Thursday, 13 October 2011

ஏட்டிக்குப் போட்டி- அரசியல் உலா - காங்கிரஸ்

காங்கிரஸ் கோல்மால்
1 . இளங்கோவன் - அதி.மு.க. ஆட்சியில் கிராமங்களில் நாள் கணக்கில் மின்சார வெட்டு என்று பேசியிருக்கிறார். 
  • மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இந்த காலத்தில் இப்படி என்றுதானே படிக்க வேண்டும்.

2 . விருதுநகரில் "இனி தி.மு.க. காங்கிரசைத் தீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். நான் அமைச்சராக இல்லையென்றாலும் எனக்கு அமைச்சர்கள் செல்வாக்கு இருக்கிறது - " இது தன்மான இளங்கோவன் சொன்னது.
  • இது தி. மு. க. வுக்கு எதிராகவா, [அதுதான் ஏற்கனவே உங்களால போச்சே] உங்கள் அன்னை சோனியாவுக்கு விட்ட எச்சரிக்கையா... தலைவர் பதவி ஆசை... ம்...

3 . உள்ளாட்சிகளிடமிருந்து பிடுங்கப் பட்ட அதிகாரத்தைத் திருப்பித் தருவோம் என்று காங்கிரஸ் தலைவர் தங்க பாலு பிரச்சாரம் பண்ணினாராம்.
  • அவர்கிட்டேயிருந்து பிடுங்கப் பட்ட அதிகாரத்தையே மீட்க முடியலை... அல்லது அவருகிட்ட உள்ள அதிகாரத்தை வச்சே புடிங்க முடியலை..

4 . மூவர் மரண தண்டனை அப்பீல் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற மூப்பனார் ... பேரவை வழக்குத் தாக்கலாம்.
  • ராஜீவ் கொலை செய்யப் பட்ட போது மாயமாயிருந்த மூப்பனார் மீதே வழக்குப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது... இதில் இது வேறயா?
 அடுத்து பா.ஜ. க

No comments:

Post a Comment