அம்மா!
உன் உலகம்
உன் வீடு
உன்னில் பாதி.
பாதியை இழந்தவனின்
பாதிப்பைச் சொல்லி மாளாது
உன் அம்மா பாக்கியம்மாள்
உன்னோடு இல்லை என்பது
பாக்கியமில்லைதான்!
தன்னில் பாதியை இழப்பதை
பாக்கியம் எனச் சொல்ல முடியுமா?
ஆனாலும் ஒன்று சொல்லவா?
அம்மா மடியில் சாய்வது
எல்லாக் குழந்தைக்கும் கிடைக்கும்
குழந்தையின் மடியில் சாய்வது
எந்தத் தாய்க்குக் கிட்டும்?
எந்தக் குழந்தைக்குக் கை கூடும் அந்தப் பாக்கியம்.
மகனின் மடியில் மரணம்
வெகு சிலருக்கே அந்தப் பாக்கியம்.
உன் அம்மா பாக்கியம்
உன் மடியில் மரணித்ததை
பாக்கியம் என்று சொல்லாமல்
வேறென்ன சொல்வது?
----
பாக்கியம்மாள்
நண்பர் ஜான் துரை அவர்களின் தாய்
இன்று [11 ஜூன்] விடியும் முன் இறந்து
இரவு தொடங்கும் முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.
No comments:
Post a Comment