Showing posts with label Assembly Election. Show all posts
Showing posts with label Assembly Election. Show all posts

Saturday, 14 May 2011

தேர்தல் முடிவுகள் - அடுத்த தேர்தல் வரை நாம் மௌனிகள்

நேற்று விடியற்காலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு கொடுத்த தலைப்பு. எழுதிக்கொண்டிருக்கும் போதே அறுந்து போன தொடர்பு வருவதற்குள் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. சரி அதே தலைப்பு இருந்து விட்டுப் போகட்டுமே - எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை.

இன்று முழுவதும் காலை தொடங்கி இறுதி முடிவு வெளிவரும் வரை எல்லாத் தொலைக்காட்சிகளும், மைக் பிடித்துக் கொண்டு அல்லது மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு இறுதி முடிவு வரை பேசிக்கொண்டே இருந்து விட்டார்கள். நாம்தான் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. blogger - க்கு நமது நன்றிகள்.

எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாகவே முடிவுகள் - அம்மாவே எதிர்பார்க்காத அசத்தலான முடிவுகள். ஏன் இப்படி ஒரு வெற்றி என்று அம்மாவுக்கே புரியாது. ஆனால் ஏன் இந்தத் தோல்வி என்று கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

சீமான் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

வை.கோ அமைதி காத்ததன் மூலம், காமேடியனாக்கப் பட்டுவிட்டாரே என்று நான் எழுதினேன். ஆனால் தனது அமைதின் மூலம் இன்னும் அன்புச் சகோதரிக்கு அருகிலேயே இருக்கும் வாய்ப்பைப் பிரகாசப் படுத்திக் கொண்டார்.  சாணக்கியத்தனம் !

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் என்று முன்கூட்டியே அறிவித்து விட்டதால் நாம் ஒரு காமெடி பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டோம். கேட்டாலும் கிடைக்காது என்பதால் - "இந்தப் பழம் புளிக்கும்."

தனது வாயினாலேயே பேமஸ் ஆன வடிவேலு, அதாலேயே குட்டிச் சுவரைப் போய்விட்டார். ஒரு வேலை ரஜினியிடம் மண்டியிட்டால், மனோரமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது போல கிடைக்கலாம்! ஆனாலும் எழுந்து நடக்க முடியாது.

நாம் பல பேருக்கு நன்றி சொல்லவேண்டும். அதில் முதலாவது ஆற்காட்டார் - மின்சாரக் கடவுள். ராசா - தொலைபேசிக் கடவுள். காங்கிரஸ் - எமதர்மர்கள். இன்னும் நிறைய .....

தேர்தல் கமிஷன் - வெற்றி!

எது எப்படி இருந்தாலும், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நாம் ஒன்றும் பேச முடியாது. ஒருவரா? ஒரு குடும்பமா? எதிர் பாராத சோகம் நிகழ்ந்தால் ஒழிய 2016 வரை நாம் மௌனிகள்தான்.

வாழ்க ஜனநாயகம்!

Thursday, 7 April 2011

தேர்தல் - இரு கட்சியா ஒரு கட்சியா?

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் என்று சொல்லும் நாம் - இரு கட்சி தத்துவத்திற்கு ஏன் அதைப் பார்க்க மாட்டேன் என்கிறோம்?

நம் நாட்டைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம்தான் அமலில் இருக்கிறது.மாறாகஅமெரிக்காவைப் பொறுத்த வரை, பல கட்சித் திட்டம் என்பது, நாட்டின் ஸ்திரத் தன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தது அல்ல. எனவே இரு கட்சித் திட்டம்தான் நாட்டிற்கும் அனைவருக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள். வாக்களிப்பது என்பது டெமாக்ராட் அணிக்கு அல்லது ரிபப்ளிக்கன் அணிக்கு. அதற்குப் பிறகு வேறு கட்சிகள் இல்லை [அப்படியே இருந்தாலும் இவைகள் எதையாவது சார்ந்துதான் இருக்க வேண்டும்].
அதாவது, கட்சிகள் வலது, இடது என்கிற நிலையில்கவனிக்கப் படும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, எத்தனைக் கட்சித் திட்டம் இருக்கிறது?

இந்தியாவின் உள் இருப்பதால், இதிலும் பல கட்சித்திட்டம் தான். ஆனால், தமிழகம் ஒரே கட்சித்திட்டத்தை மட்டும் கொண்டிருக்கிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் என்கிற ஒரே கட்சி, அண்ணாவிற்குப் பிறகு திராவிடக் கட்சி.
பெரியார் தேர்தலில் போட்டியிட விரும்பாததால் அது முன்னேற்றக் கழகமாகியது.  அப்போது மட்டும்தான் காங்கிரசுக்கு மாற்றாக, கொள்கையளவில் ஒரு கட்சி உதயமானது. அதற்குப் பிறகு காங்கிரஸ் தேய்ந்து, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கியது.
ஏன் தமிழகம் வளராது இருக்கிறது அல்லது இன்னும் உண்மையான வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றால் அது இந்த ஒரு கட்சி ஆட்சி முறையினால்தான் என்றால் அது முற்றிலும் தவறல்ல.
அண்ணாவின் கொள்கை தமிழ் நாடு என்று மாற்றுவதோடு முடிந்து விட்டது. அதற்குப் பின் எல்லாமே வெறும் கொள்கைகளாக மட்டும்தான் அதுவ தேவைப் படும்போது எடுத்து விடும் கோஷங்கள். அவ்வளவே.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அ.தி. மு.க, பின்பு, ம.தி.மு.க. பிறகு கழகத்தோடு எந்தவிதத் தொடர்புமே இல்லாமல் தே.மு.தி.க. [சரியா?]. அதாவது எந்த வித கொள்கை வேறுபாடுகளுமின்றி, தனிமனித விரோதமும், பகையும் மட்டுமே முன்னிறுத்தப் பட்டு ஒரே கட்சியின் பல கிளைகள்.

இதுதான் நம்மைப் பொறுத்த வரை பல கட்சிகள். இந்தத் தேர்தலில் இருக்கும் இரு பெரியக் கூட்டணிக் கட்சிகளின் கதாநாயகிகளின் [தேர்தல் அறிக்கைங்க] உள்ளடக்கத்தைப் பார்த்தாலே நமக்கு இது புலப்படும்.


  • இதனால் அறிவது என்னவென்றால், தமிழகம் இப்படிக் கேட்டுச் சீரழியக் காரணம் இந்த ஒரு கட்சி ஆட்சி முறையே. அமெரிக்காவில் பலர் இரு கட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். நாம் இங்கே ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது. 
  • எது சிறந்தது? பல கட்சியா அல்லது இரு கட்சி ஆட்சி முறையா. திண்ணமாய்த் தெரிந்ததெல்லாம் இதுதான் - மோசமானது ஒரு கட்சி ஆட்சி.


Saturday, 2 April 2011

Comman Man - என்பது என்ன?

தடங்கலுக்கு வருந்துகிறேன்... 
கடந்த பதிவில் இக்கட்டுரையின் எழுத்துரு பிரச்சனையால் பலர் படிக்க முடியவில்லை. அந்நிய மொழியில் இருந்தது.  பிரபாகரன் அனுப்பிய கட்டுரையை அப்படியே இணைத்ததால் வந்தது. இப்போது அதை மீண்டும் எழுத்துரு மாற்றி ஒரே கட்டுரையாகத் தருகிறேன்.

பொது மக்களாய் இருங்கள்
சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள். 

அ. பிரபாகரன்

Friday, 1 April 2011

தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 2

அ. பிரபாகரன் கட்டுரையின் இரண்டாம் பகுதி.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள்.
                                                அ. பிரபாகரன்

பொதுமக்களாய் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாக்களிக்கச் செல்வதில்லை!


தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 1

இது என் நண்பர்  அ. பிரபாகரன் எழுதிய கட்டுரை. அதன் முதற் பகுதி. 


பொது மக்களாய் இருங்கள் 

சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

தொடரும்....

Thursday, 31 March 2011

தேர்தல் - கதாநாயகி தேர்தல் அறிக்கை

கதாநாயகன் - கதாநாயகி என்பதெல்லாம் திரைப்படத்தில் மட்டும் என்றில்லை. நமது தேர்தல் அரங்கத்திலும் மிகப் பெரிய இடத்தை வகிக்கிறது. கடந்த தேர்தலில் கதாநாயகன் - இப்போது இன்னும் நிறைய இலவசங்களோடு - கதாநாயகியாக வளம் வருகிறாள் - தேர்தல் அறிக்கை.

இரண்டு மிகப் பெரிய கட்சிகள்.  ஆனால் ஒரே காட்சி - ஒரே கதாநாயகி.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க  - இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. வேண்டுமானால் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கச் சொல்லி போட்டி நடத்தலாம். 

தமிழக அரசியலில் இந்தக் கதா நாயகிக்கான வேறு பாடெல்லாம் ஒன்றுமில்லை. தொப்புள் தெரிய உடை உடுத்தி கவர்ச்சியோடு நடனமாடும் பெண்  மிகச் சிறந்த கதாநாயகியாக ஏற்றுக்கொள்ளப் படுவது போல, இலவசங்களால் நிறைந்திருக்கிற அறிக்கை மிகக் சிறந்ததாக அங்கீகாரம் பெரும் என்று நினைத்து வெறும் இலவச அறிவிப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

இலவச லேப்டாப் தொடங்கி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி எல்லாம் அறிவிக்கப் பட்டாகிவிட்டது. எல்லா கட்சிகளும் இதையே வழங்குகின்றன. கடந்த முறை எப்படி இப்படிக் குறைந்த  விலையில் அரிசி கொடுக்க முடியும் என்று கேட்ட செல்வி. ஜெயலலிதா, பிரச்சாரத்தின் பொது, கூட்டணிக் கட்சிகளுக்கு கூடச் சொல்லிக் கொள்ளாமல், திடீரென தானும் அரிசி வழங்குவதாகக் குறிப்பிட்டார். இப்போது முன்பே அவரும் லாப்டாப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

இலவசங்கள் என்பது பணம் கொடுத்து ஆட்சிக்கு வருவதில் அடங்காது. அது வாக்குறுதி. முன்பே வாங்கி ஓட்டுப் போடுவதுதான் குற்றம் அல்லது முன்பே கொடுத்து ஓட்டுக் கேட்பதுதான்  குற்றம்.

அதனால் எந்த வாக்காளரும் குற்றவாளிகள் இல்லை - எந்த அரசியல் வாதிகளும் சட்டப்படி குற்றவாளிகளும் அல்ல. இனிமேல் வரும் என்கிற நம்பிக்கையில் ஓட்டளிப்பார்கள் - இனிமேல் கொடுக்க வேண்டுமென்று ஓட்டுப் பெறுவார்கள்.

  • கலைஞர் நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார். அதை ஏற்கனவே ஓட்டுப் போட்டதற்கான பொருள் என்றாலும் சரி அல்லது இனிமேல் போடப்போவதற்கான பொருள் என்றாலும் சரி. வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருப்பதால் அவர் பக்கம் நிறைய ஒட்டு விழ வாய்ப்புகள் இருக்கின்றன. செல்வி இனிமேலாவது செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை - ஆனால் என்ன - எப்படி இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஒன்றும் செய்ய இயலாது.

  • ஏன் கொள்கைகளைக் காட்டிலும் [அப்படி ஒன்னு இருக்கா] - இலவசங்களை அரசியல்வாதிகள் முன்னெடுக்கிறார்கள். சொல்வதற்கு அல்லது செய்வதற்கு ஒன்றுமில்லை - மக்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை என்று வைத்துக் கொள்ளலாம் - தன்மானம் தன்மானம் என்று எல்லாரும் பேசுகிறார்களே இலவசங்கள் அந்தத் தன்மானத்தை கொடுக்கிறதா?
தன்மானத் தமிழர்கள் நாம் - நமது குழந்தைகளுக்கு லாப் டாப் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கிரைண்டர் கிடைக்கும்... தன்மானம் கிடைக்குமா?


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


இதற்கான விளக்கம்:
திரு மு.கருணாநிதி உரை



  • பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

    இலவசங்களை அள்ளி வீசும் தலைவர்கள் மக்களை என்னவாக ஆக்குகிறார்கள்? கலைஞருக்குத் தெரியாதா என்ன?


  • திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் என்ன செய்வாரோ?

    • "கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலன்னு ஒரு பழமொழி உண்டு. இலவசங்கள் யாருடைய காசிலிருந்து கொடுக்கப் படுகின்றன. எந்த அரசியல் தலைவரும் அவர்களுடைய வருமாந்த்திளிருந்தோ, லாபத்தில் இருந்தோ, செய்வது இல்லை. எல்லாமே மக்களின் வரிப் பணம்தானே. [இதனால்தான் என்னவோ நேரடி டாக்ஸ் செலுத்துபவர்கள் ஓட்டுப் போடப் போவதில்லையோ?]
    • இதைத்தான் பலர் கடைத் தங்கையை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தவறு என்றார்கள். அப்படிச் சொன்ன செல்வி அவர்களே இப்போது அவர்கள் ஒன்று உடைத்தால், நாங்கள் நான்கு உடைப்போம், என்கிறார்கள். ஏற்கனவே,  தமிழக பட்ஜெட்டில், ஏற்கனவே கோடிகள் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது... இன்னும் நிறைய விழும்.

    எது எப்படியோ?
    இனி தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும், [ஏற்கனவே தொலைக்காட்சி உள்ளது, எல்லா எலக்ட்ரானிக் பொருட்களும் இருக்கும்... கரண்ட் இருக்குமா?





    Sunday, 27 March 2011

    தேர்தல் - இம்சை அரசனும் - இழப்பும்


    கடந்த பதிவில் தேர்தலைப் பற்றிய விமர்சனம் எழுதக் காரணம் - அதற்கும் திரைப்படத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை என்பதனால்தான்.

    இப்போது தேர்தலைக் கலக்கும் காமெடியன் இம்சை அரசன் வடிவேலு. 

    தமிழக அரசியலில் கலக்கிய நடிகர்களும் உண்டு, கலங்கிய நடிகர்களும் உண்டு. 
    • சிவாஜி என்கிற அருமையான நடிகன் செய்த தவறு காங்கிரசின் பக்கமிரங்கியது. ஆனால் நல்ல நடிகன் என்பதனால் மீண்டு வர முடிந்தது. எல்லாராலும் அப்படி முடியாது.
    • ஆச்சி மனோரமா அரசியலில் இறங்கிய போதும் அதுதான் நடந்தது. ஆச்சி மசாலா பற்றி பேசினால் கேட்கலாம்.அரசியல் பேசினால்..........
    • ராமராஜன், etc .
    • சிம்ரன் கடந்த முறை காசு வாங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் போனார். சில இடங்களில் சிம்ரனைப் பார்க்கக் கூட்டம் வந்தது-  சில இடங்களில் அதுவும் இல்லை. 
    • காமெடி நடிகர்கள் - கடந்த முறை செந்திலைக் கூடவிட்டு வைக்க வில்லை. அவரும் எவ்வளவு நாளைக்குத் தான் கவுண்டமணி கையாலே அடி வாங்குவது- என்ன ஆச்சு?
    • இந்த முறை வடிவேலு?
      • என்ன ஆச்சு காமெடியன் வடிவேலுக்கு? 
      • நடிகர்களுக்கு என்று எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வெளியில் வேண்டுமானால் ரசிகர்கள் நடிகர்களுக்காக உயிரும் கொடுப்பதாக ஒரு இமேஜ் உண்டு. அவர்களே அரசியலுக்கு வருகிறபோது அதனை வேறு படுத்திப் பார்க்கின்ற மனநிலை இப்போது மக்களுக்கு வந்து விட்டது. சில நடிகர்கள் வேண்டுமானால் அதைச் சாத்தியப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை வைத்திருக்கலாம். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அது மிகச் சுலபாய் அமைந்தது.  சிவாஜிக்கு அது அமையவில்லை. இத்தனைக்கும் சிவாஜி அவரை விட சிறந்த நடிகர்தான்.
        • ரஜினியை விட ஆச்சி சிறந்த நடிகைதான் என்ன ஆயிற்று?
      • செல்வி ஜெயலலிதாவே மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கட்சியின் தலைமையையே வந்து அடைய முடிந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே இருந்த கட்சி, அவரும் அதில் இருந்த காட்சி எலாருக்கும் தெரிந்த போதும்... அப்புறம் என் நம் நடிகர்கள் இன்னும் முயற்சிக்கிறார்கள். 
      • வடிவேலு - சிறு குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு மாதிரி இருந்த வடிவேலு, இந்த தேவையற்ற நுழைவு மூலம், தனது பெயரை, தனது மதிப்பை, தனக்கென்று இருந்த ரசிகர்களை, கட்சி தாண்டி இருந்த ரசிகப் பெருமக்களை நிறைய இழந்து விடுவார். விஜய காந்த் கட்சியிலிருந்து கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு - இனிமேல் அது இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. 
      • மற்றவர்களை கேலி செய்வதை விட்டு தானே கேலிப் பொருளாய் இருந்ததன் மூலம் பிறரைப் புண்படுத்தாமல் எல்லார் மனதிலும் அவரால் இடம் பிடிக்க முடிந்தது. இப்போது அது அப்படியே மாறிப் போனது.
        • ஒரு படத்தில் கதா நாயகனாய் நடித்ததோடு முடித்துக் கொண்டிருக்க வேண்டிய வடிவேலு அடுத்த படத்திற்கு ஆசைப் படலாமா?  இம்சை அரசன் என்கிற இந்தப் படமும் அவரே காமெடியன் என்பதால்தான் ஓடியது. 
        • திடீரென்று வடிவேலுவுக்கு இம்சையின் இரண்டாம் நாயகன் நினைவுக்கு வந்து விட - இந்த அரசியல் பிரவேசம்.
        • மீண்டும் அவருக்கு இந்திரலோகத்தில் அழகப்பனை நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. 
        • வடிவேலு இனிமேல் எல்லாப் படங்களுக்கும் வர மாட்டார். விஜயின் கூட்டணி இருக்காது.  
        • ஒரே வழி, கருணாஸ் போல சன் குழுமம் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கலாம்.
        • நடிகர்கள் என்றுமே பயன்படுத்தப் படுவார்கள் என்பதை வடிவேலு மிக விரைவில் அறிந்து கொள்வார். அதிலும் தி.மு.க.வில். வைகோவையே கழற்றி எறிந்தவர்களுக்கு, வடிவேலு ஒன்றுமே இல்லை - சின்ன காமெடிப் பீஸ். ஆனால் இதை வடிவேலு உணரும் போது, அவர் ஆயிரக்கணக்கான ரசிகர்களை இழந்திருப்பார், நூற்றுக்கணக்கான படங்களை இழந்திருப்பார், பல எதிரிகள் உருவாகியிருப்பார்கள் - ஆட்சி மாறும் போது தேவையில்லாத நிகழ்வுகளும் அரங்கேறும். 

      • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகிறார்கள்? சின்னத் திரைக்கும் பெரிய திரைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு போக ஆசைப்படும் ஆட்கள் தான் அதிகம். பெரிய திரையில் இருந்து அதைவிடப் பெரிய திரைக்கு போக விரும்புவார்கள். பெரிய திரைப்படம் - அரசியல் களம். எனவே அங்கே படையெடுக்கிறார்கள். மும்பை போக முடிந்தவர்கள் அங்கே போக விரும்புவார்கள் - முடியாதவர்கள் இங்கேயே முயற்சிக்கிறார்கள். அப்படித்தான், நடிகர்கள் -ராமராஜன், கார்த்திக், சரத்குமார், செந்தில், ஆச்சி, சிம்ரன், குஷ்பு, என்று பட்டியல் நீளும். இப்போது வடிவேலு அவ்வளவே. இங்கிருந்து கவிழ்ந்தவர்கள் பட்டியல் அவருக்கு தெரிய வேண்டியது அவசியம். அவரால் இந்த திரை அரங்கில் வெற்றி பெற முடியாது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அவருடைய பாஷையிலேயே சொல்லப் போனால் - அவர் ஒரு டம்மி பீஸ். அல்லது "அவரை வைச்சுக் காமெடி பண்றதை' புரிஞ்சுக்காத காமெடியன்.

      • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகின்றனர்? தங்களது ஈகோ வைத் தொடுவதில் இருந்து ஆரம்பமாகிறது. யார்? நீயா நானா? இந்த நிகழ்ச்சியின் வெற்றியும் இதில் தான் அடங்கியிருக்கிறது. யார் சரி - யார் பெரியவன். ஒரு கல்யாண மண்டபப் பிரச்சணையில் ஒரு கட்சியே உருவானது. வீட்டில் கல் எரிந்ததில் திரு வடிவேலு நீதி கேட்டுப் புறப்பட்டிருக்கிறார். தனது திரைப்பட வெளியீட்டிற்கு இருந்த பிரச்சனையில் உடனே தமிழக மீனவர்கள் மீது அக்கறை. அதாவது நான் பாட்டுக்கு இருந்தா பேசாம இருப்பேன். என்னையத் தோட்டா தமிழ் நாட்டைக் காப்ப்பாத்தக் கிளம்புவேன்னு கிளம்புரதுதான். வேறென்ன?
      • அரசியலில் நுழைய விரும்பும் நடிகர்கள் அல்லது காமெடி நடிகர்கள் பார்க்க வேண்டியது முதலில்  சார்லி சாப்ளினின் படங்களைத்தான். அவை சொல்லும் அரசியலை வேறு யாரும் அவ்வளவு எளிதாய், சிறப்பாய், அழுத்தாமாய் சொல்லிவிட முடியாது. 

      • நமது நடிகர்களைப் பொறுத்தவரை - மக்களாவது ' கொள்கையாவது' - எல்லாம் காமெடிதான். இதில் அசத்தப் போவது யாரு - அசிங்கப் படுவது யாருன்னு போகப் போகத் தெரியும்.

    Wednesday, 23 March 2011

    தேர்தல் நாடகம் - ஒரு திரைப்பட விமர்சனம்

    தேர்தல் நாடகம் - திரைப்படம்

    • தேர்தல் என்பதும் அதனை ஒட்டிய கூட்டணி நிகழ்வுகளும் திரைப்படங்களுக்கு மேலாக நடந்திருக்கிறது. 
    1 . கழகமும் காங்கிரசும் 
      • கலைஞர் கடந்த முறை மத்திய அரசில் கேட்ட அமைச்சகம் கிடைக்கவில்லை என்றவுடன் திரும்பி சென்னை வந்தார். இம்முறை கலைஞர் பாணியை காங்கிரசும் பின் பற்றத் தவறவில்லை.
      • இம்முறை டெல்லி சென்றபோது பல மணி நேரம் காத்திருந்தது மட்டுமல்ல, மிகப் பெரிய ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார்.
      • காங்கிரஸ் அதிக சீட்டு கேட்கும் என்றவுடன் - பா. ம.க. எங்கள் கூட்டணியில் இருக்கிறது என்ற புதிய காட்சி அரங்கேறியது.
        • அந்தக் காட்சியின் உள் காட்சிகள் மிகவும் சுவராசிய மானவை.
        • பா. ம.க. நாங்கள் இல்லை என்றது. 
        • அதன் பிறகு கழகத் தலைவர் "அவர்களே இல்லை என்ற பிறகு நாங்கள் என்ன சொல்லுவது என்றார்...
        • இறுதியில் சுபம்.
      • இந்த எதிர் பாராத திருப்பத்தால், காங்கிரஸ் சீட்டுகளைக் குறைவாகக் கேட்கும் அல்லது குறைத்துக் கொடுத்து விடலாம் என்று அவர் எழுதிய நாடகக் காட்சியை விட காங்கிரஸ் திகில் பட திரைக் கதையைக் கையில் எடுத்தது.
      • 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. இதனால், ஒன்று கலைஞர் வெளியேறுவார் அல்லது தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கொக்கிப் பொடி போட்டது.
      • இது திரு ராசா அல்லாமல் திரு. கருணாநிதியின் குடும்பத்தவருள் ஒருவரென்றால் இந்தப் படம் எப்போதோ காங்கிரஸ் எதிர் பார்த்த படி முடிந்திருக்கும். எனவே, மீண்டும் ராசாத்தி அம்மாள், கனிமொழி என்று கொஞ்சம் சீண்டிவிட ...
        • இடையில் திரு வீர மணி அவர்கள் 'நட்புக்காக' சிறப்பு வேடம் பூண்டு சில அறிக்கைகள் விட...
        • காங்கிரஸ் எதற்கும் மசிவதாய் இல்லை. 
        • மிக வலுவான ஏதோ ஒரு துருப்புச் சீட்டு அவர்கள் கையில் கிடைத்து விட, கலைஞர் தனது சாணக்கியத் தனத்தை நொந்துகொண்டே  [அல்லது வேறு வழியில்லாமல் - அப்படியும் சாணக்கியத் தனம்தான் ]  எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்ள ஒரு வழியாய் காங்கிரசுக்கு எதிர் பாராத வெற்றி.. காங்கிரஸ் இப்போதே வெற்றி பெற்று விட்டது.
        • இந்த நாடகத்தைத் தொடங்கி வைத்தவர் திரு கலைஞர். இதில் மேடைக்கு வராமலே நடித்தவர்கள் - சி.பி. ஐ. அதிகாரிகள். இதைத் திரைப் படமாக மாற்றி இயக்கியவர் திருமதி சோனியா காந்தி. இணை இயக்கம் நிறையப் பேர். காமெடி ரோல் திரு இளங்கோவன். Tragic முடிவு திரு ராசாவுக்கு [ராசியில்லா ராசா]. 
        • வருத்தம் கலைஞருக்கு. காரணம் - தன்னை மிஞ்சும் அளவுக்கு வசன கர்த்தாக்களையும் இயக்குனரையும் இப்போது அவர் கண்டு கொண்டு விட்டதால். [இனியாவது திரைப் படங்களுக்கு தலைவர் வசனம் எழுதுவதை விடுவாரா?]
        • எது எப்படியெனினும் வெளியில் சுபம். 
      • ஆனாலும் ஒருவேளை தி. மு.க வென்றால் நிச்சயம் இதன் இரண்டாம் பாகம் மிகவும் விறு விருப்பை வெளி வரும். அதுவரை திரு. ராசா, காங்கிரசின் பிடியில் தான் இருப்பார். 
    2 . கழகமும் - கழகமும்
      • ஒரு பக்கம் விறு விறுப்பாய்,  நாடகம் அரங்கேற, மறு பக்கம் அ.தி.மு.க.வும் தன பங்கு நாடகத்தை அரங்கேற்றியது. காங்கிரஸ் தன் பக்கம் வரும் என்று எதிர் பார்த்தது. அது நடக்கிற மாதிரி இல்லை. முதலில் அ.தி.மு.க. ஆதரவை அறிவித்தவர் - நடிகர் கார்த்திக். வழக்கம் போல, தானே நடிகர், தானே இயக்குனர், தானே வசனம் என்று நிரூபித்து, கார்த்திக்குற்கு ஒரு சீட்டு கூட கொடுக்காமல் அந்த சீனை முடித்து விட்டார்.
      •   அதன் பிறகு விறுவிறுப்பு ஒன்றும் இல்லாமல், இது சாதா நாடகம் என்கிற அளவிற்கு, யார் வந்தாலும் சீட்டுக் கொடுத்து அவர்களை அரவணைத்தது இது இவர் படம் தானா அல்லது வேறு யார் படத்திற்கும் மாறி வந்து விட்டோமா என்கிற அளவிற்கு சுவாராசியமே இல்லாமல்தான் போனது. 
      • நாடக அரங்கிற்கு வெளியே, சிறப்புத் தோற்றமாக, இம்முறை திரு. மு.க. அழகிரி, அவர்கள் - "திரு விஜயகாந்த் அவர்கள் தன் மானம் மிக்கவர், ரோஷம் மிக்கவர், என் நண்பர் " அவர் அ.தி.மு.க.வில் எல்லாம் சேர மாட்டார் " என்று சொல்லி உசுப்பேத்திவிட்டாலும் - அது புஸ்-ன்னு போக, தே.தி.மு.க. நிறைய இடங்கள். 
      • விறு விருப்பில்லாமல் சென்றது பிடிக்காமல், கூட்டணித் தலைவர்கள் சென்றவுடனேயே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேட்ட பல இடங்களில் அ.தி.மு.க. தனது இடங்களென அறிவிக்க பிடித்தது சூடு.
      • எதிர்பாராத உள்காட்சி 
        • இம்முறை உள்காட்சிக்குக் காரணம் [மேலே திருமதி. சோனியா காந்தி போல]  செல்வி. ஜெயலலிதா.  பல ஆண்டுகளுக்கு முன்பு த.மா.கா. உதயமானபோது எப்படி இருந்ததோ அப்படி மீண்டும் ஒரு புதிய கட்சி இல்லையென்றாலும், புதிய கூட்டணியாவது உருவாகும் என்ற சூழலில், பதட்டம். செல்வி ஜெயலலிதாவின் உருவ பொம்மை எரிப்பு [நரசிம்ம ராவின் உருவ பொம்மை எரிப்பை நினைவில் கொள்க]... 
        • அடுத்த நாளே நிலைமை தலைகீழாய் மாறிப் போனது. 
        • நல்ல வாய்ப்பைத் தவற விட்டவர்கள் - தே.தி.மு.க. கடந்த முறையே, ஏறக்குறைய இருபத்தி ஏழு லட்சம் வாக்குகளுக்கு மேலே வாங்கியவர் இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தியிருந்தால், பல சுவராசியமான காட்சிகள் முதல் படத்தில் அமைந்தது போல நடந்திருக்கும்.
      • ஆனால், செல்வி. ஜெயலலிதா, தானே இயக்குனர், தான் இயக்கும் படியே அனைத்தும் நடக்கும் என்று, எந்த வித புதிய காட்சிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இந்த விஷயத்தில், திரு.கலைஞரை விட மிகச் சிறந்த இயக்குனர் என்ற  தகுதி அவருக்கு உண்டு. 
        • சிறந்த நடிகர்கள் - அம்மா அம்மா அம்மா. சிறந்த நடிகை, சிறந்த வில்லி, கருணை மிகுந்த அம்மா, எல்லாமே அவர்தான். சிறந்த காமெடியன்கள், கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள். Trajic முடிவு திரு.வை.கோவிற்கு [வேதனையில் வை.கோ]. அடுத்த trajic குணச்சித்திர நடிகர் திரு. சீமான். சீனுக்கு வராத tragic ஹீரோ திரு.விஜய் அவர்கள்.   உள்ளுக்குள்ளே கூட்டணித் தலைவர்கள் முனு முனுத்தாலும், வெளியில் சுபம். எல்லாரும் ஒரே மேடையில் தோன்றுவர்.
      • ஆனாலும் ஒருவேளை, அ.தி.மு.க. வெற்றி பெரும் பட்சத்தில், விறு விருப்பான இரண்டாம் பாகம் நிச்சயமாய் வெளிவரும். தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளின் நிலை இப்படி என்றால் .... 
    • 3 . கட்சியும் கழகமும்
      • படமே எடுக்காமல் மிகவும் நல்ல நிலைய அடைந்தவரும் உண்டு, மிகவும் மோசமான நிலையை அடைந்தவரும் உண்டு. 
      • பா.ம.கட்சி, எதிர்பார்த்து எதிர்பார்த்து, தூது விட்டு ஒன்றும் நடக்காமல் போய் எதிர் பாராமல் அடித்தது லக்கி பிரைஸ். இடையில் கொஞ்சம் வசனம் எழுதலாம். கொஞ்சம் இயக்கலாம் என்று பார்த்தது - ஆனால் அடக்கி வாசித்து மரியாதையோடு சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது. 
      • தானும் நடித்துக் கொண்டிருக்கிறோம், திரைப்படத்தில் இருக்கிறோம் என்று மிகவும் சுறுசுறுப்போடு  சீமானை உள்ளே அழைத்து வந்து ரொம்ப நம்பிக்கையோடு இருந்த ம.தி.மு.கழகம், கல கலத்துப் போகும் அளவிற்கு பேச்சே இல்லாமல் போய் விட்டது. பா.ம.க. வாவது பேச முயற்சித்தது. இவருக்கு அதுவும் முடியவில்லை. படமும் இல்லை, வசனமும் இல்லை. முயற்சியும் இல்லை. ஆக மொத்தத்தில் இப்போதே தோற்ற மூத்த தலைவர். நடிக்காமலே களைத்த தலைவர் - இயக்காமலே இயக்கம் இழந்த தலைவர். இது இப்படி ஆகுமென்று யாருக்குத் தெரியும். அம்மாவிற்கு விசுவாசமாய் இருந்தால் இப்படியும் நடக்கும்.
      • ஆனாலும், திரு. வை. கோ. "தனிக்காட்டு ராஜா" வாக இப்போது இருப்பது, மிகவும் பாராட்டுக்குரியது.  இதுதான் அவருக்கு எதிர்பாராத திரைப் படம். இதில் தனது கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்று வாக்களிக்க பிரச்சாரம் செய்வாரானால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • ஒரு விதத்தில் பார்த்தால் இப்போதே காங்கிரசு வெற்றி, ம.தி.மு.க. தோல்வி. எனவே இனிமேல் வெற்றி பெற வேண்டியது அ.தி,.மு.க.வா அல்லது தி.மு.க.வா என்பது மே. பதின்மூன்றுதான் தெரியும்.  

    • அதன் பிறகே இரண்டாம் பாகம் தொடரும் - இம்முறை இன்னும் விறுவிறுப்போடு.