Tuesday, 6 September 2011

செல் வாங்கினால் மரண தண்டனை

மணி சங்கர அய்யர்  - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்; ஆனால் இறக்கும் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் - என்று மொழிந்திருக்கிறார்.

சுப்ரமணிசாமிக்கு இவர் எவ்வளவோ தேவலைதான். ஒரு விதத்தில் மரண தண்டனையே வேண்டாம் என்று கருதுவோர் இப்படி நினைப்பதில் தப்பில்லை. அப்படித்தான் மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் சொல்லுகிறார்கள். அதில் தப்பில்லை. சில பயங்கரவாதக் குற்றங்களுக்கான தண்டனை இப்படி இருப்பதில் தப்பில்லைதான். 

ஆனால் மீண்டும் மீண்டும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழக்கப்பட்டுள்ள இம்மூவருக்கும் என்பதைத் தான் தலைவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை - அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

 இரண்டு விதங்களில் நாம் இந்த மூன்று விவகாரங்களையும் பார்க்கலாம். ஒன்று அவர்கள் மூவரும் பயங்கர வாதிகள். எனவே அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்கான மரணதண்டனையை இறக்கும் வரையில் சிறையில் வைத்து தண்டனையை வழங்கலாம். பெரும்பாலனோர் அப்படித்தான் பார்க்கிறார்கள். இங்கேதான் இந்தப் போராட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வில்லை.

முக்கியமான விடயம் - அவர்கள் இரட்டை ஆயுள் தண்டனையோ அல்லது இறக்கும்வரை சிறையில் இருக்கும் தண்டனையோ அல்லது மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கான தண்டனையை செய்திருக்கிறார்களா என்பதுதான்.

தனது மக்களையே கொன்று குவித்த சதாம் ஹுசைன் வழக்கு கூட மிகவும் வெளிப்படையாக நடந்தது - கேட்கப்பட்ட கேள்விகள் - அவரின் சாட்சியங்கள் என்று வெளியில் வந்தது. அனால் இவ்வழக்கு அப்படி நடத்தப் பட வில்லை.

 கேள்விக்குட்படுத்த வேண்டிய தலைவர்கள் பலர் வெளியில் இருக்கும் போது இந்தத் தண்டனை தவறு என்கிற விதத்தில்தான்.

விடுதலைப் புலிகள் இப்படிக் கருணைப் பிச்சை கேட்கலாமா என்று சாமி கேட்குறாரு. அவர்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்பதுதானே வாதமே! அது கூட அந்த ... அரசியல்வாதிக்குப் புரியவில்லை.

ஆனால் இந்த வழக்கில், நடந்த உள் கூத்துகளைப் பற்றி கேட்டுக் கேட்டு நமக்குப் போரடித்துப் போய் விட்டது.

ஒரு செல் [பாட்டரி] வாங்கிக் கொடுத்ததற்காக யாராவது மரண தண்டனை கொடுப்பார்களா?

எதற்கென்றே தெரியாமல் வாங்கிக் கொடுத்தாலும் தண்டனையா? அவர் தெரிந்தே வாங்கிக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள் - அதற்காக தூக்குத்தண்டனையோ - இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? அப்படியே அதற்கென்று மரன தண்டனை வழங்கினால் எல்லாருக்கும் தெரிந்த விதத்தில் வழக்கு நடத்தி இதே தீர்ப்பை வழங்கலாமே.

  • இது இப்படியே போனால் நாளை நீங்கள் யாருக்காவது டீயோ அல்லது பன்னோ வாங்கிக் கொடுத்தால், ஒருவேளை சிறைப் பிடிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப் படலாம். 
  • அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவசர உதவி என்று ஒரு தமிழ் ஆள் என்று நின்றாலும், ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள் - ஏனென்றால் நல்ல தமிழ் பேசினால் அவன் விடுதலைப்புலி அல்லது தீவிரவாதி. அதனால்தான் சாமி அப்படித் தமிழ் பேசுகிறார். அப்படி எல்லாரையும் நினைக்க வைக்க விரும்புகிறார்கள்.
  • இப்படியே போனால் தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்கக் கூட நம்ம ஊர்ல ஆள் இருக்காது.
  •  தமிழகத்துல ஓரளவுக்கு தெரியாத ஆள் என்றாலும் முன்பெல்லாம் உதவி செய்தார்கள் - இனி அவசர உதவிக்குக் கூட நமக்கு பாஸ்போர்ட் - ஐடெண்டி கார்டு தேவைப்படும் - அப்படியே இருந்தாலும் உதவுவதற்கு ஆளிருக்காது.




No comments:

Post a Comment