலிப் படங்கள் வரையலாம். பத்திரிகை  நடத்தலாம். 
  • சமச்சீர் என்ற சென்ற ஆட்சியாளர்கள் "ஸ்டன்ட்" அடித்தார்களாம்  ஆனால் அதை எதிர்க்கும் இன்றைய ஆட்சியாளர்கள் உண்மையானவர்களாம் - மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாம் - திராவிடம் என்பது பற்றி பேசாமல் அதனால் சமத்துவம் பற்றி பேசாமல் - ஏற்றத் தாழ்வை எப்போதும் உயர்வாய் வைக்கிறவர்கள்.
  • இந்த வக்கீல் - ஸ்டே ஆர்டர் பற்றியெல்லாம் பேசுவார்கள் - அனால் இந்த விஷயத்தில் மட்டும் இவர்களுக்கு எதுவும் புரியவில்லை. உயர் நீதி மன்றம் தவறு - உச்ச நீதி மன்றம் தவறு- இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் நீதி மன்றம் சரி - இல்லையென்றால் தவறு. 
  • "சமச்சீர் வக்காலத்துகள் வாய்ச்சவாடல்களாம்" - இவர்கள் மட்டும் என்ன சவடால்கள் என்று தெரியவில்லை.
    • சமச்சீருக்கும் விமானத்திற்கும் முடிச்சுப் போடுறாரு. படிக்கிற ஆளுங்கல்லாம் ஆமா - சோ தான் கரீட்டு - ன்னுறாங்க. எல்லாரும் விமானத்தில் போவதற்கான CAPABILITY இருக்காங்குறது வேற - எல்லாரும் துக்ளக் மட்டும்தான் படிக்கணும்னு சொல்லலை தலைவரே - எல்லாரும் துக்ளக் வாங்குறதுக்கான "வாங்கும் திறன்" இருக்காங்கிறதுதான் கேள்வி - அதுனால எல்லாரையும் நடந்து போகச்சொல்லலை - ரன் வே போடுறதுல மட்டும் கவனம் செலுத்தாம கிராமங்களுக்குக்கும் போக்குவரத்து வசதிக்கு வழி பண்ணுங்க - சென்னையில மட்டும் எல்லா வசதிக்கும் வழி பண்ணாதிங்க - தமிழ் நாட்டுல உள்ள எல்லாரும் வசதியோட வாழம்னு சொன்னா.. 
    • நல்ல ஹோட்டல் மோசமான ஹோட்டல்தான் இருக்குமாம் - எல்லா கடைகளிலும் கிடைக்கும் பொருள் சுத்தமான பொருளாய் இருப்பதற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் - சில கடை மோசமாய்த் தான் இருக்கும், சில கடைதான் சுத்தமாய் இருக்குமாம் - அப்புறம் என்ன ராசா -அதுதானே சொல்ல வர்றீங்க -டீ மட்டும்  சாப்பிடறவன் வக்கத்தவன் - அவன் உருப்பட மாட்டான் - நீங்க மட்டும் நல்லா இருங்க - 
    • அப்புறம் அரசுப் போக்குவரத்து - அரசு அலுவலர்கள் அரசுப் போக்குவரத்துப் பேருந்தில் போகச் சொல்லுவதில் கிண்டல் வேற... ஹுண்டாய் ல வேலை பார்க்கிற இவர் மாருதி கார்ல போய் இறங்கச் சொல்லுங்க ... இவங்க கோயில்ல மட்டும் வேற யாரும் போகக் கூடாது ஆனா அரசு அலுவலகங்கள்ல வேலை பார்க்கிறவன் அரசுப் பேருந்துல போகச் சொன்னா இவருக்கு என் வருத்தமா இருக்கு...
    • இது போல நிறைய சவாடல்கள் ---
  •  எவ்வளவு கோபம் பாருங்க - "ல்லாம் சமத்தாழ்வு வேண்டாமா? இதுதான் லட்சியம் என்றால் – பேசாமல், கம்யூனிஸப் பிரேதத்தை, அதன் சமாதியிலிருந்து தோண்டி எடுத்து, அந்தப் பிரேதத்திற்கு சமநீதி இயந்திரத்தைப் பொருத்தி, அதை இயக்கி, முழு சமத்தாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்!"    அவருக்கு என்ன பிரச்சனைன்னா உயர் நிலையில இருக்கிற எல்லாரையும் கீழ இழுக்கிறோம் அப்படின்றதுதான் பிரச்சனை. 
  • தரமான கல்வி கொடுக்கத்தான் ஜெயலலிதா சமத் தாழ்வு கல்வியை எதிர்க்கிறாராம் - தரமான கல்விக்கு தமிழக முதல்வரும் மிகச் சிறந்த உதாரணமாம்.  என்ன அருமையா - முந்தைய ஆட்சியாளர்கள் ஸ்டன்ட் அடிக்கிறார்களாம் - இவர் மட்டும் தரம் தரும் தனியார் கல்வியை ஊக்குவிக்கும் உத்தமாராம் - 
  • அடுத்து சித்த மருத்துவம் பற்றி வேற - அய்யா - மாற்று மருத்துவத்திற்கு வழி விடுங்க -
  • இதுக்கு மேல எழுதணுமா என்ன? 
  • விழித்துக் கொள்ள வேண்டும் என்று வேறு எழுதியிருக்கிறார் - நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும் - சமச்சீர் கல்வியை vதிர்ப்பதன் மூலம் - நாட்டில் ஏற்றத் தாழ்வும், சீர் கெடும், சாதியமும் தலை விரித்தாடும் - அதுதான் வேண்டும் என்று ஷோ காட்டியிருக்கிறார். 
  • அவரது வாதங்களுக்குப் பின்னே உள்ளது ஒன்றே ஒன்றுதான் - அதை ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. முன்பு மோசமாய் இருந்த பாடத்திட்டமே கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கெல்லாம் போதும். அவர்களுக்கு எல்லாம் பள்ளிக் கூடமே தேவையில்லை - இதுல இதுவேறயா என்பதுதான் சோ - வின் வதம். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் இருக்க வேண்டும் - இதுதான் அவரின் நோக்கம். விஷத்தை எவ்வளவு அழகாய்ப் பூசி மொழுகுகிறார். 
    • எல்லாரும் எழுத வந்துட்டா என்ன ஆகிறது - சோ - வுக்கு வருத்தமெல்லாம் பதிவர்கள் மீதுதான் - எல்லாரும் எழுத வந்துட்டால்--- அவனவன் அவனவனுக்குப் பகவான் கொடுத்த வேலையைச் செய்துடால் அவாளுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.  நம்மாலும் படிக்கிறதுனால, எழுதுறதுனாலதான் பிரச்சனையே. அதனால் சோ எனா சொல்ல வர்றார்ணா ...
  • ஏற்கனவே இது போன்ற விவாதங்கள் பற்றிய ஒரு கட்டுரை- 
சோவெனப் பெய்திருக்கும் இந்தப் பொய் மழையில்,  இது சமத்தாழ்வு என்பதற்கான எந்த வாதமும் இல்லை. வெறும் பொய் வாதங்கள் - மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட வசனங்கள் - கிண்டல் என்ற பெயரில் விஷம் - அரசு பஸ் - இல்லை அரசுப் பேருந்து - தமிழ் கூட அவருக்குக் கிண்டல் ஆகிவிட்டது.  பேருந்தை அவா எப்படிச் ஷோல்லுவான்னு ஷோன்னா நன்னாயிருக்கும். இதை வெளியிட்டு இட்லி வடை - தயிர் வடையாகிக் கொண்டிருக்கிறதே என்பதுதான் எனது வருத்தம் - 

    Thursday, 28 July 2011

    சமச்சீர் - ஒரே தீர்வு ஓராண்டு விடுமுறை

     சமச்சீர் கல்வி வேண்டாம் என்று சொல்கிறவர்கள் முன்வைக்கிற வாதம் இரண்டுதான்.
    1. ஒன்று - அது தரம் அதிகமானதாக இருக்கிறது.
      • தரம் அதிகமானா நல்லதுதானே என்று கேட்கிற நல்லவர்களே - அவர்கள் அப்படியிருந்தும் ஏன் வேண்டாம் என்கிறார்கள் என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்?
      •  அரசு பள்ளிகளில், இப்போது உள்ள படத் திட்டத்தையே ஒழுங்கா நடத்துவதற்கான அருகதை ஆசிரியர்களுக்கு இல்லை- இதுல சமச்சீர் கல்வி வேற....
      • அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை; சில இடங்களில் போதுமான வசதிகள் இல்லை. பல அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களே இல்லை...
      • அரசு ஆசிரியர்கள் அதிகமா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யுறது இல்லை.
      • அதனால் பஞ்சு மூட்டை தூக்குறவங்கிட்ட இரும்பு மூட்டையைக் குடுத்த வேலைக்கு ஆகுமா? 
      •  இதற்கெல்லாம் என்ன காரனம்னா ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் தேர்தலின் போது வேலை செய்வதால் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. ஒழுங்கா பாடம் எடுங்கன்னு சொல்லத் தயங்குது. மற்ற எல்லா அரசு அலுவலகங்களிலும் எல்லாரும் காலை முதல் மாலை வரை கடமை தவறாமல் வேலை செய்கிராகள். ஆனால் ஆசிரியர்கள் மட்டும் வேலை செய்வது இல்லை. அவர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் யாரு அவர்களிடம் எதுவும் சொல்ல முயலுவதில்லை. ஆனால் அவர்கள் மீது கை வைக்கத் துணிந்தவர் அம்மா மட்டும்தான்.
       2. இரண்டு - தரம் மிகவும் கேவலமாக இருக்கிறது
        • என்னா தரம் கேவலமா இருக்கு?
        • 'திடப்' பொருள்தான் உருகும் 'வாட்டர் melts ' ன்னு போட்டிருக்கு அது தப்பு -- அப்புறம் கலைஞர் ஒரு கவிஞர் னு போட்டிருக்கு. இது போல இன்னும் நிறைய..
        • நிறைய அறிவியல் உண்மைகள் போடாமல் இருக்கு - அம்மா ஒரு திரைப்படக் கலைஞர் ...
        • தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வியின் தரத்தை விட அதிகமான தரத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தனியார் பள்ளிகளின் தரத்தை குறைப்பதா...
        • தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒழுங்காகப் பாடம் எடுக்கிறார்கள். இரும்பு தூக்குறவங்க கிட்ட பஞ்சு மூட்டை தூக்கச் சொல்றது நியாயமா? மேலும்அவர்களின் வேலையில் கைவைக்க யாரும் பயப்படுவது இல்லை என்பதனால் அவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். எனவே தனியார் பள்ளிகளில் நாம் தலையிடாமல் அவர்கள் விருப்பப் படி ....... நடத்த அரசு உதவ வேண்டும். எனவே சமச் சீர் கல்வி தேவையில்லை.

        அதனால் எப்படிப் பாத்தாலும் சமச் சீர் கல்வி ஒன்னும் சமமா இல்லைன்னு தெரியுது.
        என்ன செய்யனும்னா - சமச்சீர் கல்வியைத் தடை செய்யணும்.

        இதோட முடியலை - அன்பு மக்கா
        இதனால என்ன சொல்ல வர்றேன்னா

        - அரசு ஆசிரியர்கள் தரம் உயர்ந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதைவிட, தரம் குறைந்த பாடத்தை நடத்தாமல் இருப்பதே மேல்.

        - பணம் கொடுத்துத்தான் நாம் கல்வியைப் பெறமுடியும் - அப்போதுதான் ஒழுங்கான கல்வியைப் பெற முடியும்.

        - ஆக எது எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் ஒன்னும் ............ முடியாது...- இப்போது இருப்பதே இருக்கும் - எப்போதும் அப்படியே நடக்கும்.

        - மாற்றம் என்பதெல்லாம் விலங்குகள் தத்துவம்.

        இறுதியாக இதற்கு ஒரே தீர்வு ---

        அம்மா எதிர்கட்சித் தலைவியாக இருந்த போதே சமச்சீர் கல்வித் திட்டத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே வரலாற்றின் பதிவுகளில் அம்மாதான் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள். எனவே நிச்சயமாய், இது அடுத்த ஆண்டுதான்.... அம்மாவின் படத்தோடு சமச்சீர் பாடத்திட்டத்தில் அம்மா பெயர் இருக்க வேண்டும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

        அதற்கு...

        இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது. மாதத் தேர்வுகள், மிட்-டெர்ம்  தேர்வுகள் எல்லாம் இந்நேரம் முடிந்திருக்க வேண்டும். இனிமேல் இதற்கான அவகாசமேல்லாம் கிடையாது என்பதனாலும், மாணவர்கள் சமச்சீர் கல்வியைப் பின்பற்றுவதைக் காட்டிலும், படிக்காமல் இருப்பதே மேல் என்று அரசு நினைப்பதாலும், இதைப் பற்றிய அக்கறையை, தமிழக வெகு சனம் வெளிப் படுத்தாமல் இருப்பதாலும், அரசுக்கு சரியான வழி காட்ட ஆட்கள் இல்லைஎன்று தமிழக அரசின்    வக்கீலே தனது தனிப் பட்ட கருத்தாக வெளிப் படுத்தியிருப்பதாலும், இதற்குப் பிறகும் நாம் மாணவர்களை நாம் வதைக்க முடியாது என்பதாலும், [சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம் - அதுவும் மாணவர்கள்... ] இதற்கு ஒரே தீர்வாக - ஒரு ஆண்டு விடுமுறை கொடுத்து இந்தச் செயலை அம்மா செய்ததாக வரலாற்றின் பக்கத்தில் இடம் பிடித்தால் நன்றாக இருக்கும்.


        பின்குறிப்பு:

        இக்கட்டுரையில் உண்மை பொய் இரண்டும் கலந்து இருக்கிறது. செய்தியும் கேலியும் சேர்ந்து இருக்கிறது.
        எழுதப்பட்ட கருத்தில் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கொண்டிருந்தால் வருந்த வேண்டாம்.
        நீங்கள் அரசு ஆசிரியராக இருந்தால் வருத்தப் பட வேண்டாம்.
        [இதெல்லாம் சும்மா ... உள்ள ஒன்னும் இல்லைங்கோ ... கோ .... கோ...]

        Thursday, 21 July 2011

        சமச்சீரும் சாணக்கியத்தனமும்

        • கலைஞர் கருணாநிதி அரசியல் சாணக்கியர் என்றும், அரசியல் செய்வதில் அவரைப் போல யாரும் இல்லை என்றெல்லாம் நிறையப் பேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அனால் நடப்பதைப் பார்த்தால் அதெல்லாம் ஒரு சுக்கும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர் இன்றைய முதல்வரிடமிருந்து நிறைய அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.
        • இன்றைய முதல்வர் எதைச் செய்தாலும் தமிழக மக்களின் நலுனுக்காகவே செய்வதாகவே அனைவரும் இன்றைக்குப் பேசுகிற அளவுக்குச் இந்த எழுபது நாட்களாக எல்லாரையும் பேச வைத்திருக்கிறார் என்றால் - இதைத் தவிர வேறன்ன வேண்டும் ஆதாரம்.
        • புதிய சட்ட சபைக்குச் செல்வதில்லை. ஆனால் அதில் உள்  நோக்கம் எதுவும் இல்லை என்று அவர் சொல்லுகின்றார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைக் கொடுப்பதற்கு இது தடையாக இருக்கும் என்று சொல்லுகிறார் - வரிந்து கட்டிக் கொண்டு எல்லாரும் சரி என்று எழுதுகிறார்கள்.
        • சமச்சீர் கல்வி என்பது தரமாற்று இருக்கிறது என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக சொல்லுகிறார்கள் அம்மா. அது சரிதான் - அதில் வேறெதுவும் உள்குத்து இல்லை என்று எல்லாரும் நம்புகிறார்கள் - எல்லாரும் எழுதுகிறார்கள். 
        • சமச்சீர் கல்வியின் திட்ட ஆய்வுக் குழு என்பதில், உலகின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் திரு. ஜெயதேவும், திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், இவர்கள் மிகவும் காத்திரமாகப் படித்துப் பார்த்து சமச்சீர் கல்வி தரமற்றது என்று சொல்லுகிறார்கள். இப்படிப் பட்ட கல்வியாளர்கள் முன்பே கருணாநிதி அவர்களால் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். அப்போதுதானே சாணக்கியர். இன்று அவரே உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றித் தரவேண்டுமென கூழைக் கும்பிடு மட்டும் போடவில்லை அப்படியாக தமிழக முதலமைச்சருக்கு அறிக்கை விட்டிருக்கிறார் - முன்னாள் முதல்வர். அவர்  நியமித்த பாடத்திட்டக் குழுவின் ஆட்களைப் பாருங்கள் - ஐ.ஐ.டி. யின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் போன்றவர்களை  வைத்து என்ன செய்ய முடியும்?
        • யாரைப் பார்த்தாலும் சமச்சீர் கல்வித்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்ற ஒரு குற்றச் சாட்டை வைக்கிறார்கள். படித்துப் பார்த்தவர்கள் குறைவு.  அதைப் பற்றிய முழு விவரமும், திட்டக் குழுவின் ஓட்டைகளையும் இங்கே படித்து அறியலாம்.
        • ஏறக்குறைய இரண்டு மாதங்கள் முடியும் நிலையில், பள்ளி மாணவர்கள் எதற்குப் பள்ளிக்குப் போகிறோம் என்று தெரியாமலேயே போய்க கொண்டிருக்கும் நிலை இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் போகும் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் உச்ச நீதி மன்றத்திற்குப் போகிறது. தமிழக மாணவர்களை பழைய பழைய பாடத்திட்டங்களை பின்பற்றச் சொல்லுவதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் இன்றைய முதல்வரை நாமும் பாராட்டுவோம். பழைய சட்டமன்றத்திற்கு சென்றதன் மூலம் மிகவும் உன்னதமான ஆட்சியைத் தரும் புதிய முதல்வரை வாழ்த்துவோம்.
        • தமிழக மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு இருப்பது போலவும் - இன்னும் சொல்லப் போனால் சமச்சீர் கல்வியைத் தடை செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்ததைப் போலவும் அதனால்தான் மிகுந்த சிரத்தையோடு இதில் ஈடுபட்டிருப்பதாகவும் எல்லாரையும் பேச வைக்கிற சாணக்கிய அம்மா, அய்யா விற்குப் பாடம் எடுக்க வேண்டும். எதைச் செய்தாலும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த முதல் நாளில் இருந்தே செய்ய வேண்டும் - இந்த வேகம்தான் விவேகம். அப்போதுதான் ஆட்சி முடியும் தருவாயில் எல்லாரும் இதை மறந்து போவார்கள். ஐயா இதையும் கற்றுக் கொள்ள வேண்டும். 
        • இந்த சானக்கியர்களுக்கு மத்தியில், எதைப் பற்றியும் கவலைப் படாமல் இருக்கும் பெற்றோர்கள் தான் மிகப் பெரிய சாணக்கியர்கள் போல இருக்கிறது. இரண்டு மாதங்கள் பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்றன. பொதுவாக மாணவர்கள் நலனில் எல்லாம் அக்கறை வேண்டாம் - தன் பிள்ளையின் மீதாவது ஒரு கரிசனை வேண்டாம். தன் வீட்டை விட்டு போனால் போதும் - பள்ளியில் படித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி என்கிற மாதிரி - என்று தள்ளி விடுகிற பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தனை செய்ய வேண்டாமா?
        • இந்தப் பெற்றோர் - ஆசிரியக் கழகங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஓட்டு மொத்த தமிழகமே அமைதி காக்கும் போது - பெற்றோர் ஆசிரியக் கழகங்கள் என்ன செய்து விட முடியும் என்று அமைதி காக்கிறதே - இதுதான் சாணக்கியத் தானம். ஆட்சியாளர்களை விட அமைதி காக்கிற நாம்தான் சாணக்கியர்கள். 
        • எதைச் செய்தாலும் அமைதி காக்கிற சாணக்கியத்தனம் - ஒரு பக்கத்திலிருந்து அப்படியே முழுவதுமாக மறுபுறம் சாயும் சாணக்கியத் தனம் - அடுத்த தேர்தலில் அப்படியே எதிர்ப்புறம் சாயும் சாணக்கியத் தனம். நமது சாணக்கியத்திற்கு ஈடு  - முன்னாளும் கிடையாது இந்நாளும் கிடையாது.