எனக்கு பொங்கல் இல்லை
இரமன கிரி வாசன்
என் இனம் அழிந்த வலி இன்னும் மிச்சமிருக்கிறது...
முள்வேலி முகாமில் உயிரை தவிர இழக்க ஏதுமின்றி
ஓடுங்கி கிடக்கும் என் சகோதரனையும் சகோதரியையும்
நினைக்கையில் கரும்பு கசக்கிறது.
காவிரி தண்ணீருக்காய் காத்திருந்து காத்திருந்து கருகிப்
போன என் நெற்களஞ்சியம் மனசை அழுத்துகிறது ...
தலை சாய்ந்து கிடக்கும் வயற்வெளியெல்லாம்
காங்கீரிட் கதிர்கள் முளைத்து ஸ்கொயர் பீட் இவ்வளவு
என்று வியாபாரத்திற்கு தயாராக நிற்கிறது.
உம்மன சாண்டிக்கு பென்னி குயிக்கே பரவாயில்லை
என்கிற போது சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் மேல்
எனக்கு கோபம் வருகிறது.
கடற்கரையோரம் ஆண்டுகளை தாண்டி தொடரும்
பட்டினிப்போராட்டத்தை நினைக்கையில் என் பொங்கல் பானை
பொங்க மறுக்குறது .
தரையில் தண்ணீர் இல்ல....
எம் கண்ணீரை வழித்து எடுக்க கூட மோட்டாருக்கு கரண்டு இல்லை...
உழவர்கள் எல்லாம் தினக்கூலியாக எம் உழவு மாடுகள் எல்லாம்
அடிமாடுகளாய் ஏலம் போல நீயும் நானும் எஸ் எம் எஸில் பொங்கல்
வாழ்த்து சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை எனக்கு...
இனமும் , மொழியும் , உழவும் அழிந்து கொண்டிருக்கையில்
ஏது உழவர் திருநாள் ? ஏது தமிழர் திருநாள் ?
இரண்டு நாள் விடுமுறையும் , தமன்னாவின் நேர்காணலும்
எந்திரன் சினிமாவும் தான் பொங்கல் என நினைத்தால்
அதை நீயே கொண்டாடிவிட்டு போ......
எனக்கு பொங்கல் இல்லை....
முள்வேலி முகாமில் உயிரை தவிர இழக்க ஏதுமின்றி
ஓடுங்கி கிடக்கும் என் சகோதரனையும் சகோதரியையும்
நினைக்கையில் கரும்பு கசக்கிறது.
காவிரி தண்ணீருக்காய் காத்திருந்து காத்திருந்து கருகிப்
போன என் நெற்களஞ்சியம் மனசை அழுத்துகிறது ...
தலை சாய்ந்து கிடக்கும் வயற்வெளியெல்லாம்
காங்கீரிட் கதிர்கள் முளைத்து ஸ்கொயர் பீட் இவ்வளவு
என்று வியாபாரத்திற்கு தயாராக நிற்கிறது.
உம்மன சாண்டிக்கு பென்னி குயிக்கே பரவாயில்லை
என்கிற போது சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் மேல்
எனக்கு கோபம் வருகிறது.
கடற்கரையோரம் ஆண்டுகளை தாண்டி தொடரும்
பட்டினிப்போராட்டத்தை நினைக்கையில் என் பொங்கல் பானை
பொங்க மறுக்குறது .
தரையில் தண்ணீர் இல்ல....
எம் கண்ணீரை வழித்து எடுக்க கூட மோட்டாருக்கு கரண்டு இல்லை...
உழவர்கள் எல்லாம் தினக்கூலியாக எம் உழவு மாடுகள் எல்லாம்
அடிமாடுகளாய் ஏலம் போல நீயும் நானும் எஸ் எம் எஸில் பொங்கல்
வாழ்த்து சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை எனக்கு...
இனமும் , மொழியும் , உழவும் அழிந்து கொண்டிருக்கையில்
ஏது உழவர் திருநாள் ? ஏது தமிழர் திருநாள் ?
இரண்டு நாள் விடுமுறையும் , தமன்னாவின் நேர்காணலும்
எந்திரன் சினிமாவும் தான் பொங்கல் என நினைத்தால்
அதை நீயே கொண்டாடிவிட்டு போ......
எனக்கு பொங்கல் இல்லை....
********************************************************************
No comments:
Post a Comment