Wednesday, 12 October 2011

பாசக்கார நண்பர்களே - நேரம் ஒதுக்குங்கள்


நேற்று ஒரு மின்னஞ்சல் வரப் போய் அதன் சாரம் எல்லாருக்கும் பயன்படட்டுமே என்று இந்தப் பதிவு. 

நமது உலகில் ஒருவர் மற்றவருக்காக நேரம் செலவிடுதல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் நமக்காகப் பலர் செலவழித்த நேரங்கள் தான் நம்மை நாம் இருக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. 
அப்படி நமக்கு நேரம் செலவழித்தவர்களுக்கு மீண்டும் நாம் நேரம் செலவிடுவதுதானே தருமம்.
உடனிருந்த அம்மா, அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், பதிவுலக நண்பர்கள்... நேரம் செலவிட பிள்ளைகள் தயாராக இருந்தால் இன்றைக்கு முதியோர் இல்லங்களே தேவையில்லை.. 
ரொம்ப சீரியசான பதிவாக மாற்ற விரும்பவில்லை.
உறவுகளுக்கு - குறிப்பாக நமக்காக நேரம் செலவழிப்பவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்...

நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்வதற்கு - ஒன்றுமில்லாமல் வந்தோம் ஒன்றும் இல்லாமலலேயே போகப் போகிறோம். இதில் இடைப் பட்ட காலத்தில் நாம் இந்த உலகில் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல்வேறு நபர்களின் பங்களிப்பு. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்த்திருக்கிறோம் என்பதே கேள்வி. எத்தனை நபர்களுக்கு நன்றி என்று உள்ளத்தால் இல்லாவிடினும் உதட்டளவிலாவது சொல்லியிருப்போம்.
உயிரைக் கொடுத்த அம்மா, உலகைக் காட்டிய அப்பா, சேர்ந்து வளர்ந்த சகோதரங்கள், கல்வி கொடுத்த ஆசிரியர்கள், உணர்வு கொடுத்த நண்பர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால் அவர்களுக்கு நன்றி என்று சொன்னோமோ என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நன்றி சொல்லி அவர்களை அன்னியப் படுத்துவது அல்ல விஷயம். அவர்களுக்காக நாம் எப்படி நேரம் செலவிடுகிறோம் என்பதிலும் இருக்கிறது. 

காலம் மிக வேகமாகப் பயணிக்கும் காட்டாறு போன்றது. யாருக்கும் செவிசாய்க்காத அலை போன்றது. பல நேரங்களில் நாம் அதை உணர்வதற்கு முன்பே பல ஆண்டுகளைக் கடந்து விட்டிருப்போம். செங்கோவி இனிமேல் சனி ஞாயிறுகளில் பதிவுலகின் பக்கம் வருவதில்லை என்றும் தனது உறவுகளுக்கான நேரம் என்று வார இறுதி நாட்களுக்கு தனது வலைப்பூவிற்கு விடுமுறை கொடுத்த பாசம் - அந்த நியாயமான பாசமும் எல்லாரிடத்திலும் இருக்க வேண்டியது அவசியம். [அதுக்காக எல்லாரும் ஞாயிற்றுக் கிழமை லீவு விட்டுறாதிங்க].

இருக்கும் போது இல்லாமல் இருந்துவிட்டு - காலம் கடந்த போது இருக்க நினைத்தால்  அது நிகழாமலே போகலாம். எனவே உடனே, இன்றே, இப்போதே, இப்பவே....
 ....

சில மாதங்களுக்கு முன்பு பல ஆண்டுகளாக நான் தேடிக்கொண்டிருந்த என் ஆசிரியர் ஒருவரது மின்னஞ்சலின் முகவரியைக் கண்டு பிடித்து அவருக்கு நன்றி சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே அவரிடமிருந்து பதிலும் கூட. மனதுக்கு மிக நெருக்கமான தருணங்கள் அவை. 

வாழ்வில் இது போன்ற தருணங்கள் மிக அற்புதமானவை. அது எல்லாருக்கும் வாய்க்கும் என்றே கருதுகிறேன். 
....
"கலைஞர் - கனிமொழியை" மனதில் வைத்து இப்பதிவு எழுதப் படவில்லை.

Monday, 10 October 2011

முரண் செய்திகள்

முரண் படம் வந்தாலும் வந்தது என் கண்ணில் எல்லாம் முரணான செய்திகளாகவே படுகிறது.

  • முரண் படம் ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த STRANGERS ON A TRAIN படத்தின் [முழு விமர்சனம் பிரபாகரனின் தத்து பித்துவங்களில் பார்க்கலாம்] கதையை சுட்டு எடுத்து வந்தாலும் திரைப் படத்தின் தொடக்கத்தில் ஏதோ தன்னுடைய கற்பனையில் உதித்த கதை போல "இப்படத்தில் வரும் நபர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல" அப்படின்னு தொடங்குறது எவ்வளவு பெரிய முரண்.
  • ஜெயலலிதா வந்த பிறகு மாநகரப் பேருந்துகள் எல்லாம் பச்சைக்கு மாறுகிறதாம். அம்மையார் மோடியின் நண்பர். மோடி எப்படி என்பது நமக்குத் தெரியும். அப்படியும் ஏன்  பச்சை கலர் ஜெயலலிதாவின் கலராகிப் போனது என்பது எவ்வளவு பெரிய முரண். உண்மையில் அது காவிக் கலராகத் தானே இருக்க வேண்டும்.

  • புதுச் சேரியில் கல்வி அமைச்சர் இன்னும் பத்தாவது கூடப் பாஸ் பண்ணலையாம். கல்வி அமைச்சராக இருப்பதே எவ்வளவு பெரிய முரண். இதில் ஆள் மாறாட்டம் செய்து வேற பரீட்சை எழுதியது எவ்வளவு பெரிய கள்ளத் தனம். பத்தாவது படிச்சாத்தான் டாக்டர் பட்டம் வாங்க முடியுமோ? டாக்டர் விஜய காந்த் பத்தாவது பாஸ் பண்ணிட்டாரா?

  • சென்னையில் பல ஸ்டார் ஹோட்டல்களில் நேற்று  விபச்சாரப் புரோக்கர்களைக் கைது செய்தார்களாம். பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் என்று மட்டும் பத்திரிகைகள் எழுதிவிட்டு தனி நபர்களின் பெயர்களை வெளிப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் உதவி இல்லாமல் இது அவர்களது ஹோட்டலில் நடக்குமா என்ன? எப்படி ஒரு இருட்டடிப்பு?  அதோடு இதையும் படிங்க - அந்த புரோக்கர்கள் பாத்திமா, பரிதா பானு, சிவா மற்றும் சாந்தியாம். அதாவது மத வேறுபாடு என்பது இதில் இல்லை. [http://www.thinaboomi.com/2011/10/08/7119.html ]
  • தொலைக் காட்சிப் பேட்டி ஒன்றில், அர்விந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டம் இருப்பேன் என்று சொல்லி மிரட்டுவதற்கான உரிமை உண்டு - ஏனெனில் அவர் பாராளு மன்றத்திற்கு மேலானவர் என்று சொல்லியிருக்கிறார். அவர் மட்டுமல்ல எல்லா குடிமகன்களும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் அரசை மிரட்டும் உரிமை இருக்கிறது என்கிறார். இங்கே ஒரு ஊரே சேர்ந்து போராடுது அதை கேட்க ஆளில்லை.
    • பின்னூட்டம்
      • இதில் எல்லாரும் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள்தான். ஆனால் அதை யாரும் மதிக்கிறதில்லை என்பதுதான் முரணான சேதி. அதில் இரண்டாவது இங்கேயும் ஒரு ஊர் முழுவதுமாகப் போராடி மீண்டும் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள் எவ்வளவு தூரம் பாராளுமன்றத்திற்கு மேலானவர்கள் போராட வேண்டியிருக்கிறதும் முரன் தானே.

Friday, 7 October 2011

சாமியின் மூன்று படிப்பினைகளும் ஐந்து இலக்குகளும்


சுப்பிரமணி சாமி எப்படியும் தன்னை எப்போதும் மீடியாவின் பார்வைக்குள் வைத்திருக்கும் ஒரு வசியக்காரர். சில சமயம் காமெடியன் போலப் பேசுவார் - சில சமயம் மந்திரக் காரர் போலப் பேசுவார் - சில சமயம் விசயக் காரார் போலப் பேசுவார். இந்தியா தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றப் பட வேண்டுமென்பதில் நாம் என்ன படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஐந்து strategic திட்டங்களையும் ஒரு கட்டுரையாக [சூலை பதினாறு] வடிக்கப் போய் வழக்கை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ... தீவிர வாதி?

அப்படி என்ன குழப்பத்தை விளைவிக்கும் அளவுக்கு அதில் இருந்தது என்பதை சுருக்கித் தந்திருக்கிறேன். ஆங்கிலத்தில் படிக்க கீழ்க்கண்ட இணையத்தில் படிக்கலாம். 
சில முன்முடிவுகளோடு தான் அவர் தொடங்குகிறார். தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் மட்டுமே. அவர்கள்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

இதில் எழுதப் பட்டிருப்பவை அனைத்தும் சுப்பிரமணி சாமியின் கருத்துக்களே - எனது கோணக் கேள்விகள் மட்டும் சிவப்பில்.
அவரின் கட்டுரைக்கு  ஆதாரம்:
http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

அவரது படிப்பினை ஒன்று -
இஸ்லாமிய தீவிர வாதத்தில் ஒரு இந்து இறந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கிறான். எனவே இந்துக்கள் கூட்டு மன நிலையோடு இந்து என்பதில் ஒன்றிணைய வேண்டும். இதில் இஸ்லாமியர்களும் தங்களது முன்னோர்கள் இந்துக்கள் என்பதை உணர்ந்து இதில் ஒன்றிணைய வேண்டும். அப்படி எல்லாரும் சேர்ந்து இந்து ஆட்சியை நிறுவ வேண்டும்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் இறக்கும் போதும் எல்லா இஸ்லாமியர்களும்தானே இறக்கிறார்கள். நீங்கள் சரியென்றால் அவர்களும் சரிதானே?
 

இரண்டாவது படிப்பினை
எது நடந்தாலும் இஸ்லாமியத் தீவிர வாதத்தின் மிரட்டலுக்குப் பணியக் கூடாது.
சரி

மூன்றாவது படிப்பினை
எவ்வளவு குறைவான தீவிர வாதமாக இருந்தாலும் இந்திய இந்துக்கள் முழுவதும் ஒன்றிணைத்து தங்களது முழு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். உதாரணத்திற்கு, அயோத்யா கோவில் தாக்கப் பட்டத்திற்கு உடனே அங்கே ராம் கோவில் கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதே இடத்திலேயே மசூதி கட்டனுமா?

பரிந்துரைக்கும் ஐந்து STRATEGIC இலக்குகள்

ஒன்று - ஜம்மு காஷ்மீர் விவகாரம் - இதில் அரசு அதற்குக் கொடுத்திருக்கிற சிறப்பு ஸ்டேடசை ரத்து செய்து விட்டு அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை குடியமர்த்தி அதை இந்துக்களின் இடமாகவும், தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும்.
பாகிஸ்தான் பார்டரில்  இந்துக்களைக் குடியமர்த்தலாம் - நீங்கள் முதல் ஆளா? ராஜ பக்ஷே அங்கே பண்றதுக்கும் இதுக்கும் பெர்ய வித்யாசம் இல்லையே. அவர்தான் உங்கள் குருவா?
இரண்டு - கோவில்களில் வெடிவைத்து இந்துக்களைக் கொள்ளும் அவர்களின் முயற்சிகளுக்கு பதிலடியா இந்துக்கள் கோவில்களுக்கு அருகில் உள்ள ஏறக்குறைய முன்னூறு மசூதிகளை உடனடியாக அகற்றுதல்.
அப்படியே இஸ்லாமியர்களும் தங்கள் மசூதிக்கு அருகில் உள்ள 300 கோவில்களை அகற்றலாமா?
மூன்று - இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சிக்கும் அவர்களது முயற்சிக்கு -
எல்லாருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை முன்னிறுத்தி, தங்களது முன்னோர் இந்துக்கள் என்று ஏற்றுக்கொள்ளுகிரவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளித்து இந்தியா என்பதை ஹிந்துஸ்தான் என்று மாற்ற வேண்டும்.
எங்கள் முன்னோர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் ஓட்டுரிமை இல்லையா? எங்கள் முன்னோர்கள் மதங்களற்ற வானரங்கள் என்று ஏற்றுக் கொண்டால் ஓட்டுரிமை இல்லையா?
நான்கு - குடும்பக் கட்டுப் பாட்டுக்கு ஒத்துழைக்காத அந்த முஸ்லிம்களுக்கு - பதிலடியாக மத மாற்றத்தைத் தடை செய்வது - ஆனால் இந்துக்களாக யாரும் மாறுவதற்கு தடை விதிக்கப் படக் கூடாது. சாதி என்பது பிறப்பால் அல்ல மாறாக அது ஒழுக்க நெறி என்று அறிவிப்பது. இந்துக்கள் அல்லாதவர்கள் மீண்டும் இந்துக்களாக வரும் போது அவர்கள் விரும்பும் சாதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுப்பது.
உங்கள் அறிவிப்பில் எல்லாம் சரியாகி விடுமா? அப்பா சாதி ஒழியக் கூடாது - அதுதானே உங்கள் நோக்கம்.
ஐந்தாவது - இந்து மன நிலையை வேகமாக வளரச் செய்வது.
அதாவது சாதி மன நிலை அப்படித்தானே?

முடிவில் -
"Even if half the Hindu voters are persuaded to collectively vote as Hindus, and for a party sincerely committed to a Hindu agenda, then we can forge an instrument for change. And that is the bottom line in the strategy to deter terrorism in a democratic Hindustan at this moment of truth." - சுப்ரமணிய சுவாமி


இது நூற்றி ஐம்பதாவது பதிவு

Thursday, 6 October 2011

சில அரசியல் காமெடிகள் - இந்த வாரம்

மறதி வாரம் - SELECTIVE அம்நிஷ்யா
  • உள்துறை அமைச்சர் ப.... சிதம்பரம் எனக்கு மறதி உண்டு என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார் - உங்களுக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் என்ன நடந்தது என்ற கேள்விக்கு..
  • சுபிரமனிய சாமி சூலை மாதம் எழுதிய ஒரு கட்டுரையைக் காரணம் காட்டி இப்போது சாமியைக் கைது செய்ய இருக்கிறது தில்லி போலிசு. சாமிக்கு மன்மோகன் சிங்கு தலையிடனுமாம். [இதைப் பற்றி நாளை கட்டுரை] ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்துதான் தில்லி போலிசு விழித்திருக்கிறது .. 
  • அதாவது பரவாயில்லை - சிபிஐ இருபது ஆண்டுகள் கழித்து ஒரு காமெடி பணியிருக்கிறது. என்ன காமெடியா செத்தவங்களுக்கு பரிசு மட்டும்தான் கொடுக்க முடியுமா தூக்கே தரலாம்னுதான்.
  • ராஜிவைக் கொன்ற தனுவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கிறது.சாகும் வரை தூக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை என்று கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதெப்படி செத்தவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு - இறந்தவரை எழுப்பி வந்து தூக்கில் போடுவார்களோ - அது ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரை எப்படியா... 
    • CBI தன்னைத் தானே காமெடி பண்ணிக் கொள்ளுகிறதா? இல்லை நம்மை வைத்துக் காமெடி பண்ணுகிறதா...
என்ன புடுங்குன?
  • பிடுங்குதல் சட்ட சபைக்குள் மட்டுமல்ல வெளியிலும் நடக்கிறது. சங்கரன் கோவிலில் விஷயகாந்தின் மைக்கை காவல் துறையினர் பிடுங்கினர் - னு செய்தி.
    • வீட்டுல அந்தக் காவலதிகாரியின் மனைவி கோபத்துல கூட என்ன பெருசாப் புடிங்கிப்புட்டன்னு கேட்க முடியாது. 
    • விஜயகாந்துதான் எலாத்தையும் புடுங்குவாறு அவருக்கேவா...
காந்தியவாதி காங்கிரசுக்கு எதிராய்
  • ஹசாரே காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறாராம். சீமானை ஆ ஊ வென்று சொன்னார்கள். வடக்கே இருந்தும் காங்கிரசுக்கு எதிர்ப்பாம். அது சரி ஹசாராவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. விட்டா காங்கிரசு தானாய் அழிந்து விடப் போகிறது. இன்றைக்கு கூட சத்ய பைட் பவனில் கலவரம் என்று எங்கள் அஞ்சா நெஞ்சம் உண்மைக் காங்கிரசுத் தலைவர் தங்க பாலு மூன்று பேரை நீக்கியிருக்கிரராம். 
    • அட... தங்க பாலுதான் இன்னும் தலைவரா?
நம்பிக் கெட்டதா?

  • அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வருமென்று சொன்னதை நம்பிக் கெட்டேன் என்று கலைஞர் ஐயா சொல்லியிருக்காகலாம். ஒரே முறை என்னை ஆட்சியில் வையுங்கள் - என் உயிர் பிரியும் முன் என்று சொன்னதை நம்பி நாமளும்தான் கேட்டோம். ஒவ்வொரு முறையும் இது கடைசி முறை கடைசி முறை...

Tuesday, 4 October 2011

மீண்டும் வெடிக்கும் அணு உலை விவாதம்

பத்ரி சேஷாத்ரி மிகவும் துணிச்சலாகவும், விவாத முறைகளையும் முன்வைத்து எழுதும் ஒரு நல்ல கட்டுரையாளர். அவரை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. அணு உலை பற்றி தமிழ் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் - இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அவர் எழுதிய கட்டுரைகளில் தெளிவின்றி, விவாத முறைகள் குழப்பப் பட்டு உள்ள கட்டுரை அல்லது கேள்வி பதில் என்றால் இதைச் சொல்லலாம் என்றே கருதுகிறேன். அது அவரது பிரச்சனை அல்ல - அவர் பதிவின் பொருள் அப்படி - "அணு." அதுதான் அவரை அலைக்கழித்து விட்டது என்று கருதுகிறேன்.

அவரது கட்டுரை கொடுக்காத சில உண்மையான தகவல்களை அதிலுள்ள பின்னூட்டங்களிலேயே காணலாம். இருந்தாலும் சில தெளிவுகள் தர வேண்டிய அவசியம் உள்ளதால் இந்தப் பதிவு. ஏனெனில் மீண்டும் ஒரு நாள் அடையாள உண்ணா விரதம் அறிவிக்கப் பட்டிருக்கிற நிலையில் இதைப் போன்ற கட்டுரைகள் வரலாம் என்பதால் இந்தப் பதிவு.

இந்திய ஜனநாயகத்தில் மக்கள் போராட்டங்கள் பெற்றிருக்கிற வெற்றி ஜனநாயகம் வளர்ந்து வருவதற்கான வெற்றி என்று பாராட்டிவிட்டு,  பத்ரி [பலர் எழுப்பும் கேள்விகளுக்கு] தனது கேள்வி பதில்களுக்குச் செல்கிறார். 
என்னைப் பொறுத்தவரை - அவர் கேள்வியை முன்வைத்திருப்பதில் உள்ள கருத்துத் தெளிவு பதில்களில் இல்லை என்றே தோன்றுகிறது. 

முதல் கேள்வியின் சாரம் - அணுமின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகிறது - மின்சாரமும் போதிய அளவு கிடைப்பதில்லை அப்புறம் ஏன் ஆபத்தான இதைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் என்று கேட்கிறார். 
இந்தக் கேள்விக்கான பதிலை - கேள்வியில் எங்கே தவறு இருக்கிறதென்று பார்ப்போம் என்று சொல்லி தவறையும் சுட்டிக் காட்ட வில்லை - அவர் எழுப்பிய கேள்விக்கான பதிலும் இல்லை. அதாவது இதில் மின்சாரம் தயாரிக்க நிறைய செலவு ஆகவில்லை என்பதோ அல்லது மின்சாரம் போதிய அளவு கிடைக்கும் என்பதோ அவரது பதிலாக இல்லை. அந்தப் பதில் எப்படிக் குழப்பப் பட்டிருக்கிறது என்று நீங்கள் தான் படிக்க வேண்டும். அதாவது இந்தக் கேள்வியின் தவறு என்பது நாம் அணு ஆயுதச் சோதனை செய்தது என்கிறார். வரலாற்றை நீங்கள் மாற்ற முடியுமா? அதாவது 20  ஆண்டுகளுக்கு முன்பே இவைகள் கட்டப் பட்டிருந்தால் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது என்கிறார்.

  • இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டிருந்தாலும் அல்லது நிறைய மின்தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தாலும், அப்படி உலக அரங்கில் அவைகளைக் கட்டமைத்த நாடுகளில் இன்றைய பொழுதில் அவைகளை நிறுத்துவதற்கான முயற்சியில் இன்று இருக்கிறப் போது, இந்தியாவில் அப்படி முப்பது ஆண்டுகள் முன்பு அமைத்திருந்தாலும் இன்றைக்கு அந்தக் கேள்வி மீண்டும் எழவே செய்யும்.
இரண்டாவது கேள்வி - கதிர்வீச்சு அபாயம் பற்றி - அது ஆமாம் உண்மைதான் என்கிறார் பத்ரி. ஆனால் புகுஷிமாவில் கூட அத்தகைய கதிர்வீச்சுகள் ஏற்படவில்லை என்று பத்ரி சொல்லுகிறார்.  ஆனால் அது தவறு என்பதை புலவர் தருமி பின்னூட்டத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார். 
  • இந்தக் கேள்வியில் தான் பத்ரி தனியாய்த் தெரிகிறார். அதாவது நில நடுக்கம் இல்லாத இடங்களில்தான் அணு உலை அமைக்கிறார்கள் என்கிறார் - அப்படி முற்றும் வராத இடங்கள் என்று ஏதாவது இருக்கிறதா - அப்படி அறிவியலாளர்கள் ஒரு இடத்தைக் காண்பிக்க முடியுமா - நிலத்தின் தன்மையை வைத்து இங்கே ஏற்படுவது கடினம் என்று சொல்லலாம். ஆனால் அப்படிப் பட்ட இடங்களிலெல்லாம் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நினைவு படுத்தலாம்.  
  • சரி அப்படியே நில நடுக்கம் ஏற்படாத பகுதிகள் என்றால் - அதற்காக மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் வைக்க முடியுமா? பின்னூட்டத்தில் உள்ளது போல அண்ணா நகர் பக்கத்திலோ, அல்லது கடல் அருகில்தான் வைக்க வேண்டும் என்றால் மும்பையிலோ அல்லது கொச்சினிலோ வைக்கலாமே.  
  • இவ்வளவு பணிகள் முடிவடைந்த நிலையில் இதைக் கைவிட முடியுமா என்று அடுத்த கேள்வியைக் கேட்கலாம் - அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்னாடி உள்ள அருதப் பழசை இப்பக் கட்டி அழனுமா என்ன?
  • அப்படி ஏன் இந்த அபாயத்தை நாம் கட்டி அழணும்னா நமக்குத் தேவை இருக்கு அப்படின்கிறார் பத்ரி. இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் - இது எவ்வளவு மின்சாரத் தேவையை நிறைவேற்றும் என்று பதிலைச் சொல்லாத வரை இதைப் பற்றி பேச முடியாது. ஆனால் இதற்குச் செலவழிக்கும் தொகையையும் அதனுடைய பராமரிப்புச் செலவுக்கும், சில ஆண்டுகள் கழித்து மூட வேண்டிய அவசியம் உள்ள இந்த அணு உலைகள், கழிவுகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்றெல்லாம் பார்த்தால் - இதனால் கிடைக்கும் மின் உற்பத்தி அதிகம் என்று சொல்லுவதிர்கில்லை.
  • எல்லா மின் நிலையங்களும் மிகப் பாதுகாப்பானவை - உடனே கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யுமாம் - ஆனால் புகுஷிமாவில் அது நிகழாமல் போனதற்கு காரணம் மனித காரணமாம். இதனால்தானே மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இது ஒத்து வராதுன்னு. 
  • ஜப்பானிலேயே இப்படி என்றால் நமக்கெல்லாம் இது சரி வராது என்கிற வாதம் தவறு என்றும், இந்தியாவிலே கவனமின்மை என்பது படிக்காதவர்களிடமிருந்தும் சாக்கடை அல்லுபவர்களிடமிருந்தும், மின்சாரம் திருடபவர்களிடமிருந்தும் தான் வருகிறது என்றும் அழுத்திச் சொல்லுகிறார். இதற்கு படிப்பவர்கள்தான் [இந்தப் பதிவைப் படிப்பவர்கள்] பதில் சொல்ல வேண்டும். அணு மின் உலையைப் பொறுத்த வரை எல்லாம் படித்த விஞ்ஞானிகள் தான் வேலை செய்வார்களாம். அதனால் எந்தக் கவனமின்மையும் நிகழாதாம்.
  • அதாவது இதை வேறொரு கோணத்தில் பார்த்தால் இன்னும் நமக்குச் சரியாகப் புரியும். ' இந்தியாவில் கவனக் குறைவினால் ஏற்படும் விபத்துக்கள் படிக்காதவர்களிடமிருந்துதான் வருகிறது. அப்படியானால் படித்தவர்கள், நிச்சயமாய் கவனத்தோடும், ஆழ்ந்த அறிவுப் புலத்தொடும், மிகவும் பொறுப்புணர்வோடும் அல்லது ரெச்பான்சிபிலாகவும் நடந்து கொள்ளுவார்கள். இதைச் சரி என்றால், எங்கெல்லாம் விபத்து நடக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் - எங்கெல்லாம் பொறுப்புணர்வு குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் படிக்காதவர்கள் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்.  நான் செய்வது விதண்ட வாதம் என்று எனக்குத் தெரியும். ஆனால் "நம் நாட்டில் நடக்கும் கவனமின்மை காரணமான தவறுகள், கல்வி அறிவு அற்றவர்களிடமிருந்து ஏற்படுகிறது. அது பூச்சிமருந்தைச் சரியாகப் பயன்படுத்தாதலிருந்து மின்சாரத்தைக் கொக்கிபோட்டு இழுப்பதிலிருந்து சரியான பாதுகாப்புக் கவசங்களை அணியாமல் சாக்கடையை அல்லது கழிப்பறைக் கிடங்குகளைச் சுத்தம் செய்வதுவரை செல்கிறது." - இந்த பதிலுக்கு வேறெப்படி பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் சொல்லுவதே உண்மைஎன்றால் இந்திய அரசின் முதல் கவனம் முழுவதும் இந்திய தேசத்தை கல்வியறிவு உள்ள நாடாக ஆக்குவதற்குத் தானே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படித் தானே எல்லாரையும் படிப்பறிவு உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.
  • அது மட்டுமல்ல இந்தியா என்கிற தேசத்தை மிகவும் பாதுகாப்புள்ளதாக, இந்த தேசம் இப்படித் தான் இருக்கும் என்கிற எண்ணத்தை அணு உலைப் பாதுகாப்பிலிருந்து தொடங்குவோம் என்கிறார். எனக்கு அந்த நம்பிக்கையின் மீது சந்தேகம் இல்லை. இந்தியா மிகவும் பாதுகாப்பான மற்றும் பொறுப்புணர்வு உள்ள குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதிலோ அல்லது அப்படி வருவோம் என்பதிலே எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இந்தப் பாதுகாப்பிலிருந்து மாற்றத்திற்குப் போவோம் என்பதுதான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை.  அது எப்படி அணு உலையிலேர்ந்து சாதாரண குடிமகன்களின் பொறுப்புணர்வுக்குப் போக முடியும் என்பதே கேள்வி. 
அடுத்து பத்ரியின் கேள்வி - மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஏன் இதை அமைக்க வேண்டும் என்பதற்கு நாட்டில் எங்கே மக்கள் இல்லை என்கிற கேள்வியைக் கேட்கிறார். அதோடு மக்களே எதிர்பார்க்காத அளவுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அவர்களை மாற்று இடங்களில் அமர்த்த வேண்டும் என்கிறார். அதாவது கூடங்குளம் பகுதியில் மக்கள் அடர்த்தியாக வசிப்பது போலத்தான் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் குடியிருப்பதாகச் சொல்லுகின்றார் - அப்படியெனில் இந்தியா சீனாவை முந்தியிருக்க வேண்டு எண்ணிக்கையில்- சரி அதை விடுங்க...

அடுத்தது அணுஉலைக் கழிவுகள் பற்றியது - ஆமாம் அது அபாயம்தான் - என்கிறார். ஆனால் எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனை என்று சொல்லுகிறார்.
அதே போல மரபு சாரா முறைகள் வழியாக மின்சாரம் தயாரிப்பதால் இப்போதையத் தேவையை நாம் நிவர்த்தி செய்ய முடியாது என்பதோடு மட்டுமல்ல நாம் இதைப் பற்றி நியமான கேள்விகள் எழுப்பலாம் ஆனால் அதிகமாக பயமுறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதோடு கட்டுரை முடிகிறது.

  • கேட்கப் படுகிற கேள்விகளுக்கு சரியான விளக்கம் இருந்தால் யாரும் மீண்டும் மீண்டும் கேட்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கப் படும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்கப் படுகின்றன. நியமான கேள்விகளை எழுப்பிய பத்ரியின் கேள்விகளுக்கே அவராலேயே நியாயமான பதில்களைச் சொல்ல முடியவில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். 
  • பத்ரியின் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லாரும் அவரது கட்டுரையில், கேள்விகளையும் அதைத் தொடர்ந்து வரும் முதல் பத்தியை மட்டும் படித்தீர்களானால், அணு உலை ஆபத்து என்பது எவ்வவளவு அதிகம் என்று தெரியும். எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளுகிற அவர் ஏன் இன்றும் அணு உலை தேவை என்பதைத் தெளிவின்றியே - குழப்பியே எடுத்து வைக்கிறார். இது எப்படி இருக்கிறதென்றால் - நான் மன்மோகனைக் குறை சொல்வேன். அது சரியில்லை, இது சரியில்லை ஆனால் யாருக்கு அடுத்த முறை ஓட்டுப் போடுவாய் என்று கேட்டால் மன்மோகனுக்குத் தான் என்று நான் சொல்லுவது எவ்வளவு அபத்தமோ அப்படித் தான் அணு உலை அபாயமும். அணு உலை அபாயம்தான் ஆனால் அதுதான் வேண்டும் என்பது. 
  • அல்லது இப்போது உள்ள சூழலில் மன்மோகன்தான் ஒரே சாய்ஸ் என்பது போல அணு தான் ஒரே சாய்ஸ் என்று வாதிடலாம். அது தவறு - மாற்று பற்றி எதுவும் யோசிக்காமல், அது ஒத்து வராது என்பது தவறல்லவா. மாற்று வழி மின்சாரம் எதையும் முன்னேடுக்காமலேயே -[உ.ம். சூரிய ஒளியிலிருந்து] அதெல்லாம் ஒத்து வராது என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.
  • பத்ரியின் கேள்வி மற்றும் பதில்களின் முதல் பத்தி அடிப்படையில் பத்ரி அணு உலை எதிர்ப்பாளராகவே தெரிகிறார். 
  • ஆனால் ஏன் இதற்கும் மேலான கருத்துக்களை உள்ளடக்கி தமிழ் பேப்பரிலேயே வந்த கட்டுரைகளைஎல்லாம் கவனிக்க மறந்தார் என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதிகளை வாசிக்க இணைப்பான்களைச் சுட்டவும்.

பத்ரியின் முரனான கருத்துக்களுக்கு புலவர் தருமியின் பின்னூட்டம் - கட்டுரையின் பக்கமே.

சிறில் அலெக்ஸின் இரண்டு கட்டுரைகள்.

பாமரனின் கடிதம் - சோவியத் அதிபருக்கு 





Monday, 3 October 2011

வாசிப்பாளர்களை கவர்வது எப்படி?

முதலில் வந்ததுற்கு நன்றி - 

வாசிப்பாளர்களை கவர்வது எப்படி? என்கிற கேள்விக்கு இப்பதிவு முழுமையைப் பதில் சொல்லுமா என்பது தெரியாது. நான் பதிவுலகில் மீண்டும் நுழைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகம் பார்க்கப் பட்ட ஒரு பதிவினை கொண்டு பதில் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் எந்தப் பதிவுகளும் நோட்டமிடாதப் பட அளவுக்கு "சூப்பர் சிங்கர் கலாட்டா" பார்வையிடப் பட்டிருக்கிறது. இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு முறைக்கு மேல் பார்வையிடப் பட்டிருக்கிறது. இது எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. பார்வையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -

ரூம் போட்டு யோசித்து எழுதிய பதிவுகள் கூட சில சமயங்களில் நூறைத் தாண்டாது. ஆனால் நடைமுறையில் மிகவும் பாப்புலரான சினிமா, தொலைக் காட்சி, கிரிக்கெட் இவைகள்தான் அதிகம் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றும் வசிக்கப் படுகின்றன -

அதிகம் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற பதிவுலக நண்பர்கள் சினிமா, தொலைக் காட்சிகள் பற்றி எழுதலாம். மிகச் சிரமப் பட்டு தலைப் பெல்லாம்  தேட வேண்டியதில்லை. 

இது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளப் படக் கூடிய விஷயம்தான். ஏனெனில் இந்தியாவை விட்டு வெளியிலிருக்கிற நண்பர்கள் தங்களது பொழுது போக்கிற்காகவும் உற்சாகம் தரக் கூடிய பதிவுகளையும் தேடி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கிற பார்வையாளர்களும் அப்படி இருப்பதைத் தான் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதற்காக வெளியூரில் வசிப்பவர்கள் காத்திரமான பதிவுகளை வாசிப்பதில்லை என்றோ தமிழக வாசிப்பாளர்கள் சீரியசான விஷயங்களை படிப்பதில்லை என்றோ பொருள் கொள்ளக் கூடாது. அப்படி இருந்தால் நானும் எழுத முடியாது இங்கே யாரும் வந்து படிக்கவும் முடியாது.
சூப்பர் சிங்கரை படித்தவர்கள் எல்லாம் இந்தப் பதிவையும் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனாலும் நன்றிகள்.
ஒரு முக்கியமான விஷயம் - அதிகம் பார்க்கப் பட்ட இந்தப் பதிவு ஒருவரைக் கூட என் நண்பராக இந்த வலைப் பூவில் இணைய இழுத்து வரவில்லை. இந்த உண்மையையும் பதிவு செய்ய வேண்டும்.

நான் இந்த ஆச்சரியத்தில் உறைந்து போக வில்லை - அதை விரும்பவும் இல்லை. மிக விரைவில் அல்லது நாளையே கூட அதிகமாக பார்வையாளர்களை கொண்டு வராத பதிவு ஒன்று வரும். அதிலேயே நான் நிறைவு கொள்ளுகிறேன்.

நன்றி

------------------------------------------------------
பின்னூட்டம்
இந்தப் பதிவை நான் எனது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளவே எழுதினேன். கடந்த கட்டுரையும் ஒரு விஷயத்தை என் பார்வையில் இருந்தே அணுகினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டேன். அதோடு அதில் யாரும் நெருங்கி வர வில்லை என்கிற விஷயமும் ஆச்சரியத்தைத் தந்தது என்று சொன்னேன். அவ்வளவே.
அதனால் எல்லாரும் சீரியசாத் தான் பதில் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களது பதிவையும் மகிழ்வோடு படிக்கிறேன். சினிமா பற்றிய பதிவுகளையும் அல்லது கணணி பற்றிய தெளிவு கொடுக்கிற செய்திகளையும் படிக்கிறேன். அவர்கள் அப்படியே தொடர்ந்து எழுதவும் வேண்டும் என்பதும் என் ஆவல். நானும் இடையில் ஜாலியாகவும், மொக்கைப் பதிவுகளும் எழுதகிறேன். எல்லாமே நல்லா இருக்குன்னு என்னாலே சொல்ல முடியாது.
அதனால உங்கள் பாணியில், உங்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எழுதுங்கள். எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை - சோகம், மகிழ்ச்சி, சீரியசான தருணம் --
வாழ்க வளமுடன்.

Saturday, 1 October 2011

சூப்பர் சிங்கர் கலாட்டா

சூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டுமா என்றுதான் எழுதாமல் இருந்தேன். ஆனால் நேற்று முன்தினம் சத்யாவிற்காக அனைத்து இசையுலக ஜாம்பவான்களும் பாராட்டுக் கொடுத்ததைப் பார்த்த போது சரி எழுதுவோம் என்று தோன்றியது.

இசை என்பது எல்லார் மனதையும் வருடக் கூடியது. இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை - நீட்ஷே உட்பட. அவருக்கும் வாக்னருக்கும் ஆன உறவு இசையால் எழுந்தது  - பின்பு ஈகோவால் அழிந்தது. சரி விஷயத்திற்கு வருவோம். அப்படித்தான் இந்த இசை நிகழ்ச்சி எனக்கு சில வேளைகளில் மகிழ்ச்சி தந்தது.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிவுகள் பல பேருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. எனக்கு அப்படி இருந்தது. மிகவும் நன்றாக சத்யா பாடினார். சாய் நன்றாகப் பாடினார். அப்படித்தான் சொல்ல முடியும். ஆனால் மக்கள் வாக்கு ஏன் சாய்க்கு அதிகமாகக் கிடைத்தது என்பது பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

முதலில் - அந்த மக்கள் வாக்கு என்பது உண்மையானதா என்பதிலேயே சந்தேகம். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வாக்குகள் போடலாம் - போடலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். மக்கள் கையில் முடிவு இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி. ரேட்டிங்கைக் கூட்டுவதற்கான முயற்சி - இதில் சில நடுவர்களின் ஒத்துழைப்பு இன்றி இந்த நிகழ்ச்சியை அவ்வளவு சஸ்பென்ஸ் உள்ளதாகக் காட்டிக் கொள்ள முடியாது.

மக்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பவதால் ஸ்பான்சருக்கு லாபம் - தான் விரும்பியவருக்கு பட்டம் கொடுக்கலாம். மக்கள் கொடுத்தார்கள் என்று சொல்லலாம். கேட்டால் நாமளா ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கலாம். வோயில்டு கார்ட் ரவுண்டில் சாய் சரண் தேர்ந்தெடுக்கப் பட்ட போதே அந்தச் சந்தேகம் இருந்தது. அதை மக்கள் எதிர்பார்க்காதவருக்குக் கொடுக்கலாம். அப்படியாக அந்த நிகழ்ச்சியினை பார்க்கும் எண்ணிக்கையை அதிகப் படுத்திக் கொள்ளலாம். இதுதான் அவர்களது நோக்கம்.

அது சிம்புவின் அழுகையாக இருக்கட்டும் - ரம்பாவின் கோபமாக இருக்கட்டும். இதில் என்ன செய்யலாம் என்று பார்த்தார்கள் - சத்யா நன்றாகப் பாடுகிறார் ஆனால் சாய் பட்டம் வெல்கிறார். பிறகு இசைக் கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து சாயை விட ஏறக்குறைய நாற்பது மார்க்குகளை சத்யா பெற்றிருக்கிறார் என்று விளக்கம் வேறு. உண்மையிலேயே இதுதான் எண்ணிக்கை என்றால் இந்த எண்ணிக்கையை மேடையில் அறிவிப்பதற்கு என்ன வந்தது? - உண்மையில் அப்போது எண்ணிக்கை இருந்திருக்காது. அவ்வளவுதான் - அந்த முடிவு வந்தால்தான் போட்டி முடிந்தும் திருப்பி ஏர் டெல் சூப்பர் சிங்கர் இந்த வாரமும் ஒளி பரப்ப முடியும். ஆக மொத்தம் விறு விறுப்பாக நடத்தப் படவே ஒரு நிகழ்ச்சி.

எண்ணிக்கை கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் - வாக்குகள் ஓரளவிற்கு உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் - இது மக்கள் நடுவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சஸ்பெண்சிற்காக நடுவர்கள் ஆடிய ஆட்டம் போல மக்கள் ஆடியிருக்கிறார்கள் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது. நடுவர்கள் எல்லாம் எழுந்து கை தட்டி விட்டால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுபோலவும் - அவர்கள் சொல்லியதற்கு மறு வார்த்தை இல்லை என்பது போலவும் இருந்ததற்கு மக்களின் பதில்.

ஒரு உதாரணம்.

கடைசி வாரத்தில் மூன்று பேர் மட்டும் பாடிய முதல் நாளில் சத்யாவிற்கு எல்லாரும் ஆறு மதிப்பெண் கொடுத்த போதே நான் முடிவு செய்து விட்டேன் - நிச்சயமாக சத்யா முதல் இரண்டு பேரில் உள்ளே இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று. ஏன்னா ஆறு மார்க்கு வாங்கி இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவது என்பது கஷ்டம் - அப்படி எல்லாரையும் நினைக்க வைத்து கடைசியில் மிகவும் சர்ப்ரைசாக சாயை விட புள்ளி ஐந்து மதிப்பெண்கள் வாங்கி உள்ளே நுழைந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். சாய் வெளியேறினார். மீண்டும் மலையாள வாடையோடு உள்ளவர் உள்ளே அனுப்பப் பட்டார். இத்தனைக்கும் அந்த வாரத்தைப் பொறுத்த வரைக்கும் உள்ள நான்கு நாட்கள் பெர்பார்மன்சில் சாய் இரண்டு பகுதிகளில் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றார் - சத்யா ஒன்று - பூஜா ஒன்று - ஆனால் சத்யா புள்ளி. ஐந்து கூடப் பெற்றதாகச் சொன்னார்கள். நடுவர்கள் சரியான தீர்ப்பு வழங்காத பொது மக்கள் கேட்பதற்கு முடிய வில்லை.
ஆனால் அன்று ஒருவேளை சத்யா வெளியேறி சாயைப் போல போட்டி போட்டு வந்திருந்தால்சத்யா வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருவனை எப்படி நோகடிக்க முடியுமோ அப்படி நோகடித்து - எல்லாரையும் நோகடித்து எதிர்பார்க்காத சஸ்பென்சை சீரியல் போல அளிப்பதில் அவர்களுக்கான ரேட்டிங்கைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சரி ஏன் சாய் சரணைத் தேர்ந்தெடுத்தார்கள்?

1 . ஏற்கனவே மூன்று வருடங்களாகச் சாய் சரணின் தொல்லை தாங்கலை - இப்போது பட்டம் வெல்ல வில்லையென்றால் மீண்டும் அடுத்த சீசனிலும் வந்து விடுவாரோ என்ற பயம்

2 . ஏற்கனவே நான்கு சீசன்களில் மூன்று மலையாள சகோதர சகோதரி வந்து விட்டார்கள் - எனவே இந்த முறையாவது ஒரு தமிழ் பிராமனருக்கு கொடுப்போம் என்று இருந்திருக்கலாம்.

  • எது எப்படியோ விஜய் ஸ்டார் தனது பார்வையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டது.

  • எனக்கு இன்னும் புரியாத விஷயம் - ஏன் நம்ம கோபிநாத் எழுந்து எழுந்து நின்று தபேலா வாசித்தார் என்பதுதான்.  
  •  சத்யாவிற்குப் பிறகு எனக்குப் பிடித்த குரல் கவுதம் தான்.