Monday, 31 October 2011

கல்பாக்கம் பாதுகாப்பானதா?


கல்பாக்கம் அணு மின் நிலையம் பற்றிய சில செய்திகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக சிலர் எழுப்பும் வாதம் - கல்பாக்கம் ஒழுங்காக இயங்க வில்லையா?

பூவிலகின் நண்பர்கள் கடந்த இருபத்தி இரண்டாம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ரமேஷ் என்பவர் பேசிய காணொளியை கீழே இணைத்துள்ளேன். அதில், எப்படி மாநில அரசில் உள்ளவர்கள் அணுஉலை குறித்த செய்திகளைத் தெரிந்து கொள்ளலாமே இருந்தார்கள் என்றும், கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைத்த பொது பின்பற்றப் படாத முறைகள் குறித்தும், மாதிரி எவாகுவேஷன் செய்த போது ஏற்பட்ட குளறு படிகளும், சுனாமி வந்த போது வெளிவராத உண்மைகளும், பாதுகாப்பற்ற சூழலையும் சுனாமி வந்ததற்குப் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் சுனாமி அலெர்ட் வந்தபோது எப்படி மந்தமான சூழல் அங்கே இருந்தது என்பது பற்றியும் தனது அனுபவங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
அது மட்டுமல்ல,
கல்பாக்கம் சுனாமி எல்லைக்குள் வராது என்று சொல்ல முடியாது. மேலும் எரிமலைக் குழம்புகள் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்பதும், அந்த எல்லைக்கு அருகில் கல்பாக்கம் இருக்கிறது என்கிற புதிய தகவலையும் தருகிறார்.
கொஞ்சம் ஸ்லோவான பேச்சுதான் ... ஆனால் தகவல்கள் அவசியமானவையே.






புகழேந்தி அவர்களின் உரை..


2 comments:

  1. @"என் ராஜபாட்டை"- ராஜா

    நாம் ஒன்று நினைக்க இன்னொன்று நடக்கிறது

    ReplyDelete
  2. விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்கு நன்றி அப்பு.

    ReplyDelete