உலகத்திற்கு நோக்கம் உண்டா நோக்கம் இல்லையா என்கிற விவாதம் நேற்று இன்று பிறந்ததல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒரு விவாதம்.
நமது கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. எல்லாம் ஏற்கனவே விவாதிக்கப் பட்டவைகள்தான்.
நம் நாக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பேசும். ஏனெனில், அதை எப்படியும் பயன்படுத்த நமக்குள்ள அறிவு பலம் கொடுக்கிறது.
அதுதான் அறிவின் பலவீனமும்.
அறிவின் வழி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.
ஏதாவது ஒரு இடத்தில் அறிவால் நிரப்பப் பட முடியாத வெற்றிடம் எப்போதும் இருக்கும்.
அதனை வெறும் வெற்றிடம் என்று சொல்பவர்கள் நோக்கம் இல்லை என்கிறார்கள்.
அதனை மிஸ்டரி என்று புரிந்து கொள்கிறவர்கள் ஒரு நோக்கத்தினால் ஒருவனால் படைக்கப் பட்டது என்று சொல்கிறார்கள்.
அந்த நோக்கம் இதுதான் என்று சொல்வதும்
அதை நிறைவேற்றாமல் இருப்பது பாவம் என்று சொல்கிற போதும்,
நோக்கம் கற்பிக்கிறவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக -
தனது ஆளுமையை அனைவர் மீதும் திணிக்கப் பார்க்கிறான்.
இது மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் - அறிவால் தானே தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் மனிதனை கட்டுப் படுத்தி சிறுவனாகவே பாவிக்கும் மனநிலை தவறு என்கிற நிலையில் - இது ஒரு கருத்தை மற்றவர் மீது திணிக்கும் மேலாதிக்கம் என்பதனாலும், நோக்கத்தையே மறுக்கும் நிலைக்கு நாம் கொணரப்படுகிறோம்.
இந்த அடிமை நிலையிலிருந்து நான் விடுபட -
நோக்கம் இல்லை என்றும் எல்லாவற்றையும் நமது அறிவால் அறிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.
ஆனாலும் எல்லாவற்றையும் அறிவால் விளக்க முடிய வில்லை.
நமது உடலைப் பற்றிய புரிதலும்,
இந்த உலகில் எந்திரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகமும்,
பரந்து விரிந்த கடலும்,
விண்ணைத் தொடும் இமய மலையும்,
அங்கிருந்து பார்க்கிறபோது அது கொடுக்கிற பயம் கலந்த வியப்பும்,
நம் உடலோடு உறவாடும் தென்றல் வருடும் சுகமும் -
மெல்லிசை கொடுக்கிற திளைப்பும்,
கவிதை கொடுக்கிற மகிழ்ச்சியும்,
நட்பு கொடுக்கிற ஆனந்தமும்,
அன்பு கொடுக்கிற திருப்தியும் -------- ........................................................
அறிவால் புரிந்து கொள்ள முடியுமா என்பதுதான் புரியவில்லை.
இயற்கை கொடுக்கிற இன்பத்துக்காகவே நாம் சுற்றுலா செல்கிறோம்.
வெறும் கட்டிடங்களைப் பார்ப்பது மிகவும் குறைவு...
மலையகங்களுக்குச் செல்வதும்,
நீர் வீழ்சிகளுக்குச் செல்வதும்,
கடற்கரைகளுக்குச் செல்வதும்,
இயற்கையின் இன்ப வனத்தில் நாம் நம்மை மறப்பதற்காகவும் - அது கொடுக்கும் கிளர்ச்சிக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் - பார்க்கலாம் - அனுபவிக்கலாம்....
அறிவால் இதில் பயனில்லை.
எழுத்தில் திளைப்பவனுக்கும் - கவிஞனுக்கும் அறிவு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் வெறும் அறிவு மட்டுமே ஒருவனை கவிஞனாக்கி விடும் என்பதை எந்த கவிஞனும் சொல்ல மாட்டான்.
கவிஞன் அறிவு கடந்தவன் -
அறிவால் அவ்வளவு பயனில்லை.
ஆனால் அறிவு இல்லையெனில்,
தெரிந்தவன் ஆள்பவனாகவும் தெரியாதவன் அடிமையாகவுக் இருக்க நேரிடும் என்பதை வரலாறு சொல்வதனால் அறிவின் செயல்பாட்டை அடியோடு மறுப்பதற்கும் இல்லை.
ஆனாலும் அறிவால் அனைத்தையும் அறிந்து கொள்ளவும் முடியாது -
வெற்றிடம் இல்லாமல் பேசவும் முடியாது.
மேலும்...
Saturday, 4 September 2010
Friday, 3 September 2010
உலகத்தின் நோக்கம் 5
சரி தவறு என்றால் அது அறம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகிறது.
அறம் என்பதை நிலை நிறுத்த நோக்கம் இல்லையென்றால் அது தேவை என்று சொல்வதும் கடினம்.
ஆனாலும் நமக்காகத் தான் நாம் அதை உருவாக்கிக் கொள்கிறோம் - என்றால் அதை மிகவும் மென்மையாகவே வலியுறுத்த முடியும்.
எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அப்படியெனில் பெரும்பான்மையின் அடிப்படியிலும் சரி தவறு என்பதை நிர்ணயம் சித்துவிட முடியாது. மெயன்ஸ்ட்ரீமுக்குள் வராத மக்களின் விருப்பமும், வாழும் வழி வகைகளும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் அவர்களும் மனிதர்கள் என்ற அளவிலாவது அவர்களின் விருப்பமும் சரியாகிறது. எந்த ஒரு தனி மனிதனின் விருப்பத்தையும் தவறு என்பது அதிகார போதையிலிருந்து வருவதாகவே இருக்கும்.
பணம் தான் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிற விதத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையைத் தான் எல்லாரும் முன் வைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்கா தன் நாடு தன் மக்கள், தன் வாழ்வு என்கிற விதத்தில் எல்லா நாட்டையும் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறது.
எனில் இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. கரியமில வாயு வெளியிடுவதைக் குறைப்பதற்கு அமெரிக்கா ஒரு போதும் முன்வராது. ஏனெனில் அதன் நிலைப் படி அது அவர்களின் வாழ்வின் வசதி வாய்ப்புகளைப் பாதிக்கும்.
ஏனெனில் எதற்கும் நோக்கம் இல்லாத பொழுது நாம் எதனை முன்னிறுத்தியும் பயனில்லை.
எனவே நோக்கம் இயற்கைக்கும் உண்டு என்கிற கட்டமைப்பில் இறங்க வேண்டுமோ என்பதுதான் மனதுக்குப் படுகிறது.
மேலும்...
அறம் என்பதை நிலை நிறுத்த நோக்கம் இல்லையென்றால் அது தேவை என்று சொல்வதும் கடினம்.
ஆனாலும் நமக்காகத் தான் நாம் அதை உருவாக்கிக் கொள்கிறோம் - என்றால் அதை மிகவும் மென்மையாகவே வலியுறுத்த முடியும்.
எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அப்படியெனில் பெரும்பான்மையின் அடிப்படியிலும் சரி தவறு என்பதை நிர்ணயம் சித்துவிட முடியாது. மெயன்ஸ்ட்ரீமுக்குள் வராத மக்களின் விருப்பமும், வாழும் வழி வகைகளும் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் அவர்களும் மனிதர்கள் என்ற அளவிலாவது அவர்களின் விருப்பமும் சரியாகிறது. எந்த ஒரு தனி மனிதனின் விருப்பத்தையும் தவறு என்பது அதிகார போதையிலிருந்து வருவதாகவே இருக்கும்.
பணம் தான் ஒருவனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிற விதத்தில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையைத் தான் எல்லாரும் முன் வைக்க விரும்புகிறார்கள்.
அமெரிக்கா தன் நாடு தன் மக்கள், தன் வாழ்வு என்கிற விதத்தில் எல்லா நாட்டையும் இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறது.
எனில் இயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. கரியமில வாயு வெளியிடுவதைக் குறைப்பதற்கு அமெரிக்கா ஒரு போதும் முன்வராது. ஏனெனில் அதன் நிலைப் படி அது அவர்களின் வாழ்வின் வசதி வாய்ப்புகளைப் பாதிக்கும்.
ஏனெனில் எதற்கும் நோக்கம் இல்லாத பொழுது நாம் எதனை முன்னிறுத்தியும் பயனில்லை.
எனவே நோக்கம் இயற்கைக்கும் உண்டு என்கிற கட்டமைப்பில் இறங்க வேண்டுமோ என்பதுதான் மனதுக்குப் படுகிறது.
மேலும்...
Thursday, 2 September 2010
உலகத்தின் நோக்கம் 4
நமக்கு நாமே சிலவற்றைக் கற்பித்துக் கொள்வோம்.
சில சரி பல தவறு என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வோம்.
சில சரி பல தவறு என்று அர்த்தம் கற்பித்துக் கொள்வோம்.
சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்கக்கூடாது.
கடந்தால் தவறு என்போம்.
அதற்கு அடுத்த நிலையில் தவறு என்பதைத் தாண்டி –
அதற்கு அடுத்த நிலையில் தவறு என்பதைத் தாண்டி –
அதைக் குற்றம் என்போம்.
குற்றத்தைக் கண்காணிக்க காவலர்களை நியமிப்போம்.
நமக்கு நாமே இவைகளை எல்லாம் கற்பித்துக் கொள்வதனால்
நமக்கு முன்னிரிமை தர வேண்டும்:
எனவே நமக்கு உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தி,
நாம் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க நீதிமன்றங்களை ஏற்படுத்துவோம்.
உரிமையை நிலை நிறுத்தியது போலவும் ஆச்சு குற்றங்களை குறைத்தது போலவும் ஆச்சு.
பின் என்ன செய்யலாம் - எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்,
உரிமையை நிலை நிறுத்தியது போலவும் ஆச்சு குற்றங்களை குறைத்தது போலவும் ஆச்சு.
பின் என்ன செய்யலாம் - எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவும்,
எல்லாரும் சமமாக மதிக்கப் படவும் வேண்டி அரசுகளை ஏற்படுத்துவோம் அல்லது அரசுகளின் வழி காவல்துறையையும் நீதிமன்றங்களையும் ஏற்படுத்துவோம்..
நாம் தனி மனிதர்கள் தான் ஆனாலும் நாம் விலங்குகளிலிருந்து மாறுபட்டு வாழ நாம் இந்த சமுதாய வாழ்க்கை முறைக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வோம்.
இதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.
இதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.
நான் நன்றாக இருக்க வேண்டும்.
அதற்காக இவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
அவ்வளவுதான் - இந்த உலகம் என்பது ஒன்றுமில்லாதது -
அவ்வளவுதான் - இந்த உலகம் என்பது ஒன்றுமில்லாதது -
அதை நான் படைத்துக் கொள்கிறேன்.
சிக்கல்கள் -
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
சிக்கல்கள் -
கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் - எது சரி தவறு என்பதை யார் நிர்ணயம் செய்வது?
எதனடிப் படையில் நிர்ணயம் செய்வது?
சரி தவறு என்பதை நமக்குள்ளேயே தேடுவோம். இயற்கை நமக்கு கொடுத்திருக்கிற வரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்வோம்.
மகிழ்ச்சி நமது வாழ்க்கைக்குத் தேவை - எனவே அதன் அடிப்படையில் சரி தவறை நிர்ணயம் செய்வோம்.
இதிலும் சிக்கல் என்னவென்றால் -
குறிப்பிட்ட ஒன்றுதான் எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக மகிச்சியைக் கொடுக்கும் என்று சொல்லிவிட முடியாது.
எனக்கு எது இன்பம் தருமோ அது உங்களுக்கு இன்பம் தராது.
அப்ப எப்படி எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக இது சரி தவறு என்று சொல்வது?
பெரும்பான்மையான மக்களுக்கு எது இன்பம் தருமோ அதை சரி என்போம்.
மற்றதை தவறு என்போம்.
மற்றதை தவறு என்போம்.
ஆனால் நாம் தனி மனித உரிமையையும் வலியுறுத்துகிறோம்.
எனவே எனக்கு ஒரு பெண்ணோடு வாழ்வது இன்பம் தரவில்லை பல பெண்களோடு வாழ வேண்டும் என்றால் அதைத் தவறு என்றோ மனித நோக்கத்திற்கு எதிரானது என்றோ சொல்லிவிட முடியாது - ஏனெனில் நோக்கத்தை நாம்தான் படைத்தோம் ஆனால் - உரிமையை நிலை நிறுத்தவும் வேண்டும்.
அல்லது தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவன் முடிவு செய்தால் - அதுதான் இன்பம் என்றால் என்ன செய்வது -
ஒரு ஆண் இன்னொரு ஆணோடு வாழ்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றால் அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது.
எந்த நோக்கத்தை வைத்து அதைத் தவறு என்று சொல்ல முடியும்?
முடியாது.
அப்ப அதையும் சரி என்போம்.
ஒட்டு மொத்தமாக எல்லாரையும் வெடி வைத்துக் கொள்வதுதான் எனக்கு இன்பம் என்றால் - அதுவும் தவறா?
அப்ப அதையும் சரி என்போம்.
ஒட்டு மொத்தமாக எல்லாரையும் வெடி வைத்துக் கொள்வதுதான் எனக்கு இன்பம் என்றால் - அதுவும் தவறா?
கவன ஈர்ப்புக்காகவும் எங்களது கோரிக்கைகளை சரி என்று என்றுக் கொள்ளவும் இப்படித்தான் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால் அதுவும் சரிதானே?
அப்ப இப்படி மாற்றி வைத்துக் கொள்வோம் -
மனித குலத்தை அழிக்கும் அனைத்தையும் தீவிரவாதம் என்றும், தவறு என்றும் சொல்லி அதை மிகப் பெரிய குற்றம் என்போம்.
மனித குலத்தை அழிப்பதா?
மனித குலத்தை அழிக்கும் அனைத்தையும் தீவிரவாதம் என்றும், தவறு என்றும் சொல்லி அதை மிகப் பெரிய குற்றம் என்போம்.
மனித குலத்தை அழிப்பதா?
திருமணம் என்பது ஒரு நிறுவனம் - நாம் ஏற்படுத்தியது.
ஓரினத்திருமணம் சரி - அதுவும் நாம் ஏற்படுத்தியது -
abortin செய்வதும் சரி.
ஏனெனில் அது தனி மனித உரிமை.
மரங்களை அழிப்பதும் சரி - ஏனெனில் அதுவும் நாம் இன்பமாக வாழ செய்கிறோம்.
கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக வெளிப் படுத்தி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டோம்.
கரியமில வாயுவை அளவுக்கு அதிகமாக வெளிப் படுத்தி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டோம்.
என்றாவது இப்படித்தான் ஆகும் அதனால் அது தவறில்லை என்கிறோம்.
இது தொடர்ந்து நடந்தால் உலகமே இருக்காதே அப்புறம் எப்படி மனித குலம் இருக்கும்.
Wednesday, 1 September 2010
உலகத்தின் நோக்கம் 3
அறிவாளியிடம், இதனடிப்படையில்
சில கேள்விகளை மட்டும் இப்ப முன் வைப்போம்.
மனிதனுக்கு நோக்கம் என்ற ஒன்று இல்லை என்றால்,
மனித வாழ்க்கையும் அர்த்தமற்றது.
எந்த விதத்திலும் நமக்கு அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது.
உறவுகள், அம்மா அப்பா, காதலன், காதலி, கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், எதுவமே அர்த்தமற்றது.
ஏனெனில் நாமாகத் தான் இந்த உறவுகளின் மீது அர்த்தத்தைத் திணிக்கிறோம். ஆக இதுவும் கற்பிதமாகிறது. உண்மைதானே?
தேசம், அல்லது நாடு, இனம் மொழி, மதம் - இவைகளும் கற்பிதம்தான்.
எல்லாம் கற்பிதம்தான் என்றால் எந்த விதத்தில் இவைகளை நாம் எதிர் கொள்வது?
ஏன் மக்கள் மொழிக்காக அடித்துக் கொள்கிறார்கள்?
ஏன் மதத்தின் பெயரால் சண்டைகள்?
சிலர் சொல்கிறார்கள், இதற்காகத்தான் இவைகளெல்லாம் கற்பிதங்கள் என்று நாம் சொல்கிறோம். அல்லது கற்பிதம் என்கிற உண்மையைக் கட்டுடைக்கிறோம்.
சரி - மனித இனத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை?
நாமும் இயற்கையின் வழி அதன் போக்கில் வந்தவர்கள் என்றால்,
நமக்கு மட்டும் ஏன் இந்த அறிவு சார்ந்த விவாதங்கள்?
ஒரு ஆடு புலியிடம் அடிபட்டால் அது இயற்கை என்று சொல்கிற நமக்கு,
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்தால் மட்டும் நமக்கு ஏன் வலிக்கிறது? இதுவும் இயற்கைதானே.
இதுவும் survival of the fittest தானே?
நாம் மட்டும் ஏன் மனித உரிமை பற்றி பேசுகிறோம்?
மனிதன் ஒன்றும் இல்லாதவன்தானே - அவன் விருப்பபடி வாழ அவனுக்கு உரிமையில்லையா?
அமெரிக்க ஏகாதிபத்திய அரசாக இருக்கிறது என்றால் இருந்து விட்டு போகட்டும். எதிர்கொள்ளத் திராணி உள்ள அரசு எதிர்கொள்ளட்டும். இல்லையென்றால் இருக்கிற வரைக்கும் உள்ளதைத் தின்று விட்டு 'விதி வந்தால் செத்து விட்டுப் போகிறோம்.'
உடனே அறிவாளி சொல்கிறார்:
அது கூடாது. மனிதர்கள் உயர்ந்தவர்கள். நாம் ஆடு மாடுகளைப் போல் அடித்துக் கொண்டு சாகக் கூடாது.
நாம் அறிவாளிகள். ஆறாம் அறிவு கொண்ட உயர்ந்த பிறவிகள்.
நாம் சேர்ந்து வாழ நமக்கென்று சில கட்டுக் கோப்புகளை நாமே விதித்துக் கொள்வோம்.
நமக்கென்று சில நோக்கத்தைக் கற்பித்துக் கொள்வோம்.
இயற்கைக்கு நாம் நோக்கம் கற்பிப்பது தவறு என்று சொல்லுபவர்கள் கூட இப்போது நமெக்கென்று ஒரு நோக்கத்தைக் கற்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்வோம்.
வேறு வழியில்லை எனவே சரி இருந்து விட்டுப் போகட்டும் என்று ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்.
நமக்கு பெரிய நோக்கம் என்று ஒன்று இல்லையென்றாலும் ஒரு சிறிய நோக்கத்தைக் கற்பித்துக் கொள்வோம். நாமெல்லாம் அடித்துக் கொள்ளாமல், ஒன்றாக வாழ சிலவற்றை சரி என்போம் சிலவற்றைத் தவறு என்போம்.
அதாவது கற்பிதம் என்றாலும் அதை நாம் கற்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
மேலும்...
சில கேள்விகளை மட்டும் இப்ப முன் வைப்போம்.
மனிதனுக்கு நோக்கம் என்ற ஒன்று இல்லை என்றால்,
மனித வாழ்க்கையும் அர்த்தமற்றது.
எந்த விதத்திலும் நமக்கு அர்த்தம் கற்பித்துக் கொள்ளக் கூடாது.
உறவுகள், அம்மா அப்பா, காதலன், காதலி, கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், எதுவமே அர்த்தமற்றது.
ஏனெனில் நாமாகத் தான் இந்த உறவுகளின் மீது அர்த்தத்தைத் திணிக்கிறோம். ஆக இதுவும் கற்பிதமாகிறது. உண்மைதானே?
தேசம், அல்லது நாடு, இனம் மொழி, மதம் - இவைகளும் கற்பிதம்தான்.
எல்லாம் கற்பிதம்தான் என்றால் எந்த விதத்தில் இவைகளை நாம் எதிர் கொள்வது?
ஏன் மக்கள் மொழிக்காக அடித்துக் கொள்கிறார்கள்?
ஏன் மதத்தின் பெயரால் சண்டைகள்?
சிலர் சொல்கிறார்கள், இதற்காகத்தான் இவைகளெல்லாம் கற்பிதங்கள் என்று நாம் சொல்கிறோம். அல்லது கற்பிதம் என்கிற உண்மையைக் கட்டுடைக்கிறோம்.
சரி - மனித இனத்தின் மீது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை?
நாமும் இயற்கையின் வழி அதன் போக்கில் வந்தவர்கள் என்றால்,
நமக்கு மட்டும் ஏன் இந்த அறிவு சார்ந்த விவாதங்கள்?
ஒரு ஆடு புலியிடம் அடிபட்டால் அது இயற்கை என்று சொல்கிற நமக்கு,
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடித்தால் மட்டும் நமக்கு ஏன் வலிக்கிறது? இதுவும் இயற்கைதானே.
இதுவும் survival of the fittest தானே?
நாம் மட்டும் ஏன் மனித உரிமை பற்றி பேசுகிறோம்?
மனிதன் ஒன்றும் இல்லாதவன்தானே - அவன் விருப்பபடி வாழ அவனுக்கு உரிமையில்லையா?
அமெரிக்க ஏகாதிபத்திய அரசாக இருக்கிறது என்றால் இருந்து விட்டு போகட்டும். எதிர்கொள்ளத் திராணி உள்ள அரசு எதிர்கொள்ளட்டும். இல்லையென்றால் இருக்கிற வரைக்கும் உள்ளதைத் தின்று விட்டு 'விதி வந்தால் செத்து விட்டுப் போகிறோம்.'
உடனே அறிவாளி சொல்கிறார்:
அது கூடாது. மனிதர்கள் உயர்ந்தவர்கள். நாம் ஆடு மாடுகளைப் போல் அடித்துக் கொண்டு சாகக் கூடாது.
நாம் அறிவாளிகள். ஆறாம் அறிவு கொண்ட உயர்ந்த பிறவிகள்.
நாம் சேர்ந்து வாழ நமக்கென்று சில கட்டுக் கோப்புகளை நாமே விதித்துக் கொள்வோம்.
நமக்கென்று சில நோக்கத்தைக் கற்பித்துக் கொள்வோம்.
இயற்கைக்கு நாம் நோக்கம் கற்பிப்பது தவறு என்று சொல்லுபவர்கள் கூட இப்போது நமெக்கென்று ஒரு நோக்கத்தைக் கற்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்வோம்.
வேறு வழியில்லை எனவே சரி இருந்து விட்டுப் போகட்டும் என்று ஒரு உடன்பாட்டிற்கு வருகிறார்.
நமக்கு பெரிய நோக்கம் என்று ஒன்று இல்லையென்றாலும் ஒரு சிறிய நோக்கத்தைக் கற்பித்துக் கொள்வோம். நாமெல்லாம் அடித்துக் கொள்ளாமல், ஒன்றாக வாழ சிலவற்றை சரி என்போம் சிலவற்றைத் தவறு என்போம்.
அதாவது கற்பிதம் என்றாலும் அதை நாம் கற்பித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
மேலும்...
Tuesday, 31 August 2010
உலகத்தின் நோக்கம் 2
அறிவாளி சொல்கிறார்:
இயற்கைக்கு நோக்கம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை, அதை நாமாகத் திணிக்கிறோம்.
எப்படி கடவுள் என்ற ஒன்றை நாம் கற்பிக்கிறோமோ அதுபோல இயற்கைக்கும் நாம் நோக்கத்தைக் கற்பிக்கிறோம்.
இயற்கை என்பது கல்லும் மண்ணும் சார்ந்த திடப் பொருள்.
consciousness என்பதோ அறிவு என்பதோ அல்லது அன்பு என்பதோ எதுவும் கிடையாது.
நாமாக இயற்கையைத் தாய் என்கிறோம்.
ஈர்ப்பின் படியோ அல்லது எப்படி வாழ முடியுமோ அப்படி அவைகள் இருந்தன. எனவே அதனடிப்படையில் உயிர்கள் வாழ்ந்த போது அவைகள் விதி முறைகளை உருவாக்கிக் கொண்டன. அல்லது - விதிமுறைகள் அதைத் தொடர்ந்து உருவாயின. அதாவது ஒரு விதியின் படி அவைகள் உருவாகவில்லை. அவைகள் உருவானதைத் தொடர்ந்து விதிகள் உருவானது.
எனவே இயற்கை என்பதும் நாமும் இருந்திருக்க வேண்டியதே இல்லை.
அதாவது நாம் இருப்பது - இருக்க வேண்டிய அவசியமில்லை - அதுவாக நடந்தது.
மரங்கள் ஏன் இருக்கின்றன?
அவைகள் இருக்கின்றன. அவ்வளவே?
மலைகள், ஆறுகள், தண்ணீர், மழை, எதற்கும் நோக்கம் இல்லை -
அவைகள் இருக்கின்றன எனவே அதற்கு நோக்கம் இல்லை.
ஆடு மாடுகள், விலங்குகள், இன்ன பிற உயிரினங்கள் இவைகள் எல்லாம் - survival of the fittest - டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதுவரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது.
அப்ப மனிதன் யாரு?
மனிதனும் அப்படித்தான்.
மனிதனும் ஒரு விலங்கினம் என்கிற ரீதியில், அவனும் அப்படியே.
எப்படி விலங்கினங்களுக்கு நோக்கமில்லையோ அப்படியே
அவனுக்கென்று ஒரு நோக்கம் இல்லை.
அப்படியெனில், மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை.
அவனுக்கும் நோக்கம் இல்லை.
இயற்கையின் மீது நாம் நோக்கம் கற்பிப்பது போல நமக்கு நாமே நோக்கத்தை கற்பித்து கொள்கிறோம்.
இந்த இடத்தில்தான் சிக்கலே.
நாமும் அதைத்தான் சொல்கிறோம். மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை. எனவே எந்தவிதத்திலும் நாம் இதை அழிக்கவோ, பரந்து விரிந்த உலகத்தை சொந்தம் கொண்டாடவோ அருகதையற்றவர்கள்.
ஆனாலும் ஏன் நாம்தான் உயர்ந்தவர்கள் போல எல்லாவற்றையும் நமக்குக் கீழ் கொண்டுவர முயல்கிறோம்?
சரி - இதற்குப் பின்னால் வருவோம்.
மேலும்....
இயற்கைக்கு நோக்கம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை, அதை நாமாகத் திணிக்கிறோம்.
எப்படி கடவுள் என்ற ஒன்றை நாம் கற்பிக்கிறோமோ அதுபோல இயற்கைக்கும் நாம் நோக்கத்தைக் கற்பிக்கிறோம்.
இயற்கை என்பது கல்லும் மண்ணும் சார்ந்த திடப் பொருள்.
consciousness என்பதோ அறிவு என்பதோ அல்லது அன்பு என்பதோ எதுவும் கிடையாது.
நாமாக இயற்கையைத் தாய் என்கிறோம்.
ஈர்ப்பின் படியோ அல்லது எப்படி வாழ முடியுமோ அப்படி அவைகள் இருந்தன. எனவே அதனடிப்படையில் உயிர்கள் வாழ்ந்த போது அவைகள் விதி முறைகளை உருவாக்கிக் கொண்டன. அல்லது - விதிமுறைகள் அதைத் தொடர்ந்து உருவாயின. அதாவது ஒரு விதியின் படி அவைகள் உருவாகவில்லை. அவைகள் உருவானதைத் தொடர்ந்து விதிகள் உருவானது.
எனவே இயற்கை என்பதும் நாமும் இருந்திருக்க வேண்டியதே இல்லை.
அதாவது நாம் இருப்பது - இருக்க வேண்டிய அவசியமில்லை - அதுவாக நடந்தது.
மரங்கள் ஏன் இருக்கின்றன?
அவைகள் இருக்கின்றன. அவ்வளவே?
மலைகள், ஆறுகள், தண்ணீர், மழை, எதற்கும் நோக்கம் இல்லை -
அவைகள் இருக்கின்றன எனவே அதற்கு நோக்கம் இல்லை.
ஆடு மாடுகள், விலங்குகள், இன்ன பிற உயிரினங்கள் இவைகள் எல்லாம் - survival of the fittest - டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதுவரைக்கும் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது.
அப்ப மனிதன் யாரு?
மனிதனும் அப்படித்தான்.
மனிதனும் ஒரு விலங்கினம் என்கிற ரீதியில், அவனும் அப்படியே.
எப்படி விலங்கினங்களுக்கு நோக்கமில்லையோ அப்படியே
அவனுக்கென்று ஒரு நோக்கம் இல்லை.
அப்படியெனில், மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை.
அவனுக்கும் நோக்கம் இல்லை.
இயற்கையின் மீது நாம் நோக்கம் கற்பிப்பது போல நமக்கு நாமே நோக்கத்தை கற்பித்து கொள்கிறோம்.
இந்த இடத்தில்தான் சிக்கலே.
நாமும் அதைத்தான் சொல்கிறோம். மனிதன் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை. எனவே எந்தவிதத்திலும் நாம் இதை அழிக்கவோ, பரந்து விரிந்த உலகத்தை சொந்தம் கொண்டாடவோ அருகதையற்றவர்கள்.
ஆனாலும் ஏன் நாம்தான் உயர்ந்தவர்கள் போல எல்லாவற்றையும் நமக்குக் கீழ் கொண்டுவர முயல்கிறோம்?
சரி - இதற்குப் பின்னால் வருவோம்.
மேலும்....
Monday, 30 August 2010
உலகத்தின் நோக்கம் 1
நாம் வாழும் உலகம், இயற்கை என்பது உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.
இயற்கை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் நல்லது.
அறிவியலாளர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்லும் அடிப்படைக் கருத்துக்களை யாரும் மறுக்கவும் முடியாது.
உலகம் எப்படித்தோன்றியது என்று அவர்கள் சொல்லும் கருத்துருவிலும், பரிணாமவாதத்திலும் நமக்கும் அடிப்படையில் உடன்பாடு உண்டு.
ஆனாலும் அதன் தொடர்ச்சிகள், அதன் விளைவுகள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது ஒரு புறம் இருந்தாலும்,
அது கொணரும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் நாம் முன் வைக்க நினைக்கின்றோம்.
இதனை மிகவும் விரிவாகவே மெய்யியலாலர்களும், இன்னும் அறிஞர்களும் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதித்து, பல விளைவுகளையும், எதிர் மறையான முடிவுகளையும் முன்வைக்கிறார்கள்.
அது நமக்குத் தேவையற்றது.
இக்கட்டுரையின் நோக்கம் மிகவும் அடிப்படையானது. இவ்வுலகில் நமது இருப்பின் பொறுப்புனர்வைப் பற்றி பேசுகிறது.
அதற்கான சில கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வளவே!
இயற்கைக்கு நோக்கம் ஒன்றும் இல்லை. அதுவாகத் தோன்றியது. அதுவாக இருக்கிறது. அதுவாக மறையும் - என்ற கொள்கையோடு பலர் நமது மத்தியில் இருக்கிறார்கள்.
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் படித்தவர்களும் உண்டு, படிக்காதவர்களும் உண்டு.
கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நெருப்புப் பிழம்பாய் இருந்தது பின் பிரிந்து
(எதிலிருந்து நெருப்பு வந்தது என்று கேட்கக் கூடாது)
அதன் பிறகு குளிர்ந்து, நீர் வந்து, மரங்கள் தோன்றி
அதன் பிறகு ஒன்று இரண்டு என உயிர்கள் தோன்றி, அது
பலதாய் பெருகி, இத்தகைய சூழ் நிலைகளுக்கு ஏற்ப
எதெல்லாம் ஈடு கொடுக்க முடிந்ததோ அவைகள் வாழ்ந்து -
பின் வாழ முடியாதவைகள் எல்லாம் மடிந்து -
இறுதியில்,
இயற்கையின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடிந்தவைகள் மட்டும் உயிர் வாழ்கின்றன.
அப்படி வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளைக் கடந்து மனித உயிர்கள் தோன்றி -
நாம் இன்று இருக்கக் கூடிய நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனடிப்படையில், பலர் தங்கள் வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
இதில் எதுவுமே ஒரு நோக்கத்தோடு நடை பெற வில்லை.
அதுவாய்த் தோன்றியது. அதுவே நடந்தது.
மனித உயிர்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது
இயற்கையின் நோக்கம் அல்ல.
காலப் போக்கில் அது நடந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நடந்ததே தவிர இதற்கு நோக்கம் கற்பிப்பது அபத்தம் என்று சொல்கிறார்கள்.
மேலும்....
இயற்கை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் நல்லது.
அறிவியலாளர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்லும் அடிப்படைக் கருத்துக்களை யாரும் மறுக்கவும் முடியாது.
உலகம் எப்படித்தோன்றியது என்று அவர்கள் சொல்லும் கருத்துருவிலும், பரிணாமவாதத்திலும் நமக்கும் அடிப்படையில் உடன்பாடு உண்டு.
ஆனாலும் அதன் தொடர்ச்சிகள், அதன் விளைவுகள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது ஒரு புறம் இருந்தாலும்,
அது கொணரும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் நாம் முன் வைக்க நினைக்கின்றோம்.
இதனை மிகவும் விரிவாகவே மெய்யியலாலர்களும், இன்னும் அறிஞர்களும் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதித்து, பல விளைவுகளையும், எதிர் மறையான முடிவுகளையும் முன்வைக்கிறார்கள்.
அது நமக்குத் தேவையற்றது.
இக்கட்டுரையின் நோக்கம் மிகவும் அடிப்படையானது. இவ்வுலகில் நமது இருப்பின் பொறுப்புனர்வைப் பற்றி பேசுகிறது.
அதற்கான சில கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வளவே!
இயற்கைக்கு நோக்கம் ஒன்றும் இல்லை. அதுவாகத் தோன்றியது. அதுவாக இருக்கிறது. அதுவாக மறையும் - என்ற கொள்கையோடு பலர் நமது மத்தியில் இருக்கிறார்கள்.
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் படித்தவர்களும் உண்டு, படிக்காதவர்களும் உண்டு.
கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நெருப்புப் பிழம்பாய் இருந்தது பின் பிரிந்து
(எதிலிருந்து நெருப்பு வந்தது என்று கேட்கக் கூடாது)
அதன் பிறகு குளிர்ந்து, நீர் வந்து, மரங்கள் தோன்றி
அதன் பிறகு ஒன்று இரண்டு என உயிர்கள் தோன்றி, அது
பலதாய் பெருகி, இத்தகைய சூழ் நிலைகளுக்கு ஏற்ப
எதெல்லாம் ஈடு கொடுக்க முடிந்ததோ அவைகள் வாழ்ந்து -
பின் வாழ முடியாதவைகள் எல்லாம் மடிந்து -
இறுதியில்,
இயற்கையின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடிந்தவைகள் மட்டும் உயிர் வாழ்கின்றன.
அப்படி வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளைக் கடந்து மனித உயிர்கள் தோன்றி -
நாம் இன்று இருக்கக் கூடிய நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனடிப்படையில், பலர் தங்கள் வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
இதில் எதுவுமே ஒரு நோக்கத்தோடு நடை பெற வில்லை.
அதுவாய்த் தோன்றியது. அதுவே நடந்தது.
மனித உயிர்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது
இயற்கையின் நோக்கம் அல்ல.
காலப் போக்கில் அது நடந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நடந்ததே தவிர இதற்கு நோக்கம் கற்பிப்பது அபத்தம் என்று சொல்கிறார்கள்.
மேலும்....
Sunday, 29 August 2010
முதலிடமா அல்லது கடைசி இடமா?
அதிகமாக நேசிக்கப்படும் உலகத் தலைவர்களில் மன்மோகன் சிங் முதலிடம் பெற்றிருப்பதாக - அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதில் கூத்து என்னவென்றால் உலக நாடுகளில் இந்தியாவிற்கு 78 -ஆவது இடமாம். இப்படி உள்ள நாட்டின் தலைவர் முதலாவது இடத்தைப் பெற்றால் - இந்தத் தலைவர் இந்த நாட்டிற்கு இருந்து என்ன பயன் - இல்லாது என்ன பயன்.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியல் எங்களிடம் இருக்கிறது என்ற போது தயவு செய்து வெளியிட வேண்டாம் என்றதற்காக இந்த முதலிடமா? -
ந்யூக்ளியர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதற்காக இந்த முதலிடமா?
அணு உலை சம்பந்தமான விபத்துகளுக்கான இன்சுரன்சை மிகவும் மலிவாக்கியதற்காக இந்த முதலிடமா?
இன்னும் இந்தியாவிடமிருந்து வேறு எதுவும் பெற வேண்டியிருக்கிறதா?
இதில் கூத்து என்னவென்றால் உலக நாடுகளில் இந்தியாவிற்கு 78 -ஆவது இடமாம். இப்படி உள்ள நாட்டின் தலைவர் முதலாவது இடத்தைப் பெற்றால் - இந்தத் தலைவர் இந்த நாட்டிற்கு இருந்து என்ன பயன் - இல்லாது என்ன பயன்.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பட்டியல் எங்களிடம் இருக்கிறது என்ற போது தயவு செய்து வெளியிட வேண்டாம் என்றதற்காக இந்த முதலிடமா? -
ந்யூக்ளியர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதற்காக இந்த முதலிடமா?
அணு உலை சம்பந்தமான விபத்துகளுக்கான இன்சுரன்சை மிகவும் மலிவாக்கியதற்காக இந்த முதலிடமா?
இன்னும் இந்தியாவிடமிருந்து வேறு எதுவும் பெற வேண்டியிருக்கிறதா?
Labels:
அரசியல்
Subscribe to:
Posts (Atom)