Tuesday, 5 April 2011

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா?

இந்தியாவிடம் உண்மையிலேயே உலகக் கோப்பை இருக்கிறதா என்கிற கேள்வியை சில பத்திரிக்கைகள் முன்வைக்கின்றன?
உண்மையான கோப்பையின்  மதிப்பு ஏறக்குறைய எண்பதாயிரம் பவுண்டுகளாம் [அதாவது 130, 000 டாலர்கள் - அதாவது ஏறக்குறைய 57 லட்சங்கள்]. இதிலெல்லாமா விளையாடுவீங்க.

உண்மையான கோப்பை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதாகவும், வெற்றி பெற்ற போது கொடுக்கப் பட்ட கோப்பை "மாதிரிக் கோப்பை" என்று ஒரு சாரரும் -  இல்லை, கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பதுதான் மாதிரிக் கோப்பை என ஐ.சி.சி. யும் சொல்கிறது.

உள்ளேயே இருப்பது உண்மையான கோப்பை என்றால் மாதிரிக் கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப் பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை இது இலங்கையில் வைக்கப்பட்டது அங்கிருந்து இங்கே கொண்டு வரப்பட்டது என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறை விளையாடும் போது இந்தக் கோப்பையைக் காண்பித்து, "this is what they are playing for" என்று வர்ணனையாளர்கள் சொல்லுவதைக் கேட்டோமே அதெல்லாம் அண்டப் புழுகா?

ஒரு கோப்பையைக் கொடுக்கிற போது எதற்கப்பா மாதிரிக் கோப்பை.
தமிழக சட்டப் பேரவைக் கட்டிடம் திறப்பு விழாவில், கோபுரம்தான் தோட்டா தரணியை வைத்து சில கோடிகளுக்கு செட் போட்டார்கள் - உலகக் கோப்பையிலுமா? தோனி - நீ தூக்கிக் காட்டுவது போலிக் கோப்பையா?

கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒரு கேள்வி
கோப்பையை உள்ளே அனுமதிக்க "இறுதிப் போட்டியை காண சில டிக்கெட்டுகள் கேட்டதாகவும் - அதைக் கொடுக்க முடியாமல் கோப்பையை அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் - அங்கிருந்து துபாய் எடுத்துச் சென்று விடுகிறோம் என்றார்களாம். என்னய்யா இது. ஒரு நாட்டின் வருமானத்தைப் பார்க்காமல், வெறும் டிக்கெட்டுக்காக விலைபேசும் அதிகாரிகள் இருக்கிற வரை, எப்படி நாடு முன்னேறும்? 

சரி ஐ. சி. சிக்கு ஒரு கேள்வி - 
முதலிலேயே உண்மையான கோப்பை நாட்டுக்குள் வந்து விட்டது என்றால் - எப்போது வந்தது - அதற்கான வரியைக் கட்டிதான் உள்ளே கொண்டு வந்தீர்களா? அப்படியானால் எந்த வழியாக - எவ்வளுவு கட்டினீர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாய் இதுதான் உண்மையான கோப்பை என்று நாங்கள் உரசிப் பார்த்தும் சொல்ல முடியாது. இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற போதும் போலிக் கோப்பையா நம் கைக்குக் கிடைக்க வேண்டும்?

எதுவாய் இருந்தால் நமக்கென்ன? வாருங்கள் ஐ. பி. எல். லிற்கு நேரமாகி விட்டது. அந்த பிசினசிலும் பங்கெடுப்போம்? 

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருந்து கொண்டேதான் இருப்பர்.

தொடர்புடைய செய்திகளுக்கு இங்கே சுட்டவும்.



Saturday, 2 April 2011

கிரிக்கெட்டும் GLADIATOR -ம்

கிரிக்கெட் -
  • இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொண்டிருக்கும் இன்னுமொரு தொழில். [முதல்  தொழில் - சினிமா]  உலகப் போட்டியின் மூலம் ஏறக்குறைய 1476 கோடி ரூபாய்கள் ICC -க்குக் கிடைக்கும் எனவும், இதை நடத்துவதற்கு வெறும் 571 கோடி செலவு எனவும், இதில் 45 கோடிக்கு வரிவிலக்கு இந்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது என்பது செய்திகளில் வெளிவந்திருக்கிறது. 
  • மொஹாலி - போர் 
  • இந்தியப் பாகிஸ்தான்  கிரிக்கெட் மிகப் பெரிய அளவிற்கு அல்லது கிரிக்கெட்டை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றிருக்கிறது.
  • இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கு, முகேஷ் அம்பானி மட்டும் 5 கோடி செலவு செய்து மூன்று corporate Box பதிவு செய்திருக்கிறார்.
  • அன்று 10 seconds விளம்பரம் செய்ய 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பத்து நிமிட விளம்பரத்திற்கு இவ்வளவு என்றால் மொத்தம் எவ்வளவு வருமானம் என்று நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  அன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தொலைக்காட்சி முன்பு இருக்கும் என்பதால் இது அவ்வளவு முக்கியத் துவம் பெற்று எவ்வளவும் செலவு செய்யத் தயாரயிருக்கிரார்கள். லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
  •  அரசியல் தளத்தில் - இரு நாட்டு பிரதமர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று முக்கிய காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அங்கே அணிவகுத்து இருக்கிறார்கள். திரைப் படத் துறையில், அமீர் கான், ப்ரீத்தி, ஷில்பா ஷெட்டி, நம்ம ஊரு தனுஷ் என்று பலரும் இந்தப் போட்டிக்கென பதிவு  செய்து நேரடியாக கண்டிருக்கிறார்கள். 
  • அப்படி என்ன இந்தப் போட்டிக்கு அப்படி முக்கியத் துவம்?
  • முதலாவது இது ஒரு போர். 
    • இரு நாடுகளுக்கு இடையிலான போர். முன்பெல்லாம் அல்லது இப்போதும் வேறு பகுதிகளில் நடப்பது போலல்லாமல், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில், அவர்களது பிரதிநிதிகள் கிரிக்கெட் விளையாண்டு, வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்து கொள்வார்கள். 
    • இந்தப் போட்டியின் வழியாய் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானை அடக்கி விட்டது. இனிமேல் பாகிஸ்தானின் பிரதமே, இந்தியப் பிரதமர் சொல்வதையெல்லாம் கேட்பார்.
  • இரண்டாவது - இதனால் இது நாட்டின் தேசப்பற்றை வெளிப் படுத்தும் இடமாகி விட்டது. பாகிஸ்தான் வெற்றி பெற வாய்பிருக்கிறது என்று யாராவது சொன்னால் உடனே அவன் செத்தான். ஒருவேளை அவன் இஸ்லாமியனாக இருந்து விட்டால் அவ்வளவுதான். 
    • நடிகர் ஆர்யா ஏதோ சொல்லப் பொய் வம்பில் மாட்டிக் கொண்டார். உடனே இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து இப்படி வக்காளத்து வாகுவது நல்லதல்ல என்று பெரிய தேசத் துரோக அளவுக்குப் போய் விட்டது. நல்ல வேளை அவர் ஒரு இஸ்லாமியராக இல்லை. தப்பித்தார். இப்படி அவர் சொன்னது நடந்திருந்தால், அவ்வளவுதான், நான் கடவுள் - கிழித்திருப்பார்கள். பிரதமர் வரை செய்தி போய், கிரிக்கெட் சூதாட்ட முக்கியப் புள்ளியாக, விளையாட்டின் முடிவை முன்கூட்டியே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த புள்ளியாக அவர் மீது வழக்கிட்டு உள்ளே வைத்திருப்பார்கள். இப்போது ஆர்யா தப்பித்தார். 
    • அதாவது இன்றைய இஸ்லாமியர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிக்காட்ட ஒரே இடம் - கிரிக்கெட்தான். கிரிக்கெட்டில் பற்றில்லாதவர்கள் தேசத்தில் பற்றில்லாதவர்கள். 
  • மூன்றாவது, நாம் நாகரிகமானவர்களாகி விட்டோம். 
    • discovery Chanel - லில், சிங்கம் ஓடிச் சென்று மானைப் பிடித்து இழுத்து அறுக்கும் போது எனக்கு குலையே நடுங்கி விடும் என்று இன்றைய உலகில் பல பேர் சொல்லுவார்கள். சில பேர் அதில் லயித்து இருப்பதும் உண்டு. அடிப்படையில் நம் எல்லாரிடமும், இந்த லயித்துப் போகும் மன நிலை இருக்கும். மனிதன் மனிதனை வெட்டிக் கொன்ற காலம் இப்போது நினைத்தாலும், நாம் அநாகரிக மனிதர்கள் என்று சொல்லுவோம். அதிலிருந்து நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். கொஞ்சம் நாகரிகம் அடைந்திருக்கிறோம். 
    • இருந்தாலும், நமக்குள் இருக்கும் வக்கிரம், பழி வாங்கும் எண்ணம், இது நாட்டின் தன்மானம் என்ற உணர்ச்சியின் வெளிப்பாடு, இதெல்லாம் வேற்று உருவம் பெற்றிருக்கிறதே தவிர, இன்னும் ஒன்றும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. அமெரிக்க வீரர்கள் video games - ல் சுட்டுக் கொள்வது போல சுட்டுக் கொன்ற காட்சி - விக்கி லீக்சில் பெரிய செய்தியானது. இங்கே ஒரு boundary அல்லது sixer அடித்தல், அது எதிரி வீரனின், தலையைக் கொய்து அதை bat - ஆல் அடிப்பதாக நினைத்துக் கொள்வதையும், உடனே பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பதையும், நாம் என்ன வென்று சொல்வது. 
    • போர் நடத்த முடியாத வருத்தத்தில் நாம் இதையே colosseum போலவும், அதில் இருக்கும் வீரர்களை Gladiators போலவும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இரு நாட்டின் தலைவர்களுக்கு முன்பு, தன் தேசத்தின் கவுரவமும், பெருமையும் தான் வீரர்களின் கண் முன்னே நிற்குமே தவிர, எந்த வித மன அழுத்தமுமின்றி விளையாட முடியுமா என்ன?   
    • நமது பழி வாங்கும் எண்ணம்,  violence இவைகளையெல்லாம் வெளிப் படுத்த மாற்று வழியாக இதைப் பார்க்கத் தொடங்கி விட்டோம். சிறுவர்களுக்கு video Games, நமக்கு கிரிக்கெட். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம்.
    • நான் கிரிக்கெட் பார்க்க வில்லை என்று சொன்னால், நான் தேசத் துரோகியாகிவிடுவேன். விளையாட்டு முடிந்த பிறகு, highlights பார்த்தேன். முதலில் சேவாகும், தெண்டுல்கரும், களமிறங்கியபோது, அவர்களின் முன்சென்று அவர்களோடு நடந்து சென்ற கேமிராவின் பதிவும், ஸ்டேடியத்திலிருந்து வந்த இரைச்சலும், உடனே எனக்கு Gladiatorai த்தான் நினைவூட்டியது. [நான் விளையாட்டிற்கோ, கிரிக்கேட்டிற்கோ எதிரியில்லை, இதையெல்லாம் எழுதக் காரணம் முதல் ஐந்து பாராக்கள்.]
  • போரின் அடுத்த நிலை -
    • பணம் கொடுத்து அல்லது வீரர்களை விலைக்கு வாங்கி போட்டியின் முடிவை முன்பே நிர்ணயம் செய்வது என்பதெல்லாம் குற்றம்தான். பணம் கொடுப்பது மட்டும்தான் குற்றமா. இப்படி நாட்டுத் தலைவர்கள் மன அழுத்தம் கொடுப்பதுதான்.
    • பாகிஸ்தானில் அரை நாள் அனைத்திற்கும் விடுமுறை. ரவி சாஸ்திரி, முதலில் சொல்லுகிறார், "No body would mind even if somebody does not turn to office today - it is such an important match." அறிவிக்கப்படாத விடுமுறை. 
    • அனைத்து அரசியல் தலைவர்கள், பிசினஸ் நண்பர்கள், சினிமா ஸ்டார்கள், இப்படி எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்களே அவர்களிடம் பணமில்லாத ரசிகனின் உண்மையான ரசனை இருக்குமா.?
  • ஐந்தாவதாக - இது இன்னுமொரு முக்கியத் தொழில்
    • கிரிக்கெட், இன்றைய நவீன உலகின் பணம் கொழிக்கும் விளையாட்டு. அதற்காகவே அவர்கள் சில போர்களை உருவாக்குகிறார்கள். ASHES Series - ஆஸ்திரேலியா இங்கிலாந்துப் போர். இந்தியா பாகிஸ்தான் போர். விளம்பரங்கள் வழியாக பணம் கொழிக்க, வீர்கள் வழியாக தங்களின் பொருட்களுக்கான விளம்பரம் செய்ய, இது தொழில். சாதாரண ரசிகன் எப்போதும் சாதாரண ரசிகன்தான். 
    • சிம்பு தேவனின் இம்சை அரசனில் கிரிக்கெட் பாருங்கள்.
    • "There are only two religions in India: Cricket and Cinema" ஒரு ரசிகை போர்டு ஒன்று பிடித்துக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை, "There is only one language - that is business."

  • இதனால் சொல்லப்படும் ஜோக் - CRICKET FOR PEACE
  • இதனால் பாதிக்கப் படுபவர்கள் வாக்காளர்கள் 
    • வலுவிழந்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்ட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், மொஹாலி செல்வதைத் தவிர்த்து தமிழகம் வந்திருந்தால் கொஞ்சம் கோஷ்டி சண்டையாவது குறைத்திருக்கலாம். 
  • இதனால் சொல்லப்படும் செய்தி 
    • இறுதிப் போட்டியை விட அரை இறுதிப் போட்டி மிகப் பெரிய போர் என்பதனால் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் - தொலைகாட்சிகள், மொஹாலி கிரிக்கெட் வாரியம், ... இப்படி பெரிய business நபர்களெல்லாம் இப்படிக் கோடிக்கணக்கில் ஒரு போட்டியில் வருமானம் பெறும்போது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு - தனது வாக்கை வைத்து business செய்வதை, வாக்காளர்கள் பணம் பெறுவதை மட்டும் இந்தத் தேர்தல் கமிஷன் தடுக்கிறதே - இது நியாயமா?
  • இன்றைய இறுதிப் போட்டியில், மன்னிக்கவும் இறுதிப் போரில் [தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையா அல்லது ..................... இந்தியாவா -]  யார் வெற்றி பெறுவார்?
    • இதை ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், பதில் சொல்லாமல் இருப்பதுதான் ஆர்யாவிற்கு நல்லது.

Comman Man - என்பது என்ன?

தடங்கலுக்கு வருந்துகிறேன்... 
கடந்த பதிவில் இக்கட்டுரையின் எழுத்துரு பிரச்சனையால் பலர் படிக்க முடியவில்லை. அந்நிய மொழியில் இருந்தது.  பிரபாகரன் அனுப்பிய கட்டுரையை அப்படியே இணைத்ததால் வந்தது. இப்போது அதை மீண்டும் எழுத்துரு மாற்றி ஒரே கட்டுரையாகத் தருகிறேன்.

பொது மக்களாய் இருங்கள்
சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள். 

அ. பிரபாகரன்

Friday, 1 April 2011

தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 2

அ. பிரபாகரன் கட்டுரையின் இரண்டாம் பகுதி.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள்.
                                                அ. பிரபாகரன்

பொதுமக்களாய் பல பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வாக்களிக்கச் செல்வதில்லை!


தேர்தல் - பொது மக்களாயிருங்கள் - 1

இது என் நண்பர்  அ. பிரபாகரன் எழுதிய கட்டுரை. அதன் முதற் பகுதி. 


பொது மக்களாய் இருங்கள் 

சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

தொடரும்....

Thursday, 31 March 2011

தேர்தல் - கதாநாயகி தேர்தல் அறிக்கை

கதாநாயகன் - கதாநாயகி என்பதெல்லாம் திரைப்படத்தில் மட்டும் என்றில்லை. நமது தேர்தல் அரங்கத்திலும் மிகப் பெரிய இடத்தை வகிக்கிறது. கடந்த தேர்தலில் கதாநாயகன் - இப்போது இன்னும் நிறைய இலவசங்களோடு - கதாநாயகியாக வளம் வருகிறாள் - தேர்தல் அறிக்கை.

இரண்டு மிகப் பெரிய கட்சிகள்.  ஆனால் ஒரே காட்சி - ஒரே கதாநாயகி.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க  - இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஒன்றும் இல்லை. வேண்டுமானால் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கச் சொல்லி போட்டி நடத்தலாம். 

தமிழக அரசியலில் இந்தக் கதா நாயகிக்கான வேறு பாடெல்லாம் ஒன்றுமில்லை. தொப்புள் தெரிய உடை உடுத்தி கவர்ச்சியோடு நடனமாடும் பெண்  மிகச் சிறந்த கதாநாயகியாக ஏற்றுக்கொள்ளப் படுவது போல, இலவசங்களால் நிறைந்திருக்கிற அறிக்கை மிகக் சிறந்ததாக அங்கீகாரம் பெரும் என்று நினைத்து வெறும் இலவச அறிவிப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது.

இலவச லேப்டாப் தொடங்கி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி எல்லாம் அறிவிக்கப் பட்டாகிவிட்டது. எல்லா கட்சிகளும் இதையே வழங்குகின்றன. கடந்த முறை எப்படி இப்படிக் குறைந்த  விலையில் அரிசி கொடுக்க முடியும் என்று கேட்ட செல்வி. ஜெயலலிதா, பிரச்சாரத்தின் பொது, கூட்டணிக் கட்சிகளுக்கு கூடச் சொல்லிக் கொள்ளாமல், திடீரென தானும் அரிசி வழங்குவதாகக் குறிப்பிட்டார். இப்போது முன்பே அவரும் லாப்டாப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்.

இலவசங்கள் என்பது பணம் கொடுத்து ஆட்சிக்கு வருவதில் அடங்காது. அது வாக்குறுதி. முன்பே வாங்கி ஓட்டுப் போடுவதுதான் குற்றம் அல்லது முன்பே கொடுத்து ஓட்டுக் கேட்பதுதான்  குற்றம்.

அதனால் எந்த வாக்காளரும் குற்றவாளிகள் இல்லை - எந்த அரசியல் வாதிகளும் சட்டப்படி குற்றவாளிகளும் அல்ல. இனிமேல் வரும் என்கிற நம்பிக்கையில் ஓட்டளிப்பார்கள் - இனிமேல் கொடுக்க வேண்டுமென்று ஓட்டுப் பெறுவார்கள்.

  • கலைஞர் நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார். அதை ஏற்கனவே ஓட்டுப் போட்டதற்கான பொருள் என்றாலும் சரி அல்லது இனிமேல் போடப்போவதற்கான பொருள் என்றாலும் சரி. வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியிருப்பதால் அவர் பக்கம் நிறைய ஒட்டு விழ வாய்ப்புகள் இருக்கின்றன. செல்வி இனிமேலாவது செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை - ஆனால் என்ன - எப்படி இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஒன்றும் செய்ய இயலாது.

  • ஏன் கொள்கைகளைக் காட்டிலும் [அப்படி ஒன்னு இருக்கா] - இலவசங்களை அரசியல்வாதிகள் முன்னெடுக்கிறார்கள். சொல்வதற்கு அல்லது செய்வதற்கு ஒன்றுமில்லை - மக்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது கொள்கை என்று வைத்துக் கொள்ளலாம் - தன்மானம் தன்மானம் என்று எல்லாரும் பேசுகிறார்களே இலவசங்கள் அந்தத் தன்மானத்தை கொடுக்கிறதா?
தன்மானத் தமிழர்கள் நாம் - நமது குழந்தைகளுக்கு லாப் டாப் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கிரைண்டர் கிடைக்கும்... தன்மானம் கிடைக்குமா?


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


இதற்கான விளக்கம்:
திரு மு.கருணாநிதி உரை



  • பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

    இலவசங்களை அள்ளி வீசும் தலைவர்கள் மக்களை என்னவாக ஆக்குகிறார்கள்? கலைஞருக்குத் தெரியாதா என்ன?


  • திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் என்ன செய்வாரோ?

    • "கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலன்னு ஒரு பழமொழி உண்டு. இலவசங்கள் யாருடைய காசிலிருந்து கொடுக்கப் படுகின்றன. எந்த அரசியல் தலைவரும் அவர்களுடைய வருமாந்த்திளிருந்தோ, லாபத்தில் இருந்தோ, செய்வது இல்லை. எல்லாமே மக்களின் வரிப் பணம்தானே. [இதனால்தான் என்னவோ நேரடி டாக்ஸ் செலுத்துபவர்கள் ஓட்டுப் போடப் போவதில்லையோ?]
    • இதைத்தான் பலர் கடைத் தங்கையை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தவறு என்றார்கள். அப்படிச் சொன்ன செல்வி அவர்களே இப்போது அவர்கள் ஒன்று உடைத்தால், நாங்கள் நான்கு உடைப்போம், என்கிறார்கள். ஏற்கனவே,  தமிழக பட்ஜெட்டில், ஏற்கனவே கோடிகள் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது... இன்னும் நிறைய விழும்.

    எது எப்படியோ?
    இனி தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும், [ஏற்கனவே தொலைக்காட்சி உள்ளது, எல்லா எலக்ட்ரானிக் பொருட்களும் இருக்கும்... கரண்ட் இருக்குமா?





    Sunday, 27 March 2011

    தேர்தல் - இம்சை அரசனும் - இழப்பும்


    கடந்த பதிவில் தேர்தலைப் பற்றிய விமர்சனம் எழுதக் காரணம் - அதற்கும் திரைப்படத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் ஒன்றுமில்லை என்பதனால்தான்.

    இப்போது தேர்தலைக் கலக்கும் காமெடியன் இம்சை அரசன் வடிவேலு. 

    தமிழக அரசியலில் கலக்கிய நடிகர்களும் உண்டு, கலங்கிய நடிகர்களும் உண்டு. 
    • சிவாஜி என்கிற அருமையான நடிகன் செய்த தவறு காங்கிரசின் பக்கமிரங்கியது. ஆனால் நல்ல நடிகன் என்பதனால் மீண்டு வர முடிந்தது. எல்லாராலும் அப்படி முடியாது.
    • ஆச்சி மனோரமா அரசியலில் இறங்கிய போதும் அதுதான் நடந்தது. ஆச்சி மசாலா பற்றி பேசினால் கேட்கலாம்.அரசியல் பேசினால்..........
    • ராமராஜன், etc .
    • சிம்ரன் கடந்த முறை காசு வாங்கிக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் போனார். சில இடங்களில் சிம்ரனைப் பார்க்கக் கூட்டம் வந்தது-  சில இடங்களில் அதுவும் இல்லை. 
    • காமெடி நடிகர்கள் - கடந்த முறை செந்திலைக் கூடவிட்டு வைக்க வில்லை. அவரும் எவ்வளவு நாளைக்குத் தான் கவுண்டமணி கையாலே அடி வாங்குவது- என்ன ஆச்சு?
    • இந்த முறை வடிவேலு?
      • என்ன ஆச்சு காமெடியன் வடிவேலுக்கு? 
      • நடிகர்களுக்கு என்று எல்லாத் தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். வெளியில் வேண்டுமானால் ரசிகர்கள் நடிகர்களுக்காக உயிரும் கொடுப்பதாக ஒரு இமேஜ் உண்டு. அவர்களே அரசியலுக்கு வருகிறபோது அதனை வேறு படுத்திப் பார்க்கின்ற மனநிலை இப்போது மக்களுக்கு வந்து விட்டது. சில நடிகர்கள் வேண்டுமானால் அதைச் சாத்தியப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை வைத்திருக்கலாம். எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அது மிகச் சுலபாய் அமைந்தது.  சிவாஜிக்கு அது அமையவில்லை. இத்தனைக்கும் சிவாஜி அவரை விட சிறந்த நடிகர்தான்.
        • ரஜினியை விட ஆச்சி சிறந்த நடிகைதான் என்ன ஆயிற்று?
      • செல்வி ஜெயலலிதாவே மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கட்சியின் தலைமையையே வந்து அடைய முடிந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே இருந்த கட்சி, அவரும் அதில் இருந்த காட்சி எலாருக்கும் தெரிந்த போதும்... அப்புறம் என் நம் நடிகர்கள் இன்னும் முயற்சிக்கிறார்கள். 
      • வடிவேலு - சிறு குழந்தை முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் நிஜாம் பாக்கு மாதிரி இருந்த வடிவேலு, இந்த தேவையற்ற நுழைவு மூலம், தனது பெயரை, தனது மதிப்பை, தனக்கென்று இருந்த ரசிகர்களை, கட்சி தாண்டி இருந்த ரசிகப் பெருமக்களை நிறைய இழந்து விடுவார். விஜய காந்த் கட்சியிலிருந்து கூட அவருக்கு ரசிகர்கள் உண்டு - இனிமேல் அது இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. 
      • மற்றவர்களை கேலி செய்வதை விட்டு தானே கேலிப் பொருளாய் இருந்ததன் மூலம் பிறரைப் புண்படுத்தாமல் எல்லார் மனதிலும் அவரால் இடம் பிடிக்க முடிந்தது. இப்போது அது அப்படியே மாறிப் போனது.
        • ஒரு படத்தில் கதா நாயகனாய் நடித்ததோடு முடித்துக் கொண்டிருக்க வேண்டிய வடிவேலு அடுத்த படத்திற்கு ஆசைப் படலாமா?  இம்சை அரசன் என்கிற இந்தப் படமும் அவரே காமெடியன் என்பதால்தான் ஓடியது. 
        • திடீரென்று வடிவேலுவுக்கு இம்சையின் இரண்டாம் நாயகன் நினைவுக்கு வந்து விட - இந்த அரசியல் பிரவேசம்.
        • மீண்டும் அவருக்கு இந்திரலோகத்தில் அழகப்பனை நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. 
        • வடிவேலு இனிமேல் எல்லாப் படங்களுக்கும் வர மாட்டார். விஜயின் கூட்டணி இருக்காது.  
        • ஒரே வழி, கருணாஸ் போல சன் குழுமம் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கலாம்.
        • நடிகர்கள் என்றுமே பயன்படுத்தப் படுவார்கள் என்பதை வடிவேலு மிக விரைவில் அறிந்து கொள்வார். அதிலும் தி.மு.க.வில். வைகோவையே கழற்றி எறிந்தவர்களுக்கு, வடிவேலு ஒன்றுமே இல்லை - சின்ன காமெடிப் பீஸ். ஆனால் இதை வடிவேலு உணரும் போது, அவர் ஆயிரக்கணக்கான ரசிகர்களை இழந்திருப்பார், நூற்றுக்கணக்கான படங்களை இழந்திருப்பார், பல எதிரிகள் உருவாகியிருப்பார்கள் - ஆட்சி மாறும் போது தேவையில்லாத நிகழ்வுகளும் அரங்கேறும். 

      • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகிறார்கள்? சின்னத் திரைக்கும் பெரிய திரைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு போக ஆசைப்படும் ஆட்கள் தான் அதிகம். பெரிய திரையில் இருந்து அதைவிடப் பெரிய திரைக்கு போக விரும்புவார்கள். பெரிய திரைப்படம் - அரசியல் களம். எனவே அங்கே படையெடுக்கிறார்கள். மும்பை போக முடிந்தவர்கள் அங்கே போக விரும்புவார்கள் - முடியாதவர்கள் இங்கேயே முயற்சிக்கிறார்கள். அப்படித்தான், நடிகர்கள் -ராமராஜன், கார்த்திக், சரத்குமார், செந்தில், ஆச்சி, சிம்ரன், குஷ்பு, என்று பட்டியல் நீளும். இப்போது வடிவேலு அவ்வளவே. இங்கிருந்து கவிழ்ந்தவர்கள் பட்டியல் அவருக்கு தெரிய வேண்டியது அவசியம். அவரால் இந்த திரை அரங்கில் வெற்றி பெற முடியாது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அவருடைய பாஷையிலேயே சொல்லப் போனால் - அவர் ஒரு டம்மி பீஸ். அல்லது "அவரை வைச்சுக் காமெடி பண்றதை' புரிஞ்சுக்காத காமெடியன்.

      • ஏன் நடிகர்கள் அரசியலில் நுழைகின்றனர்? தங்களது ஈகோ வைத் தொடுவதில் இருந்து ஆரம்பமாகிறது. யார்? நீயா நானா? இந்த நிகழ்ச்சியின் வெற்றியும் இதில் தான் அடங்கியிருக்கிறது. யார் சரி - யார் பெரியவன். ஒரு கல்யாண மண்டபப் பிரச்சணையில் ஒரு கட்சியே உருவானது. வீட்டில் கல் எரிந்ததில் திரு வடிவேலு நீதி கேட்டுப் புறப்பட்டிருக்கிறார். தனது திரைப்பட வெளியீட்டிற்கு இருந்த பிரச்சனையில் உடனே தமிழக மீனவர்கள் மீது அக்கறை. அதாவது நான் பாட்டுக்கு இருந்தா பேசாம இருப்பேன். என்னையத் தோட்டா தமிழ் நாட்டைக் காப்ப்பாத்தக் கிளம்புவேன்னு கிளம்புரதுதான். வேறென்ன?
      • அரசியலில் நுழைய விரும்பும் நடிகர்கள் அல்லது காமெடி நடிகர்கள் பார்க்க வேண்டியது முதலில்  சார்லி சாப்ளினின் படங்களைத்தான். அவை சொல்லும் அரசியலை வேறு யாரும் அவ்வளவு எளிதாய், சிறப்பாய், அழுத்தாமாய் சொல்லிவிட முடியாது. 

      • நமது நடிகர்களைப் பொறுத்தவரை - மக்களாவது ' கொள்கையாவது' - எல்லாம் காமெடிதான். இதில் அசத்தப் போவது யாரு - அசிங்கப் படுவது யாருன்னு போகப் போகத் தெரியும்.