உலகத்தின் உயிர் மூச்சாக இருப்பது தண்ணீர்.
நீரின்று அமையாது உலகு -
எல்லாம் எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் யாரும் அதைக் காப்பதற்கான வழிகளை கடைப் பிடிப்பதாகத் தெரியவில்லை.
தண்ணீர் பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது?
மக்கள் தொகைப் பெருக்கமா?
அது சும்மா.
அது கையாலாகாத அரசுகள் சொல்லும் விளக்கம்.
சில பொருளாதார வல்லுனர்களும் சொல்கிறார்கள் - அவர்களுக்கான் பதிலை வேறு சில நிபுணர்கள் சொல்லுவதால் நமக்கு எதற்கு அந்த வேலை.
சென்னை - யில், மும்பையில், பெங்களூருவில் என்று எல்லா பெரிய நகரங்களிலும் பற்றாக்குறை.
மக்கள் ஒரு சில இடங்களிலே வந்து குவிவதற்கு யார் காரணம்...
ஒரு சில நகரங்களில் மட்டும் வேலைக்கான வாய்ப்புகள் பெருகும் பொது மக்கள் அங்கேதான் வருவார்கள்.
இருக்கிற இடங்களிலே வேலைக்கான் வாய்ப்பையும், நகரங்களில் கிடைக்கிற வசதிகள் எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி செய்யாமல், சென்னையை நோக்கி மக்கள் வருகிறார்கள் என்றால் யார் தவறு?
சென்னையைத்தான் தொழில் அதிபர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லலாம். சென்னையில் மட்டும் சாலை வசதி இருந்தால், சென்னை மட்டுமே அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தால் என்ன செய்வார்கள்.
தமிழக அரசுதான் சிவப்புக் கம்பளம் விரித்து சென்னைக்கு வரவேற்கிறதே?
செம்பரம்பாக்கம் நீருற்றி - லிருந்து யார் நீரை உறிஞ்சு எடுக்கிறார்கள். நீங்களே வரவேற்று, நீரை உறிஞ்சும் அதிகாரத்தைக் கொடுத்து - எத்தனை பேருக்கு அதனால் பயன்....
அரசை ஏமாற்றுகிறார்கள், தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்கள்..
வருகிற தொழில் நிருவனஞளை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பிரித்து விடுங்கள்... சாலைகளை இணையுங்கள்..
அதை விட்டுட்டு ...
நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலையை மாற்ற வேண்டும்....
மழைக் காலங்களில் நீரை சேமிக்கும் பழக்கம் நமக்கு உருவாக வேண்டும்.
ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்த குளம், குட்டைகள், கண்மாய், ஏரி, இவைகளெல்லாம் மீண்டும் உருவாக்கப் பட வேண்டும்.
மழை குறைந்து விட்டது.
ஏன் குறைந்தது?
மரங்கள் இல்லை...
நாம் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது.
குடிக்கத் தண்ணீர் இல்லை என்கிற போதுதான் நாம் யோசிப்போம்..
அதுவரை என்ன செய்யலாம்....
தேவையில்லாமல் தண்ணீரை விரயம் செய்யலாம்..
No comments:
Post a Comment