Wednesday, 4 January 2012

முதல் நாள்

முதல் நாள் மழை பெய்தால் 
வருடம் முழுதும் மழை பொழியுமாம் 
செழிப்பாய் இருக்குமாம் நாடு
– பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

முதல் நாள் அழுதால் 
வருடம் முழுதும் அழுவோமாம். 
மனது சொல்லுகிறது.

ஆனால்
முதல் நாள் குடித்தால் 
வருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ
முதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால் 
வருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று 
மனதும் சொல்ல மறுக்கிறது 
அரசும் சொல்ல மறுக்கிறது.


நாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா?
நாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா?


3 comments:

  1. வருட முதல்நாள் விடுப்பும்,குடியும் இப்போது ஒரு முக்கியமான சடங்காகிவிட்டது. குடிக்காதவர்கள் தேசத் துரோகிகள் என சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. பெயரில்லா5 January 2012 at 15:36

    அப்பு!
    வெச்சிட்டியே ஆப்பு!

    ReplyDelete
  3. @பெயரில்லா

    யாரு ஆப்பு வைச்சா நானா?

    இந்த ஆப்பு பின்னூட்டத்தைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.
    இப்பதான் வந்திருக்கு.

    உங்க பேரு தெரிஞ்ச
    சரியா வைக்கலாம்.
    அதுக்கு வழி இல்லாம பண்ணிட்டிங்க...
    அதுனால தப்பிட்டிங்க..

    ReplyDelete