Monday, 11 February 2013

Courageous, Inspiring and an act of Humility – The Resignation of Pope Benedict XVI


Courageous, Inspiring and an act of Humility – The Resignation of Pope Benedict XVI

The letter of the Pope Benedict XVI who announced his resignation this morning shows that he has made this difficult decision after contemplation and prayer.
Dear Brothers,
I have convoked you to this Consistory, not only for the three canonizations, but also to communicate to you a decision of great importance for the life of the Church. After having repeatedly examined my conscience before God, I have come to the certainty that my strengths, due to an advanced age, are no longer suited to an adequate exercise of the Petrine ministry. I am well aware that this ministry, due to its essential spiritual nature, must be carried out not only with words and deeds, but no less with prayer and suffering. However, in today’s world, subject to so many rapid changes and shaken by questions of deep relevance for the life of faith, in order to govern the bark of Saint Peter and proclaim the Gospel, both strength of mind and body are necessary, strength which in the last few months, has deteriorated in me to the extent that I have had to recognize my incapacity to adequately fulfill the ministry entrusted to me. For this reason, and well aware of the seriousness of this act, with full freedom I declare that I renounce the ministry of Bishop of Rome, Successor of Saint Peter, entrusted to me by the Cardinals on 19 April 2005, in such a way, that as from 28 February 2013, at 20:00 hours, the See of Rome, the See of Saint Peter, will be vacant and a Conclave to elect the new Supreme Pontiff will have to be convoked by those whose competence it is.
Dear Brothers, I thank you most sincerely for all the love and work with which you have supported me in my ministry and I ask pardon for all my defects. And now, let us entrust the Holy Church to the care of Our Supreme Pastor, Our Lord Jesus Christ, and implore his holy Mother Mary, so that she may assist the Cardinal Fathers with her maternal solicitude, in electing a new Supreme Pontiff. With regard to myself, I wish to also devotedly serve the Holy Church of God in the future through a life dedicated to prayer.
From the Vatican, 10 February 2013
BENEDICTUS PP XVI
[1]

No one would disagree that this is an act of courage that inspiries milions of the followers who will recognise his act of humility. His resignation, although not unprecedented in history, is unprecedented in the courageous act of the present pope. Six hundred years ago, Pope Gregory XII resigned to end schism in the Church however the new pope was not elected till his death.[2] When Pope Benedict XVI was elected the Pope in April 2005, He chose the name 'Benedict' to the surprise of many. He was said to be too old to be the spiritual leader of th Church. But many also thought he would resign when he will not be able to continue his office. He has come out with that courageous act. His resignation has surprised many. The seven years [almost 8 years however since it is not completed we could say only   seven years: it reminds me of the Biblical significance of the number seven] have been the most difficult time for him, but he has withstood them with courage.

His acknowledgment of his defects and seeking pardon [in the letter] is the highest expression of a true Christian and a disciple of Christ. He will be remembered not only in Church History, but also in World History but also in the hearts of many faithful of different religions and denominations.


[2] Pope Celestine V would have been the first to make such a decision of courage. Cf. http://www.usatoday.com/story/news/world/2013/02/11/pope-resignations/1908819/But he was imprisoned by the new Pope.

Friday, 8 February 2013

ட்ரூ மேன் ஷோ - வும் – சமரும்


ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு ஏதோ ஒரு வேலையாய் போனபோது ‘மாஸ்க்’ என்ற ஜிம் கேர்ரி யின் படம் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து பார்த்தேன். அதன் பிறகு ஜிம் கேர்ரியின் படம் என்றால் வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பதுண்டு. அப்படி ஒரு படம்தான் ட்ரூ மேன் ஷோஇதுவும் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன.
  • உலகம் என்பது ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று எப்போதும் எல்லாரும் சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு அது சரியோ என்று தோன்றிய தருணங்களும் இருந்திருக்கும். யாரோ ஆட்டிவைக்கும் பொம்மையாக நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வி இல்லாமல் இல்லை. மிகப் பெரிய தத்துவக் கேள்விகளை உள்ளடக்கியும், இறைவன் கருணை மிக்கவன் என்கிற கருத்தை கேலி செய்யும் விதத்திலும், இந்தக் கதைப் பின்னல்கள் கேள்வி எழுப்பும் – பார்ப்பவர்கள் மனதில்.

“இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் உண்மை – எதுவும் பொய்யில்லை” என்கிற ஒரு தொனியில் தொடங்கும் ஒரு லைவ் ஷோ. தனியாக, முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு தீவு. முடிவடையாத ஒரு கடல் என்கிற ஒரு பிரம்மை. உருவாக்கப் பட்ட அந்த உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் ஒரு சிறு துளி - ஒரு விளக்கு கூரையிலிருந்து கீழே விழுவதில் தொடங்குகிறது அந்தக் கதை. அந்த தவறை மறைக்க மேலே சென்ற ஒரு விமானத்தின் விளக்கு கழன்று விழுவதாக சொல்லப் படும் செய்தி அதை உண்மையென்று அவனை நம்பச் செய்கிறது. அந்தக் கடலில் இறங்குவது ஆபத்து – ஏனெனில் அதில்தான் அவரது தந்தை இறந்து போனதாக ஒரு நிகழ்வு என்று சின்னச் சின்ன விஷயங்கள். அப்படி உருவாக்கப் பட்ட ஒரு தீவில் பிறந்ததிலிருந்தே அங்கே வளர்க்கப் படுகின்ற மனிதன் தான் ஜிம் கேர்ரி. அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு நிமிடமும் லைவ் ஆக ஒளிபரப்பப் படுகின்றது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக தான் ‘உருவாக்காப்பட்ட ஒரு மாய உலகத்தில்’ இருக்கிறோம் என்பதை அறியாமலே இருக்கிறான் அவன். அவன் வழியெங்கும் பார்க்கிற ஆட்கள், இயக்குனர் அவர்களுக்கு கொடுக்கும் வேடம், சொல்லும் வசனங்கள் என்று எல்லாமே நாடகத்தின் ஒரு அங்கம். ஒரே ஆட்கள் பல வேடங்கள் போடுகிறார்கள். இறந்து போன அவனது அப்பாவை திடீரென அவன் பார்ப்பதும், அது அவர் இல்லை என்று நம்ப வைக்கும் முயற்சியும், என்று பல நிலைகளில், கேர்ரி யோசிக்க ஆரம்பிக்கிறான்.
  • கொஞ்சம் கொஞ்சமாக உண்மையைக் கண்டறியவும், பயந்து இருந்த கடல் எல்லையற்றதாகத் தெரியவில்லை. படகேறி செயற்கையாய் கட்டமைக்கப் பட்ட கடலைத் தாண்டும் முயற்சியில் இருக்கும் போது இயக்குனர் அவரிடம் உரையாடுகிறார் – வெளி உலகம் மிக மோசமானது. இங்கே உனக்கு எல்லாம் கிடைக்கும் போகாதே என்கிற தொனியில் பேசுவதை எல்லாம் காதில் வாங்காமல் “வெளியே” பயணிக்கிறான்.

சிந்திக்கத் தொடங்கும் போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் என்பது கூட படத்தின் கருவாக இருக்கலாம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனை சிறையில் அடைப்பதைப் போன்று அவனது சுதந்திரத்திற்கு தடை போடுவது சரியல்ல என்று தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது கூட கருத்தாக இருக்கலாம். வாழ்க்கையே ஒரு நாடக மேடை எனவே அதில் அதிகக் கேள்வி கேட்காமல் வாழ்வது சரி என்பதோ, மாய உலகில் கட்டமைக்கப்பட்ட விதிகளைத் தகர்த்தெறிந்து மனம் சொல்வதைக் கேட்பது என்பது கூட செய்தியாக இருக்கலாம். காதல் என்பது வேறொருவன் நிர்ணயிக்கிற ஒரு ஆளை வைத்தோ, அழகை வைத்தோ வருவது அல்ல அது உள்ளிருந்து வருவது என்பது கூட செய்தியாக இருக்கலாம். ஆனால் பார்க்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
  • இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் தமிழ் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்கிற கேள்வி எனக்குள் இருந்தது.

இந்த அளவுக்கு ஒரு நாடகத் தன்மையுடைய கதை நமக்கு ஒத்து வராது – நமக்குத் தேவை வேகம் – வேகமான திருப்பங்கள் – த்ரில் – சண்டைக் காட்சிகள் – பாடல்கள் – என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உருவாக்கப் பட்டிருக்கும் படம் சமர்.
தமிழ் ரசிகர்கள் இதை நிச்சயம் ரசிக்க வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பாக செல்லும் படம் என்று நினைக்கிறேன். ட்ரூமேன் ஷோ பார்க்காதவர்களுக்கு இந்த படம் நிறைய பிடிக்கலாம் – பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பை உண்டாக்காது என்றே நம்பலாம் – சில சீன்களுக்குப் பிறகு கதையை ஓரளவிற்கு ஊகிக்க முடிந்து விட்டது.  அது தவிர சில சீன்களை வேறு ஏதோ படத்தில் அப்படியே பார்த்தது போலவும் இருக்கிறது. ஆனால் நினவுக்குத்தான் வர மறுக்கிறது. எனக்கு ஒருவேளை அம்நீஷியாவோ என்னவோ.
ஆனால் இறுதியில் ட்ரூ மேன் ஷோ எழுப்பும் எந்தக் கேள்வியையும் சமர் படம் பார்த்தவர்கள் மத்தியில் எழுப்பாது என்பது மட்டும் நிச்சயம் – அந்தக் கேள்விகள் நமக்குத் தேவையில்லை என்பதும் கூட காரணமாக இருக்கலாம். எந்த விதமான மற்ற திரைக்கதைக்கான நன்றியோ, தாக்கம் என்பது பற்றிய திரைப்படக் கதைகளோ டைட்டில் கார்டில் வரவில்லை. ஒரு வேளை நான் கவனிக்க வில்லையோ என்னவோ. அல்லது இயக்குனருக்கும் அம்னிஷியாவோ என்னவோ?

Tuesday, 5 February 2013

யார் யாரைக் காப்பாற்றுவது?



இப்போதுதான் ஒரு வழியாய் ஒரு தடை விவகாரம் முடிந்தது. அதற்குள் இன்னொரு விவகாரம் / அதாவது கமலுக்குப் பிறகு கடல். இஸ்லாமிய நண்பர்களின் கடமை முடிந்த பிறகு, இப்போது கிறித்தவ நண்பர்களின் கடமை தொடங்கியிருக்கிறது.
  • கடல் படத்தில் எத்தனையோ இடங்களில் அவர்களின் மனது புன்பட்டதாகவும் அதனால் அத்தனை இடங்களில் – கட் – செய்ய வேண்டுமாம். உங்கள் மனதுதான் புண்படுமா எங்கள் மனது புண்படாதா என்று கேட்பது போல இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பத்துப் பேர்... உண்மையில் காயப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. எதோ போராட்டம் செய்தால் நாலு பேரு நம்மைப் பத்தி தெரிந்து கொள்வார்கள் என்று போராரடினார்களோ என்னவோ? எனக்கு அவர்கள் போராட்டம் செய்ததைப் பற்றிக் கவலைப்பட வில்லை. அதையும் ஒரு செய்தியாக வெளியிட்டு வருகிற ஊடகங்களை நினைத்து வருத்தப் படுவதா அல்லது சிறு செய்திகளைக் கூட எல்லாருக்கும் தெரிவிப்பதை நினைத்து பெருமைப் படுவதா என்று தெரியவில்லை.

நம்மை கைல மாட்டிக்கிட்டு சாமி படுற கஷ்டம் இருக்கே. அதோடு சேர்த்து இப்போது ஆதி பகவானுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத். முன்பே இவர்களுக்குப் போட்டுக் காண்பித்து விட்டுதான் திரையிட வேண்டுமாம். காசு குடுக்காம படம் பாக்கிறதற்கு இப்படி ஒரு வழிய நம்மாளுங்க கண்டு பிடிச்சத நினைச்சா பெருமையா இருக்கு. நாம எதுவுமே கண்டு பிடிக்கலைன்னு இந்த உலகம் சொல்லப்டாது கேட்டிளா.
  • சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். நானும் கடவுள் பக்தி உள்ளவன்தான். இருந்தாலும் இந்தக் கேள்வியைக் கேக்காமல் இருக்க முடியலை. யாரு யாரைக் காப்பாத்துறது. கடவுள்தான் நம்மைக் காப்பாத்தானும். இங்கே நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தா எதோ நாமதான் கடவுளைக் காப்பத்துகிற வேலையில இறங்கியிருக்கிற மாதிரி தெரியுது. கடவுள் கடவுளைக் காப்பாத்திக்குவார். நம்ம நம்மளைக் காப்பத்துவோம். அது போதும். அதிகப் பிரசங்கித் தனமா மனுஷன் நான்தான் கடவுளைக் காப்பாத்துவேன்னு நின்னா அவன்தான் சாத்தான்.

எனவே எல்லா மத நண்பர்களே வீனாவுல சாமிய வம்புக்கு இழுக்காதிங்க. அப்புறம் சாமிக் குத்தமாயிரும். என்னை விட நீ பெரியவனான்னு சாமி நம்மைக் கண்ணைக் குத்திரும். புதுசு புதுசா ஏதாவது லெட்டர் பேட்ல அடிச்சு போலீசுக்குப் போறதுக்கு பதிலா எங்காவது வேலைக்குப் போனா வீட்ல இருக்கவுங்க சந்தோஷப் படுவாங்க. சாமியும் சந்தோஷப் படும். 

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இப்படியே போனா எந்தப் படத்துக்கும் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
                         """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சேட்டைக்காரன் - சேட்டையை தடை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""''

Monday, 4 February 2013

கமல், கடன், கருத்து



  • கமல் தான் கடன் வாங்கி படம் எடுத்ததாகவும் அதனை சொன்ன தேதியில் வெளியிட முடியாது போனதால் தனது இல்லத்தை இழக்கும் நிலை வந்திருப்பதாகவும், தமிழகத்தை விட்டு மதச் சார்பற்ற ஒரு மாநிலம் தேடுவதாக –காஷ்மீரிலிருந்து கேரளா வரை ஏதாவது ஒரு இடம் தேடப் போவதாவும் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்து மனமுடைந்த ரசிகர்கள் பணம் அனுப்பவதாகக் கேள்வி – ம்  ம் - ரசிகர்கள்!
  • கமல் அப்படி ஒரு இடம் தேடினால் அவர் சொன்ன இரு மாநிலங்களிலும் அவர் வசிக்க முடியாது. இரண்டுக்கும் உள்ள காரணங்கள் அவருக்கே தெரியும். எனக்குத் தெரிந்து அன்பும் அமைதியுமே உருவான, மதச்சார்பற்ற [!?] திரு. மோடி ஆட்சி செய்யும் இடமாக அது இருக்கலாம்! ஆனால் அங்கே போக அம்மையார் விட மாட்டார். வேறு எங்கே போக முடியும்? தேவையற்ற விரக்தியில் ஏடாகூடமாய் மீண்டும் தன் வாயைக் கொடுத்தே மாட்டிக் கொண்டார்.
  • சினிமா என்பது வெறும் தொழிலா அல்லது அதையும் தாண்டி அந்தக் கலைஞர்களுக்கு வேறு ஏதாவது பொறுப்பு என்று உள்ளதா என்பதைக் கலைஞர்கள் புரிந்து கொள்ளும் தருணம் என்பதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் இழப்பு, கடன் தொல்லை என்பதெல்லாம் சரியான வாதமா என்பது தெரியவில்லை. இது வெறும் தொழில்தான் என்றால் ஒவ்வொரு தொழிலிலும் எதிரிகள் தடைகள் உண்டு என்கிற விதத்தில் சில அணுகு முறைகளை மேற்கொள்வது அவசியம். இல்லை இது தொழில் இல்லை என்றால் அவர்களின் பொறுப்புகளை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். இரண்டு விதத்திலும் கமலின் நிலை என்ன என்பது குறித்த சந்தேகமே எழுகிறது. கிங்க்பிஷர் விமானங்கள் நஷ்டத்தில் ஓடுவதாகவும் அதனால் மஞ்சள் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்ற போது எல்லாரது உள்ளத்திலும் எழுந்த கேள்வி இதுதான் – உன்னைய யாரு ஓட்டச் சொன்னா? அதே கேள்வியை இப்போதும் கேக்கலாமல்லவா?
  • நீதிமன்றச் சர்ச்சையில் சிக்குவதில் நமக்கு உடன்பாடு இல்லைதான். பண இழப்பு என்பதைக் காரணம் காட்ட முடியாது – நாட்டின் ஒற்றுமையும் நாட்டு அமைதியும்தான் முக்கியம் என்று நீதிபதிகள் சுட்டிகாட்டி தடையை நீட்டித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கும், பின் வரும் சந்ததிக்கும் மிகப் பெரிய பேராபத்து காத்திருக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் பண இழப்பை மட்டுமே முன்னிருத்தியதாக எனக்கு நினைவு. என்ன நடக்கிறது  இங்கே!
  • சுமுகமாய் பிரச்சனை முடிந்திருப்பதாக சொல்கிறார்கள். இனிமேலாவது உலக நாயகன் உஷாராய் இருப்பார் என்று நம்புவோம். ரசிகர்கள் மகிழ்வார்கள்.
குறிப்பு:
என்னுடைய முந்தய பதிவைப் பார்த்து விட்டு என்னை ஒரு நண்பர் பிடி பிடி என்று பிடித்து விட்டார். ஏதோ நான் கமலின் ரசிகன் என்பது போலவும், அவருக்கு நான் ஏதோ கடன் கொடுத்து அது வராதே என்கிற கவலையில் தடை தவறு என்று நான் எழுதியதாக நினைத்து விட்டார். ஒரு வேளை அந்த தொனியில் அந்தப் பதிவு இருந்ததோ என்னவோ!
ஆனால் அதே சமயம் எந்த வித தொடர்பும் இன்றி ஒரு விடயத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்வதும், அதே கருத்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ‘சந்தர்ப்ப வாதியாக’ இல்லாமல் பதிவு செய்வதும் அவசியம். நமக்குத் தமிழ் பற்று அதிகம் இருப்பதினால் டேம் 999 ஐத் தடை செய்வது சரி என்றும், இன்னொரு படத்தைத் தடை செய்வது தவறு என்றும் சொல்வது சரி இல்லை என்றே படுகிறது. [ஆனாலும் இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் ஐ தடை சொல்வது சரி என்று எழுதியிருந்தேன். அதற்கான காரணம் வெறும் காழ்ப்புணர்ச்சியில் எடுக்கபட்ட படம் என்பதனால்].

அதிசயம் ஆனால் உண்மை. இட்லி வடையில் எப்போதும் இல்லாமல் திடிரென்று ‘சோ’ வின் சந்தர்ப்ப வாதத்தை எடுத்து விட்டிருக்கிறார்கள். அதில் சோவின் சந்தர்ப்ப வாதத்தை பற்றியா தி.மு.க. வின் சந்தர்ப்ப வாதமா என்று புரியவில்லை. அதற்குள் சோவின் பேட்டி - இரண்டு பக்கமும் சால்ரா அடிக்கும் சோ வைப் பார்க்க பாவமாய்த் தான் இருக்கிறது.

Sunday, 27 January 2013

தடை: விஸ்வரூப வெற்றி


கமல்ஹாசன்
ஒவ்வொரு திரைப் படம் எடுக்கும் போதும் 
ஏதாவது ஒரு சிக்கல், தடை என்று ஏடாகூடமாக 
மனிதன் மாட்டிப் போகிறார். 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆகுறதில்ல - ன்னு 
சொன்ன மனுஷனுக்குத் தான் இப்படி ஆகுது.

  • சண்டியர், ஹே ராம், விஸ்வரூபம் - வரிசையா வந்து மாட்டுது. ஒவ்வொன்றின் பின்புலத்திலும் உள்ள சிக்கல்கள் வெவ்வேறு என்றாலும், இந்த நேரத்தில் ஒரே ஒரு செய்திதான்.  திரைப்படங்களுக்குத் தடை என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதில்லை. 
  • திரைப்பங்களையே தடை செய்வதே நல்லதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். என்னைப் போல பல பிரபல அரசியல் வாதிகளும் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அது சாத்தியப் படாது என்பதனால் சில திரைப் படங்களை தடை செய்வோம் அல்லது சில வாரங்கள் தடை செய்வோம் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இது நல்ல எண்ணத்தினால் அல்ல - அரசியல் தந்திரம், மற்றும் வியாபார நஷ்டம், அரசியல் பழி வாங்கல் என்பதெல்லாம் இதன் பின் அடக்கம். 
  • இதில் கமல் 'நல்லவரா கெட்டவரா' என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு உட்பட்டதல்ல. இந்தத் திரைப் படத்திற்கு தடை சரியா இல்லையா என்பதுதான். டாம் படத்திற்குத் தடை என்ற போதும் எனது கருத்து இதுவாகவே இருந்தது. கேரளா அரசின் கொள்கை, அது விரிக்கும் வலை தவறு என்பது தெரிந்தாலும் அதற்கானத் தீர்வு என்பது படத்தை தடை செய்வதில் இல்லை, அல்லது தீர்வு அது இல்லை என்றே சொல்லியிருந்தோம்.
  • ஒரு படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் சுதந்திரம் இங்கே பாதுகாக்கப் பட்டு விடுமா? இந்தத் திரைப் படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று நினைத்து விட முடியுமா? அதுதான் உண்மையெனில் அயோத்திக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். அரசியல்வாதிகள் மக்களை ஒரு மாயையில் வைப்பதற்கு இது போன்ற உப்புச் சப்பில்லாத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் கருத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்ற ஒரு செய்தியை வெளியில் செய்து விட்டு மறைமுகமாய் தங்களது அரசு இயந்திரங்களை அவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுவார்கள். திரைப் படங்களைத் தடை செய்வதோடு நமது தார்மிகக் கடமை முடிந்து விட்டது என்று நாமும் ஒதுங்கிப் போவோம். இதைத் தானே அவர்கள் நினைக்கிறார்கள். இனி அடுத்த முறை தேர்தலில் இஸ்லாமிய நண்பர்களின் ஒட்டு ஒட்டு மொத்தமாய் மோடியின் சகோதரிக்கு கிடைக்கும்.
  • இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் என்ற ஒரு கேவலமான ஒரு படத்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்த போது அதில் நபிகளை மிகவும் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. அது எந்த விதமான தயாரிப்பும் இன்றி, அசிங்கமாக சித்தரிக்கப் பட்ட படம் என்பதில் அதன் தடையை நாம் நியாயப் படுத்த முடியும். எந்த விதமான காத்திர முகாந்திரமும் இன்றி கமலின் திரைப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. 
  • ஒரு படத்தில் ஒரு மதத்தவரை எப்போதும் திவிரவாதிகளாகக் காட்டுவது தவறு. ஆனால் ஒரு திரைப் படத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அப்படியே உண்மை என்ற அர்த்தம் இல்லை. அல்லது இந்திய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் படங்கள் வந்தால் அதற்கான எதிர்ப்புக் குரல் நிச்சயமாய் எல்லாரிடமிருந்தும் வரும். 
  • சரி ஒரு கேள்வி - இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரையும், கேவலமான பொறுக்கிகளாக, லஞ்சத்தில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகலாக காட்டும் திரைப் படங்கள் அனைத்தும் உண்மைதானே.   காவலர்கள் பெரும் கேடிகளா...அப்புறம் ஏன் எல்லாத் தமிழ் படங்களையும் தடை செய்யச் சொல்லி எந்த அரசியல்வாதியும் வரிந்து கட்டுவதில்லை?
  • எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களோடும் உடன்பாடு இருப்பதில்லை. கமலின் பல கருத்துக்கள் எனக்கு உடன்படாதவைகளே. பல திரைப் படங்களின் கருத்துக்கள், அதன் கருத்து இவைகளோடு கூட உடன் பாடு இல்லைதான். அதற்காக அந்த மனிதன் ஒரு கருத்தை சொல்லக் கூடாது என்கிற உரிமை நமக்கில்லை என்றே கருதுகிறேன். அதே சமயத்தில் அந்தக் கருத்தை எதிர்க்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதிர்ப்பு என்பது தடையில் இல்லை... 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நேரத்தில கமல் பாடின இந்தப் பாட்டை
பாக்கணும் போல இருக்கு,
"அடமேன்ட்டா நாங்க நடை போட்டா 
தடை போட நீங்க கவர்ன்மெண்டா 
தடா உனக்குத் தடா" 

இதே நேரத்தில் கமலைப் பார்த்து 
இந்தப் பாடலைப் பாட வேண்டும் போல இருக்கிறது.

"போனா போகுதுன்னு விட்டின்னா 
கேனன்னு ஆப்பு வப்பாண்டா"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு: 
பதிவு என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் கமல் பற்றிய பதிவு என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
[அவசரத்துல ஒழுங்கா எழுதலை என்பதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.]

தொடர்புடைய சில பதிவுகள் :

அன்பின் வன்முறை இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் பற்றியது 

டாம் படத்தை தடை செய்தது தவறு


Saturday, 19 January 2013

எனக்கு பொங்கல் இல்லை....


எனக்கு பொங்கல் இல்லை 


இரமன கிரி வாசன் 


என் இனம் அழிந்த வலி இன்னும் மிச்சமிருக்கிறது...

முள்வேலி முகாமில் உயிரை தவிர இழக்க ஏதுமின்றி
ஓடுங்கி கிடக்கும் என் சகோதரனையும் சகோதரியையும் 
நினைக்கையில் கரும்பு கசக்கிறது.

காவிரி தண்ணீருக்காய் காத்திருந்து காத்திருந்து கருகிப்
போன என் நெற்களஞ்சியம் மனசை அழுத்துகிறது ...

தலை சாய்ந்து கிடக்கும் வயற்வெளியெல்லாம் 
காங்கீரிட் கதிர்கள் முளைத்து ஸ்கொயர் பீட் இவ்வளவு
என்று வியாபாரத்திற்கு தயாராக நிற்கிறது.

உம்மன சாண்டிக்கு பென்னி குயிக்கே பரவாயில்லை 
என்கிற போது சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் மேல்
எனக்கு கோபம் வருகிறது.

கடற்கரையோரம் ஆண்டுகளை தாண்டி தொடரும் 
பட்டினிப்போராட்டத்தை நினைக்கையில் என் பொங்கல் பானை
பொங்க மறுக்குறது .

தரையில் தண்ணீர் இல்ல....
எம் கண்ணீரை வழித்து எடுக்க கூட மோட்டாருக்கு கரண்டு இல்லை...

உழவர்கள் எல்லாம் தினக்கூலியாக எம் உழவு மாடுகள் எல்லாம்
அடிமாடுகளாய் ஏலம் போல நீயும் நானும் எஸ் எம் எஸில் பொங்கல்
வாழ்த்து சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை எனக்கு...

இனமும் , மொழியும் , உழவும் அழிந்து கொண்டிருக்கையில்
ஏது உழவர் திருநாள் ? ஏது தமிழர் திருநாள் ? 

இரண்டு நாள் விடுமுறையும் , தமன்னாவின் நேர்காணலும்
எந்திரன் சினிமாவும் தான் பொங்கல் என நினைத்தால்
அதை நீயே கொண்டாடிவிட்டு போ......

எனக்கு பொங்கல் இல்லை....

                                                                             இரமன கிரி வாசன் 

********************************************************************
என்  வலையில் வெளியிட
இசைந்ததற்கு 
நன்றி 
அப்பு 
*********************************************************************






Monday, 14 January 2013

பொங்கல் வாழ்த்துகளா!


  • இந்த ஆண்டு வரிசையாய் புத்தாண்டு விழாக்கள். ஒன்று மாற்றி ஒன்று. முதல் புத்தாண்டு கடந்த டிசம்பர் 22 - ஆம் தேதி தொடங்கியது.  - மாயனில் மயங்கிப் போனவர்கள் கொண்டாடிய புத்தாண்டு அது. அதன் பிறகு உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினார்கள்.  என்ன வித்தியாசம் என்றால், மாயன் காலண்டரின் ஆண்டுக் கணக்கு உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அதனால் உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். ஆங்கிலப் புத்தாண்டும் உலகம்  முழுதும் கொண்டாடப் பட்டது. ஆனால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கூட கொண்டாட மாட்டார்கள். நமக்கு இன்னும் தை தானா - ஆண்டின் தொடக்கம் என்கிற கேள்வியே முதலில் வந்து நிற்கிறது.
  • எதுவாய் இருந்து விட்டுப் போகட்டும் பொங்கல் கொண்டாடுவதில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நல்லதுதானே!
  • நண்பர் ஒருவர் முகநூலில் பின்வரும் கருத்தை சொல்லியிருந்தார். இந்தியா முழுவதும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பிறகு இந்தியா முழுவதும் பத்திரிக்கைகள் அதை டெல்லிக்கும் உலகத்திற்கும் கொன்று சென்றது. ஆனால் ஈழத்தில் இறந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் டெல்லியைக் கூட எட்ட வில்லை.  
  • அது எப்படி எட்டும்? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள், கூடங்குளம் எதிர் நோக்கும் அபாயம், வரிசையாச் சுட்டுக் கொள்ளப்படும் தமிழ் மீனவர்கள் இவர்களைப் பற்றிய செய்தியைக் கூட வெளியிட மறுக்கும் தமிழ் பத்திரிக்கைகள், அல்லது இந்தியப் பத்திரிக்கைகள் இருக்கும் வரை, அது எங்கும் சென்று சேராது. ஒரு மீனவன் இறந்தால் அவன் தமிழ் மீனவன். இறந்தால் அவன் தமிழன். தமிழ் நாட்டு தமிழனைப் பற்றியே கவலைப் படாத டெல்லி எப்படி ஈழம் பற்றிக் கவலைப் படும்?
  • உழும் நிலம் வறண்டு நிற்கிற போது , இந்திய நீதி மன்றம் வரையறுத்து இருக்கிற தண்ணீரைத் தருவதற்குக் கூட கர்நாடகம் மறுத்து நிற்கிற அவலம் இந்த டெல்லியை எட்டாது. எட்டா உயரத்தில் இருக்கும் டெல்லியை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், வடிவேலு சொல்லுவது மாதிரி - இங்க இருக்குற தமிழ் நாட்டை எடுத்து அப்படியே டெல்லி பக்கத்துல வச்சுட்டா ரொம்ப சுலபமாக் கேட்கும்.
  • பொங்கல் கொண்டாடுவோம்.